முகத்திற்கு கடலை மாவு பயன்படுத்துபவர்கள் இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க, நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அழகு ஆளை அள்ளும்! இத பண்ணினா எல்லா சரும பிரச்சனைக்கும் ஒரே வழியில் குட் பை சொல்லலாமே!

kadalai-maavu-face
- Advertisement -

முகத்திற்கு கடலை மாவு பயன்படுத்துபவர்கள் அதை பல்வேறு பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவதை பார்த்திருப்போம். கடலை மாவு போட்டு குளித்து வந்தாலே சருமம் பளபளன்னு மின்னும் என்று நம் முன்னோர்கள் கூற கேட்டிருப்போம். சோப்பிற்கு பதிலாக கடலை மாவை மட்டுமே தேய்த்து குளிப்பவர்களும் உண்டு. இத்தகைய சரும மினுமினுப்பை தரக்கூடிய கடலை மாவுடன் இந்த பொருளை சேர்த்து இப்படி செய்து பாருங்கள்.

இனி எல்லா விதமான சரும பிரச்சனைக்கும் ஒரே வழியில் குட் பை சொல்லி விடலாம். தொடர்ந்து வாரம் ஒருமுறை இதை செய்து வந்தால் உங்களுடைய மேனி தகதகன்னு தங்கம் போல ஜொலிக்க ஆரம்பிச்சிடும். பத்து வயது குறைந்தது போல இளமையான தோற்றமும் தரக்கூடிய இந்த அற்புதமான எளிய அழகு குறிப்பு ரகசியத்தை இனி தொடர்ந்து பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தங்கம் போல ஜொலிக்கிற அழகு யாருக்குத் தான் வேண்டாம்? எப்போதும் நம்முடைய முகத்தை பராமரித்து கொண்டே இருக்க முடியாது. நமக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு வேலையில் முகத்தை எப்படி கவனிப்பது? என்று அங்கலாய்ப்பவர்களுக்கு இந்த ஒரு ரெசிபி ரொம்பவே உபயோகமாக இருக்கப் போகிறது.

வாரம் ஒரு முறை இதை செய்து வாருங்கள், ரொம்ப நேரம் கூட எடுக்காது, பத்து நிமிடம் போதும். இதற்கு முதலில் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கடலை மாவுடன் பேஸ்ட் போல வரும் அளவிற்கு வேப்பிலையை சாறு எடுத்து சேர்க்க வேண்டும்.

- Advertisement -

வேப்பிலையை அரைக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை, உரலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இடித்துக் கூட நீங்கள் சாறு எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை எடுக்க வேண்டும். கற்றாழை மடலை நன்கு சுத்தம் செய்து கழுவி உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து நான்கைந்து முறை தண்ணீர் விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து பிறகு அதை உரலில் இட்டு இடித்தால் பசை போல நமக்கு கிடைக்கும். இந்த பசை தான் நமக்கு ரொம்பவே முக்கியமான ஒன்று, எனவே பசையுடன் அப்படியே கடலை மாவில் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இனி உங்க தலையில் ஒரு நரைமுடி கூட இருக்கவே இருக்காது. என்னனா நீங்க வீட்டில் வேண்டாம்ன்னு தூக்கி போடுற இந்த பொருளை வைச்சு கொஞ்சம் கூட செலவே இல்லாம முடியை கருக்கருன்னு மாத்தலாம் தெரியுமா?

பிறகு இதை முகம் முழுவதும் நன்கு தடவி, கழுத்து பகுதிகளிலும் தடவி உலர விட்டு விடுங்கள். 10 நிமிடத்தில் நன்கு உலர்ந்து விடும். அதன் பிறகு ஒரு ஈரத்துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் குளித்து முடித்துவிட்டு கூட செய்யுங்கள், தவறே இல்லை. அதன் பிறகு மெதுவாக முகத்தை காட்டன் துண்டால் ஒற்றி எடுத்து ஈரத்தை போக்குங்கள். அவ்வளவுதான், இதே மாதிரி நீங்கள் வாரம் ஒரு முறை மட்டும் செஞ்சு பாருங்க, முகத்தில் இருக்கும் எந்தவிதமான சரும பிரச்சனைகளும் காணாமல் மாயமாய் மறைந்து போயிருக்கும். முகமும் தொட்டாலே வழுக்கி கொண்டு போகும் அளவிற்கு ஷைனிங்காக மாறி இருக்கும். முக சருமம் இறுகி பளபளன்னு பத்து வயது குறைந்தது போல மின்னும்.

- Advertisement -