இன்று புதன்கிழமையோடு வந்திருக்கும் இந்த புதாஷ்டமி நாளில் கடன் தீர பைரவருக்கு இதை மட்டும் செய்து விட்டால், ஜென்மத்திற்கும் தீராது என்று நினைத்த கடன் கூட விரைவில் தீர்ந்து விடும்.

bhairavar cash
- Advertisement -

நம்முடைய ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு சிறப்பு தெய்வங்கள் இருக்க தான் செய்கிறது. அந்த வகையில் வீடு, வாசல், நிலம் அமைய முருகப்பெருமானை வணங்க வேண்டும். செல்வ வளம் பெருக மகாலட்சுமி தாயாரை வணங்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனி சிறப்பு மிக்க ஒவ்வொரு கடவுளை வணங்குவது நம்முடைய சாஸ்திரத்திலே உள்ளது. அந்த வகையில் பைரவரை வணங்கி வரும் போது கடன்கள் விரைவில் அடையும்.

இன்று புதன்கிழமையில் வந்திருக்கும் புதாஷ்டமி நாளில் வைரவருக்கு இந்த தீபத்தை ஏற்றும் போது கடன்கள் விரைவில் அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன தீபம், எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அஷ்டமியில் பைரவருக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதிலும் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி என்று இரண்டு அஷ்டமிகள் உண்டு. இவை இரண்டுமே விசேஷமானவை தான். ஆனால் புதன்கிழமையில் வந்திருக்கும் இந்த புதாஷ்டமி ஆனது 8 அஷ்டமிகள் பைரவரை வணங்கியதற்கான பலனை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நீங்கள் கடன் அடைய ஏற்றும் இந்த தீபம் எட்டு அஷ்டமிகள் விரதம் இருந்து பைரவருக்கு விளக்கு ஏற்றியதற்கான பலனை கொடுக்கும்.

கடன் தீர மிளகு தீப பரிகாரம்:
கடன் அடைய பைரவருக்கு மிளகு தீபம் ஏற்ற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்றைய தினத்தில் இதே மிளகு தீபத்தை 8 மிளகு தீபமாக ஏற்ற வேண்டும். அதற்கு ஒரு சிகப்பு நிற துணியில் 35 மிளகு வைத்து ஒரு மூட்டையாக கட்ட வேண்டும். இதே போல் எட்டு மூட்டை கட்டிய பிறகு அருகில் இருக்கும் பைரவர் ஆலயத்திற்கு சென்று பைரவருக்கு முன்பாக 8 அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி அதில் இந்த எட்டு மிளகு மூட்டையை, ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு மூட்டையாக வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அதே போல் பைரவருக்கு இன்றைய நாளில் நீங்கள் எந்த மலர் வாங்கினாலும் எட்டு மலர்கள் வாங்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் சிறந்த பலனை கொடுக்கும். அதன் பிறகு பைரவரை எட்டு முறை வலம் வந்த பிறகு எட்டு முறை விழுந்து பைரவரை வணங்கி உங்களின் கடன் தீர வேண்டும் என்று கொள்ளுங்கள். உங்களின் தீராத கடன் பிரச்சனைகள் கூட விரைவில் தீர்ந்து விடுவதற்கான வழியை பைரவர் உங்களுக்கு காட்டுவார்.

இதையும் படிக்கலாமே: தொழிலில் லாபமே வரவில்லையா? 11 வாரம் தொடர்ந்து இதை செய்தால் போதும் நஷ்டத்தில் இருக்கும் தொழில் கூட லாபத்தை குவிக்கும்.

இன்று ஏற்றப்படும் இந்த தீபத்தோடு ஏதேனும் ஒரு சுமங்கலி பெண்ணுக்கு மஞ்சள், குங்குமம்,தாலிக்கயிறு, வெற்றிலை பாக்குடன் தாம்பாளத்தை தந்தால் அம்பிகை பால திரிபுரசுந்தரியின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். கடன் அடைய ஏற்றும் இந்த தீபத்துடன் அம்பிகையின் பரிபூரண அருளையும் பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்ளலாம்.

- Advertisement -