கோடிக்கணக்கில் கடனை வாங்கி தெருக் கோடியில் நிற்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தாலும் மனம் தளராமல் பைரவரை இப்படி வழிபடுங்கள் கடன் எப்படி காணாமல் போனதென்று தெரியாமல் கரைந்து விடும்.

sivan1
- Advertisement -

கடன் பட்டார் நெஞ்சம் போல் என்ற இந்த வார்த்தை அனைவரும் கேள்விப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இது கடன் வாங்கிய ஒருவரின் மனநிலையை விளக்குவதற்கு இதை விட ஒரு அழகான வார்த்தையை சொல்ல முடியாது. ஒருவர் கடன் வாங்கி அந்த கடலில் மூழ்கும் சூழ்நிலை வந்து விட்டால் அவர் அவருடைய வாழ்க்கை முழுவதுமே சூனியமானது போல தான் இருக்கும். அவரால் எங்கும் செல்ல முடியாது யாருடனும் நெருக்கமாக பேச முடியாது. யாரும் மதிக்க மாட்டார்கள் இப்படி கடன் அதிகம் உள்ள ஒருவர் படும் இன்னல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தனை பெரிய சிக்கல்களை நாம் சந்திப்பதற்கு நாமும் ஒரு வகையில் காரணமாகத் தான் இருந்திருப்போம். கடன் வாங்கும் போது யோசித்து வாங்க வேண்டும். அதை அடைப்பதற்கான வழியையும் நாம் உருவாக்கிய பிறகு தான் முடிவெடுக்க வேண்டும். ஏதோ வாங்கினோம் அடைத்து விடுவோம் என்ற அசட்டு தைரியத்தில் வாங்கி ஆடம்பர செலவு செய்து கடனில் மூழ்கி விடக் கூடாது. இதை அனைவருமே கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடன் அடைவதற்கான இந்த வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கடன் அடைய பைரவர் வழிபாடு
இந்த வழிபாட்டை நாம் பைரவர் தனியாக வீற்றிருக்கும் ஆலயத்தில் செய்வது மிகவும் விசேஷம் இல்லாத பட்சத்தில் அனைத்து சிவாலங்களையும் பைரவர் இருப்பார் அங்கு இந்த வழிபாடை செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நாம் பைரவருக்கு முக்கியமாக வாங்கிக் கொடுக்க வேண்டிய இரண்டு பொருள்கள் அபிஷேகத்திற்கு தேனும் கரும்புச் சாறும். இவை இரண்டும் கடனை சீக்கிரம் அடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதே போல் அபிஷேகத்திற்கு பழங்களையும் வாங்கிக் கொடுக்கலாம். மேலும் அவருக்கு சாற்ற சிகப்பு நிறத்திலான மலர்கள் குறிப்பாக செவ்வரளி அது கிடைக்காத பட்சத்தில் செம்பருத்தி மலர, எலுமிச்சை பழம் மாலை, அதுவும் 17 எலுமிச்சை பழங்களை மாலையாக தொடுத்து சாற்றி தான் வழிபட வேண்டும். இத்துடன் பைரவருக்கு நாம் ஒரு தீபமும் ஏற்ற வேண்டும்.அதற்கு இரண்டு அகல் தீபம் எற்றிக் கொள்ளுங்கள். அதில் சிகப்பு நிற திரியை போட்டு இலுப்பை எண்ணெய் ஊற்றி பைரவருக்கு தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

இந்த தீபம் அபிஷேகப் பொருள்களை வாங்கித் தருவது அனைத்தும் தேய்பிறை அஷ்டமியில் செய்வது மிகவும் விசேஷம் அன்று மாலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள்ளான அபிஷேகம் நேரத்தில் தான் இதை செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்வதோடு கால பைரவருக்கு அத்தர், புனுகு, அரசஜா இவை மூன்றையும் வாங்கி கொடுத்து பைரவருக்கு கொஞ்சமாக வைத்து வணங்கிய பிறகு மீதம் உள்ளவற்றை நீங்கள் வீட்டிற்கு வாங்கி வந்து தினமும் வைத்து பயன்படுத்துங்கள். இவை அனைத்தும் கேதுவின் அம்சமாகவும் விளங்குவதால் கடன் அடைவதற்கான வாய்ப்புகள் பெருமளவு தேடி வரும். இதே போல இந்த மூன்று பொருட்களையும் சிவபெருமானுக்கும் வாங்கித் தந்து வைத்து வழிபட்டு பயன்படுத்தலாம்.

இவையெல்லாம் செய்த பிறகு கால பைரவருக்கு உங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் யாருக்கு எனும் பெரும் அளவு கடன் கொடுத்து திரும்ப வராத பட்சத்தில் அவர் பேரிலும் அர்ச்சனை செய்யலாம். அந்த வராத பணமும் உங்களுக்கு விரைவில் வரும். அது மட்டும் இன்றி திருமண தடை தொழில் தடை அனைத்திற்கும் இந்த வழிபாடு மிகவும் உகந்ததாக இருக்கும்.

நம்முடைய பலவிதமான பிரச்சனைகள் தீர இந்த ஒரு வழிபாடு நல்ல தீர்வாக இருக்கும் எனவே நம்பிக்கையோடு இந்த பைரவர் வழிபாட்டை செய்து கடன் பிரச்சனை இல்லா வாழ்க்கையை நிம்மதியாக வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -