கட்டுக்கடங்காத கடன் அடைய கட்டு கட்டாய் பணம் சேர செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் இதை மட்டும் செய்தால் போதுமா? ஏன்?

sevvai-cash
- Advertisement -

கடன் தொல்லை யாருக்குத் தான் இல்லை? எல்லோருக்குமே ஏதாவது ஒரு கடன் இருக்கத்தான் செய்கிறது. இந்த கடனில் இருந்து எளிதாக மீள்வதற்கு ஓரைகள் நமக்கு துணை புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு முக்கியமான ஹோரை தான் செவ்வாய் ஹோரை! செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் என்ன செய்தால் கடன்கள் எல்லாம் அடையும்? பணம் சேரும்? என்பதை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் கடன் வாங்குவது முடிந்தவரை தவிர்ப்பது தான் நல்லது. கடன் சுமை அதிகரித்தால் வாழ்க்கையே சுமையாகி விடும். தகுதிக்கு மீறி கடன் வாங்குவது எவ்வளவு பாவ செயலோ அதே அளவிற்கு பணத்தை கட்டக்கூடிய தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது கூட தெரியாமல் கடனை அள்ளிக் கொடுப்பதும் பாவச் செயலாகும்.

- Advertisement -

இன்று இருக்கும் நவனாகரிக உலகில் இருக்கின்றவன் இல்லாதவனை கடன்காரனாகவே வைத்துக் கொள்ள நினைக்கிறான். அவசிய தேவைகளுக்கு மட்டுமே கடன்கள் வாங்குவதை சரி எனலாம் ஆனால் எல்லாவற்றுக்குமே இன்று கடன் வாங்கி தான் நம் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய நிலை என்பது நாமே உருவாக்கிக் கொண்டது தான். தகுதிக்கு மீறிய ஆசைகளும், பேராசைகளுமே கடன்களுக்கு காரணமாக இருக்கிறது.

மற்றவர்கள், சுற்றி இருப்பவர்கள் என்ன சொன்னாலும், நம்மை கடன் வாங்க தூண்டினாலும் நம்மால் அந்த கடனை அடைக்க முடியுமா? அது சுமையாகுமா? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கொடுக்கின்றார்கள் என்பதற்காக வாங்கிக் கொண்டே இருந்தால் கடைசியில் நாம் தான் கடனாளியாக நம் உழைப்பை அடுத்தவர்களுக்கு தானம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

வாங்கிய கடன்களை அடைத்து, மீண்டும் மீண்டும் கடன் வாங்காமல் தடுத்து, குடும்பம் நல்ல நிலைக்கு வருவதற்கு, வருமானம் பெருகுவதற்கு ஹோரைகள் உதவி செய்கின்றன. அதிலும் செவ்வாய் ஹோரை ரொம்பவே விசேஷமானது. செவ்வாய் பகவானுக்கு உரிய இந்த ஹோரை நம் கடன்களை எல்லாம் தீர்க்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் குறிப்பாக காலையில் 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலான காலகட்டமும், மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரையிலான காலகட்டமும் மிகுந்த பலன்களை கொடுக்கக்கூடிய நேரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
சமையலறையில் நாம் செய்யும் இந்த ஒரு சிறு மாற்றத்தால் கிரகங்களினால் ஏற்படும் பெருந் துன்பத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் தெரியும்மா?

இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கடன் தொகையில் இருந்து ஒரு சிறு தொகையை கொடுத்து விட்டு வர வேண்டும். நகையை அடகு வைத்திருக்கிறீர்கள் என்றால் இந்த நேரத்தில் சென்று அடகிலிருந்து மீட்க கொஞ்சம் தொகையை கொடுத்து வர வேண்டும். அதேபோல பணம் வாங்கி இருந்தாலும் அப்படித்தான். நீங்கள் கொடுக்கக்கூடிய பணத்தை ஒரு வெள்ளை நிற கவர் அல்லது பேப்பரில் வைத்துக் கொடுத்து வாருங்கள். இதுபோல நீங்கள் முடிந்த பொழுதெல்லாம் செவ்வாய்க்கிழமை வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் கொஞ்சம் கொஞ்சமாக கடனை இதே முறையில் கொடுத்து வந்தால் தீராத கடன் எல்லாம் தீரும். கட்டுக்கே அடங்காத கடன் கூட கட்டுப்பட்டு விடும். அதன் பிறகு நீங்கள் வருமானம் ஈட்டக்கூடிய அமைப்பையும் செவ்வாய் பகவான் உங்களுக்கு கொடுப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. நம்பிக்கையுடன் செய்து பாருங்கள், பலன் நிச்சயம் இருக்கும்.

- Advertisement -