மீளவே முடியாத கடன் தொல்லையில் இருந்து உடனே மீண்டு வர பைரவருக்கு சக்தி வாய்ந்த இந்த தீபத்தை இரண்டு முறை மட்டும் ஏற்றினால் போதும்.

- Advertisement -

ஒரு ரூபாயாக இருந்தாலும் ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும் கடன் கடன் தான். அந்த கடனை நாம் திருப்பித் தரும் வரை நாம் கடனாளியாக கருதப்படுகிறோம். பலரும் கடன் வாங்கி அதை திருப்பித் தர முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குரிய மிகவும் எளிமையான முறையில் செய்ய கூடிய பைரவ வழிபாடு பற்றி தான் ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு பல தெய்வங்கள் இருந்தாலும், அவற்றுள் மிகவும் குறிப்பாக பலரும் வணங்குபவர் பைரவரே. அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் வீற்றிருப்பார். சில கோவில்களில் தனி சன்னதியாகவும் வீற்றிருப்பார். பைரவருக்குரிய மிகவும் விசேஷமான நாளாக அஷ்டமி கருதப்படுகிறது. நம்முடைய கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறைய வேண்டும் என்றால் நாம் பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட வேண்டும்.

- Advertisement -

தேய்பிறை அஷ்டமி நாளில் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் அருகில் பைரவர் இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு மண் அகல் விளக்கை வாங்கி, அதில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அதில் சிறிது துருவிய இஞ்சியை போட வேண்டும். பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு செவ்வரளி பூவை சாற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் நம்முடைய கடன் பிரச்சனைகளும், அதனால் ஏற்பட்ட அவமானங்களையும் மனதார கூறி வேண்டிக் கொண்டு வீடு திரும்ப வேண்டும்.

இதே போல் அடுத்த மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி நாளிலும் செய்ய வேண்டும். இரண்டு தேய்பிறை அஷ்டமிகள் இவ்வாறு செய்த பிறகு, அடுத்து வரும் வளர்பிறை அஷ்டமி அன்று பைரவர் சன்னதிக்கு செல்ல வேண்டும். பைரவருக்கு கதம்பம் மாலை வாங்கி சாற்ற வேண்டும். பிறகு ஒரு மண் அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். நம் வாழ்க்கையில் செல்வ நிலை உயர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். வளர்பிறை அஷ்டமியில் நமக்கு தேவைப்படுகின்ற விஷயங்களை வேண்ட வேண்டும். தேய்பிறை அஷ்டமியில் நம்மிடம் இருந்து விலக வேண்டிய விஷயங்களை வேண்ட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாம் செய்வதால் நமக்கு இருக்கக் கூடிய கடன் பிரச்சனைகளில் இருந்து நாம் வெளியில் வருவதற்கு பைரவர் நமக்கு வழி துணையாகவும், வழிகாட்டியாகவும் இருப்பார்.

இதையும் படிக்கலாமே: மரணப் படுக்கையில் இருப்பவரை கூட மறுபடியும் எழுந்து நடமாட வைக்க தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். மரணம் பயத்தை போக்கி வளமாக வாழ வைக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்.

இந்த தீபத்தை ஏற்றி வரும் போது சனி பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் தாக்கங்கள் கூட குறையும். மேலும் அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபடுவதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் கடாட்சம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். செல்வ செழிப்பு மேலோங்கும்.

- Advertisement -