கடன் அடைய வருமானம் அதிகரிக்க தீப வழிபாடு

kadan adaiya
- Advertisement -

கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் கடன் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. யாரை கேட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகையாவது கடனாக வைத்திருப்பார்கள். கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நாம் நினைத்தாலும் நம்முடைய சூழ்நிலை நம்மை கடன் வாங்குவதற்குரிய நிலைக்கு ஆளாக்கிவிடும். அப்படி நாம் கடனை வாங்கிய பிறகு அந்த கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்னும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமையில் எந்த தீபத்தை ஏற்றி வழிபட கடன் அடைப்பதற்குரிய வழிகள் பிறக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கடன் ரீதியான பிரச்சினைகள் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அவருக்கு செவ்வாய் பகவானால் ஏதாவது தோஷம் ஏற்பட்டு இருக்கலாம். அப்படி இல்லை என்றால் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்காமல் இருக்கலாம். ஒருவருக்கு வருமானம் நல்லவிதமாக இருந்தால் அவருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்காது என்றுதான் கூற வேண்டும்.

- Advertisement -

அந்த வருமானத்திற்குரிய தெய்வமாக தான் நம் மகாலட்சுமி தாயாரை நினைக்கிறோம். அதனால்தான் ஒருவர் கடன் வாங்குகிறார் என்றால் அவருக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்க வில்லை என்று அர்த்தம். இப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும் அதே சமயம் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்கவும் கடன் அடையவும் வருமானம் பெருகவும் செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

இந்த வழிபாட்டை செவ்வாய் பகவானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். இதை நாம் பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும். இதற்கு முதலில் நமக்கு பெரிய அகல் விளக்கு ஒன்று தேவைப்படும். முதல் நாளே அதை கடையிலிருந்து வாங்கி வந்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதே போல் நாட்டு மருந்து கடைகளில் மருதாணி விதைகள் கிடைக்கும். அதையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிலேயே மருதாணி செடி இருக்கும் பட்சத்தில் நாம் நேரடியாக மருதாணி விதைகளை பறித்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று காலை செவ்வாய் ஹோரை அதாவது ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் வீட்டு பூஜை அறையில் இந்த அகல் விளக்கை எடுத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து ஒரு தாம்பாலத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த அகலில் இலுப்ப எண்ணையை ஊற்ற வேண்டும். இந்த இலுப்பை எண்ணெயில் சிறிது மருதாணி விதைகளை போட வேண்டும். அடுத்ததாக இதில் மூன்று டைமண்ட் கற்கண்டையும் போட வேண்டும். இதில் நாம் போட்டு ஏற்ற வேண்டிய திரியானது தாமரை தண்டு திரியாக இருக்க வேண்டும்.

தாமரை தண்டு திரியை நன்றாக திரித்து இந்த எண்ணையில் போட்டு பிறகு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி நாம் தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய குலதெய்வத்தை மனதார நினைத்து விரைவிலேயே வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டும் என்றும் கடனை திருப்பித் தருவதற்குரிய வருமானமும் வழியும் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபமானது குறைந்தது ஒரு மணி நேரம் ஆவது எரிய வேண்டும்.

- Advertisement -

ஒரு மணி நேரம் கழித்து இதை நாம் குளிர வைத்து விடலாம். மறுபடியும் அடுத்த வாரம் இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் கால்படாத இடத்தில் போட்டு விட்டு அந்த அகலை சுத்தம் செய்து மறுபடியும் சந்தனம் குங்குமம் வைத்து இலுப்ப எண்ணெய் ஊற்றி மருதாணி விதைகள், டைமண்ட் கற்கண்டு, தாமரைக்கண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நன்மைகளைத் தரும் நந்தி வழிபாடு

இப்படி நாம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையில் இந்த தீபத்தை ஏற்றி வர நம்மால் கடன் என்ற பிரச்சினையிலிருந்து வெளியில் வருவதற்குரிய நல்ல வழி கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும்.

- Advertisement -