தமிழ்நாட்டில் பெண்கள் எதற்காக பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு செல்கிறார்கள் என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால் மெய்சிலிர்த்துப் போவீர்கள்! ஆச்சரியப்பட வைக்கும் தமிழர்களின் கண்டுபிடிப்பு.

women6
- Advertisement -

அறிவியலில் எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே கடல்வழி மார்க்கத்தை கண்டுபிடித்தது தமிழர்கள் என்ற உண்மையை சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்கள் கடல் வழியாக பயணம் செய்து 2500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அயல் நாட்டிற்கு சென்று தங்களுடைய வாணிபத்தை மேற்கொண்டார்கள் என்பதற்கு வரலாற்றுரீதியாக நிறையவே சான்றுகள் உள்ளது.

aamai

இப்படி தமிழர்களுக்கு கடல் வழியை காட்டிக்கொடுக்க உதவியாக இருந்த அந்த உயிரினம் என்ன தெரியுமா? ஆமை, ஆமையால் எப்படி கடல்வழிப் பயணத்தை தமிழர்களுக்கு காட்டிக் கொடுக்க முடிந்தது. சரி, அப்படியே ஆமை கடல்வழிப் பயணத்தை தமிழர்களுக்கு காட்டிக் கொடுத்தாலும், தமிழ்நாட்டுப் பெண்கள் பிரசவத்திற்கு அம்மா வீட்டுக்கு செல்வதற்கும், இந்த ஆமைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. இந்த கேள்விகளுக்கான தெளிவான விளக்கத்தை கொடுப்பதற்காகவே இந்த பதிவு.

- Advertisement -

நிலத்திற்கும் கடலுக்கும் உள்ள தொடர்பை ஏற்படுத்தி தரக்கூடிய உயிரினம் தான் இந்த ஆமை. ஆமைகளில் இரண்டு வகை உண்டு. நிலத்தில் வாழக்கூடிய மூர்க்க குணம் கொண்ட ஆமைகள். இவைகளுக்கு கால்கள் உண்டு.

aamai1

கடலில் வாழக்கூடிய கடல் ஆமைகள் இரண்டாவது வகை. கடல் ஆமைகளுக்கு கால்கள் கிடையாது. இறக்கைகள் மட்டுமே உண்டு. அதுமட்டுமில்லாமல் இந்த ஆமைகள் மிகவும் சாதுவான குணம் கொண்டவை. இந்த ஆமைகள் தமிழர்களுக்கு கடல்வழி மார்க்கத்தை எப்படி வழிகாட்டி இருக்கும்.

- Advertisement -

பொதுவாகவே கடலின் நீரோட்டம் பருவ நிலையை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஆமைகள் ஒரு சில பருவ காலத்தில் மட்டுமே தன்னுடைய இறையைத் தேடி கடலுக்குள் நீண்ட தூரம் பயணம் செய்யும். அப்படி பயணம் செய்யும் போது இந்த ஆமைகள் நீந்துவது கிடையாது. கடல் ஆமைகள் கடலின் நீரோட்டத்தில் தானாகவே தன்னை இணைத்துக்கொண்டு தானாகவே செல்லத் தொடங்கும். அதாவது நீர் போன போக்கில் ஆமைகளும் செல்லும்.

aamai2

இந்த ஆமைகளின் மேல் RFIF என்ற செயற்கைக்கோள் சாதனத்தை பொருத்தி இந்த ஆமைகள் சென்ற வழியை பின்தொடர்ந்து தான் கடல்வழி மார்க்கத்தின் மூலம் பல நாடுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மலேசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தோனேசியா மியான்மர் போன்ற பல நாடுகளில் இருக்கக்கூடிய கடற்கரை துறைமுகங்கள் அனைத்தும் ஆமைகளின் கால்தடம் பட்ட இடங்கள் தான். இவையனைத்தும் ஆராய்ச்சியாளர்களால் தொழில்நுட்ப வசதியோடு கண்டுபிடிக்கப்பட்டது.

- Advertisement -

kadal

ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த கடல் வழி மார்க்கத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, இந்த இடங்களில் எல்லாம், தமிழர்கள் சென்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாணிபம் செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம். இந்த ஆமைகளை வைத்து கண்டுபிடிக்கப்பட்ட உலக நாடுகளில் இருக்கக்கூடிய ஊரின் பெயர்கள், நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரத்தில் தமிழர்களின் பண்பாடும், தமிழும் கலந்துள்ளது என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.

kadal

ஆக இந்த ஆமை வழி பயணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே, நம்முடைய தமிழர்கள் ஆமையை வைத்து, கட்டுமர பயணம்செய்து, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வெளிநாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்து உள்ளார்கள் என்பதற்கு இதுவே ஒரு சான்று. (உலகம் முழுவதும் 46,000 ஊர்களின் பெயர்கள், தமிழ் பெயரில் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.)

aaru

இந்த கடல் ஆமைகளுக்கு விசேஷ குணம் இயற்கையாகவே உண்டு. ஆமைகள் தான் பிறந்த இடத்தை எப்போதும் மறக்கவே மறக்காது இரை தேடுவதற்காக பல ஆண்டுகாலம் நீண்ட தூரம் கடலில் பயணம் செய்தாலும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக, நீரோட்டத்தை தன் நினைவில் வைத்துக்கொண்டு மீண்டும் தான் பிறந்த இடத்திற்கே வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது இந்த கடல் ஆமையின் குணம்.

aamai3

இந்த விலங்கினத்தை கொண்டுதான், தமிழர்களும் பிரசவத்திற்கு தன் தாய் வீட்டிற்கு வர வேண்டும் என்ற பழக்கத்தை கொண்டு வந்துள்ளதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றது. தொன்று தொட்டு வாழ்ந்து வந்த தமிழினம் விலங்கினங்களை வைத்து தங்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றி வந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் பெண்கள் அம்மா வீட்டிற்கு வந்து பிரசவம் பார்ப்பதற்கு, இந்த கடல் வாழ் ஆமைகளின் குணமும் ஒரு காரணம் தான்.

baby

இன்று சென்னையில் பெசன்ட் நகர் என்று சொல்லப்படும் இடம்தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆமைகள் வந்து முட்டையிடும் ‘ஆமையூர்’ என்று இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. இதற்கான குறிப்புகளும் வேலூர் கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையார் ஆறு கடலில் கடக்கக் கூடிய இந்த ஆமையூர் தான் தற்போது மருவி திருவான்மையூர் என்று அழைக்கப்படுகின்றது. எந்த ஒரு தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் ஆமையை வைத்து முதல் முதலாக கடல்வழி மார்க்கத்தை கண்டுபிடித்த பெருமை தமிழர்களையே சார்ந்தது என்று நினைக்கும்போது கொஞ்சம் மெய்சிலிர்க்க தான் செய்கின்றது.

- Advertisement -