கடனை அடைக்க நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் தோல்வியில் முடிகிறதா? அப்படியானால் சனிக்கிழமை மாலை இதை மறக்காமல் செய்து விடுங்கள். கழுத்தை நெரிக்கும் கடன் கூட காணாமல் போய் விடும்.

- Advertisement -

கடன் என்பது பெரிய கொடுமையான விஷயம். கடனை யாரும் விருப்பபட்டு வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக செலவுகளை சமாளிக்க முடியாமல் வேறு வழி இல்லாமல் வாங்கி விடுகிறோம். கடன் வாங்கும் போது படும் பாட்டை விட, அதை அடைக்க படும்பாடு பெரியதாக இருக்கிறது. அப்படி என்ன பாடுபட்டாலும் கடன் அடையவே இல்லை அதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது என்றால் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள். அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

கடன் வாங்காமல் வாழும் வாழ்க்கை சிறந்தது. இன்றைய காலக்கட்டத்தில் அப்படி வாழ்வதும் பெரும் சவாலான விஷயம் தான், முடிந்த வரையில் தேவையான விஷயங்களுக்கு மட்டும் செலவழித்து வாழ பழகிக் கொள்ளுங்கள். கடன் என்னும் பெரிய அரக்கனின் பிடியிலிருந்து தப்பித்து விடலாம். இப்பொழுது கடனை அடைக்க நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர கிராம்பு பரிகாரம்
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை தான் செய்ய வேண்டும். சனிக்கிழமை மாலை ஐந்திலிருந்து ஆறு மணிக்குள்ளாக இதை செய்து விட வேண்டும். இதை செய்ய ஏழு கிராம்பை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நல்ல நிலையில் உடையாமல் இருக்கும் கிராம்பாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

அதன் பிறகு அனுமன் படத்திற்கு (அனுமன் படம் இல்லாதவர்கள் பெருமாள் படத்திற்கு முன்பாகவும் இதை செய்யலாம்) முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் கொஞ்சம் பசு நெய் விட்டு இந்த ஏழு கிராம்பையும் அதில் போட்டு பச்சை கற்பூரத்தை அதில் போட்டு எரித்து விடுங்கள். கிராம்பு அனைத்தும் எரிந்து அடங்கியதும் மை போல கிடைத்து விடும். இந்த மையை தினமும் நீங்கள் காலையில் குளித்து முடித்து பூஜை செய்த பிறகு நெற்றியின் மைய பகுதியில் திலகமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஏழு வாரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த மையை ஒரு வாரம் முழுவதும் வைத்த பிறகு, அடுத்த வாரம் சனிக்கிழமை இதை போல் செய்வதற்கு முன்பாக ஏற்கனவே இருக்கும் மையை சுத்தம் செய்து விட்டு, அதன் பிறகு அடுத்த பரிகாரத்தை செய்து கிடைக்கும் மையை அந்த வாரத்தில் தொடர்ந்து பயன்படுத்துங்கள். இதே போல் ஏழு வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது வீட்டில் இதை செய்து முடித்த பிறகு ஆஞ்சநேயர் கோவிலுக்கு அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுவது இன்னும் சிறப்பு.

ஏழு என்பது கேதுவிற்குரிய எண் ஆஞ்சநேயருக்கு கேதுவை வெல்லக்கூடிய சக்தி உண்டு. கடன் சுமை அதிகரிக்கவும், அதனால் ஏற்படும் சுமை, கஷ்டங்கள் இந்த கிரகத்தின் பாதிப்பால் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே ஆஞ்சநேயருக்கு முன்பாக கிராம்பை எரித்து அதன் மையை தினமும் நெற்றியில் திலகமாக வைத்து வர, உங்கள் கடன் சுமை அனைத்தும் படிப்படியாக குறையும் என்றும், கடன் அடைக்க நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் வெற்றியை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் முதலில் இந்த விளக்கை ஏற்றுங்கள். கடன் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் ஆஞ்சநேயரை வழிபட்டு உங்களின் கடன் சுமையிலிருந்து மீண்டும் நல்லதொரு சந்தோஷமான வாழ்க்கை வாழுங்கள்.

- Advertisement -