விலை உயர்ந்த சந்தனத்திற்கு மாற்றாக இதை பயன்படுத்தினால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா? இதைக் கூட தெரிஞ்சுக்காம போயிட்டோமே!

sandle-jathikkaai
- Advertisement -

சந்தனம் நம்முடைய முக மற்றும் சரும பராமரிப்பிற்கு நிறையவே நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு மூலிகை பொருளாக இருக்கிறது. இந்த சந்தனத்தின் ஒரிஜினல் விலை என்பதோ மிக அதிகம். ஆனால் இப்போது கடைகளில் கிடைக்கப்படும் இந்த சந்தனங்கள், சந்தன வில்லைகள் ஒரிஜினல் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சந்தனத்திற்கு ஈடு இணையாக இருக்கக்கூடிய இந்த ஒரு பொருள் மூலிகையின் ராஜாவாக செயல்படுகிறது. இது ரொம்பவும் விலை மலிவானதும் கூட! அத்தகைய அற்புதமான மூலிகை ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக சந்தனத்தை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்வதால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும் என்று கூறப்படுவது உண்டு. குளிர்ச்சி பொருந்திய இந்த சந்தனம் சரும பராமரித்துக்கும், பெருமளவு உதவி செய்கிறது. முகக்கருமை, கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையங்கள், முகப்பருக்கள் போன்றவற்றை எளிதாக குணப்படுத்தக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

- Advertisement -

சந்தனம் நறுமண பொருளாக மட்டுமின்றி அழகு தரும் ஆரோக்கிய பொருளாகவும் இருக்கிறது. இத்தகைய சந்தனத்தின் விலை எல்லோராலும் வாங்கும் அளவிற்கு இல்லாததால், அதற்கு ஈடு இணையாக இருக்கக் கூடிய இந்த ஒரு பொருளை பயன்படுத்தலாம். இதை ஜாதிக்காய் என்பார்கள். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் எளிதாக கிடைக்கக் கூடிய இந்த ஜாதிக்காய், மகத்துவம் மற்றும் மருத்துவம் நிறைந்த ஒரு மூலிகை பொருளாகும்.

ஜாதிக்காய் அழகு பொருளாக மட்டுமின்றி, உடலுக்கு உள்ளேயும் கிருமிகளுக்கு எதிராக செயல்படக் கூடிய ஆற்றல் நிறைந்தது. பல்வேறு விதமான நோய்களை குணமாக்கக்கூடிய சக்தியும் இதற்கு உண்டு. சந்தனத்திற்கு இணையாக ஜாதிக்காய் குளிர்ச்சி பொருந்தியதாக இருக்கிறது எனவே இதனை சந்தன கல்லில் இழைத்து கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கும் இடங்களில் தடவி வந்தால், ஒரு வாரத்தில் கருவளையம் மறைந்து கண்கள் குளிர்ச்சியுற்று பளிச்சிடும்.

- Advertisement -

நரம்பு மண்டலத்தை சரி செய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. இதில் இருக்கும் மெக்னீசியம், மாங்கனிசு, தாமிரம், தாதுக்கள், வைட்டமின் பி1, பி6 ஆகியவை பல்வேறு பிரச்சனைகளை நமக்கு உடல் முழுவதும் சீர் செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு பாலியல் உணர்வை மேம்படுத்தக்கூடிய ஆற்றலும் உண்டு என்கிறது ஆயுர்வேதம்! இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்கிறது. மன அழுத்தம் குறைத்து இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது.

கண் சோர்வு, கண் அலர்ஜி, கண்களை சுற்றி இருக்கும் கருமை, முகத்தில் இருக்கும் வலி நிறைந்த முகப்பருக்கள் ஆகியவற்றை விரைவாக குணப்படுத்தக் கூடிய ஆற்றல் ஜாதிக்காய்க்கு உண்டு. இந்த ஜாதிக்காயை பவுடர் போல அரைத்து முகம் முழுவதும் தடவி காய விடலாம். மேலும் இதனை கண்களை சுற்றி பூசுவதாலும் கண் பார்வை தெளிவடைந்து கண் சோர்வு நீங்கும். ஜாதிக்காயின் கனி ஊறுகாய்க்கு பயன்படுத்தப்படுகிறது. இக்கனியின் விதை தான் காயாக மூலிகை மருந்தாக கிடைக்கப் பெறுகிறது. எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய மூலிகை பொருட்களில் ஒன்றாக இருக்கக் கூடிய இந்த ஜாதிக்காய், வயிற்றுப் பிரச்சனைகளை விரைந்து சரி செய்யக் கூடிய ஆற்றலையும் பெற்றுள்ளது. இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்துள்ள ஜாதிக்காயை கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பது நல்லது தான்.

- Advertisement -