கடன் பிரச்சனையால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் முதலில் இந்த விளக்கை ஏற்றுங்கள். கடன் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

kala-bairavar-vilakku
- Advertisement -

கடன் பிரச்சனையால் தங்கள் சொத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து, வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து, நடுத்தெருவில் நின்றவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். யாரும் விருப்பப்பட்டு ஆசைப்பட்டு கடன் வாங்குவது இல்லை. சூழ்நிலை, கெட்ட நேரம், கடனை வாங்க வைத்து வட்டிக்கு மேல் வட்டியை கட்ட வைத்து கையில் இருப்பதை எல்லாம் இழக்க வைத்து, பொன் பொருள் எல்லாவற்றையும் விழுங்கி விடக் கூடிய சக்தி இந்த மூன்று எழுத்துக்கு உண்டு.

ஆகவே எவ்வளவு பெரிய கஷ்ட சூழ்நிலை வந்தாலும், முடிந்தவரை கடன் வாங்காமல் அதை சமாளிக்க பாருங்கள். கடலில் சிக்கிக் கொண்டவன் நீச்சல் தெரியவில்லை என்றாலும் கூட பிழைத்துக் கொள்ளலாம். கடனில் சிக்கிக் கொண்டவன் கடனை திருப்பித் தர முடியவில்லை என்றால் ரொம்ப கஷ்டம். கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அந்த கடவுளை வேண்டிக் கொண்டு இந்த பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

கடன் தீர மிளகு விளக்கு பரிகாரம்:
பெரும்பாலும் இந்த பரிகாரத்தை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் கடன் வாங்கி கஷ்டப்படுபவர்களுக்கு இன்னும் ஒரு சில பேருக்கு இந்த பரிகாரத்தை பற்றி தெரியாமல் இருந்தால், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு. கால பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றினால் கடன் குறையும் என்று சொல்லுவார்கள் அல்லவா. அது தேய்பிறை அஷ்டமி அன்று கோவிலுக்கு சென்று தான் அந்த தீபம் ஏற்ற வேண்டும் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் சன்னிதானத்தில் மிளகு தீபம் ஏற்றினால் கடன் குறையும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்று உங்களால் சமாளிக்க முடியாத கடன் பிரச்சனை இருக்கிறது என்றால், உடனடியாக இந்த பரிகாரத்தை நீங்கள் வீட்டிலும் செய்யலாம். வெள்ளை துணி அல்லது மஞ்சள் துணி, சின்ன சதுர வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 27 மிளகு வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் இந்த விளக்கை ஏற்றலாம். ஒரு சிறிய தட்டின் மேல் மண் அகல் விளக்கை வைத்து, அதன் மேல் நல்லெண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்திருக்கும் இந்த முடிச்சை அந்த நல்லெண்ணெயில் நனைத்து, அப்படியே தீபம் ஏற்றி விடுங்கள். நீங்கள் முடிச்சாக கட்டி இருக்கும் அந்த மூட்டை அப்படியே நெருப்பில் எரியும். மிளகு வெடிக்கும்.

அந்த விளக்கத்திற்கு முன்பு அமர்ந்து கால பைரவரை நினைத்து உங்களுக்கு இருக்கும் கடன் கரைய வேண்டும் என்று மனதார, உண்மையான பக்தியோடு, நம்பிக்கையோடு, வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு கால பைரவருக்கு உகந்த ‘ஓம் ஸ்ரீ மகா ருத்ர கால பைரவாய நமஹ’ இந்த மந்திரத்தை உச்சரித்து கடன் கரைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் இந்த தீபத்தை வீட்டிலிருந்தபடியே ஏற்றலாம். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்ற கவலை கூட தேவையில்லை. காலபைரவரை நினைத்து வீட்டில் பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றியவர்கள் வாழ்வில் கடன் பிரச்சனையால் கஷ்டம் என்பதே வராது. வட்டி கூட கட்ட முடியாத நிலையில் இருப்பவர்கள் முழு கடனையும் திருப்பிக் கொடுக்கும் சந்தர்ப்பத்தையும் கால சூழ்நிலையையும் அந்த கால பைரவர் நிச்சயம் காட்டிக் கொடுப்பார்.

இதையும் படிக்கலாமே: சாமி கும்பிடனும், கோவிலுக்கு போகணும் என்றாலே ஏதாவது ஒரு தடை வருதா? சாமி கும்பிடாமல் உங்களை தடுத்து நிறுத்தும் அந்த அமானுஷ்ய சக்தியை உடம்பிலிருந்து வெளியேற்ற நீங்கள் கட்டாயம் இதை பண்ணனும்.

இந்த விளக்கை எத்தனை நாள் ஏற்றுவது. கடன் தீரும் வரை ஏற்றினால் ரொம்ப ரொம்ப நல்லது. முடியாதவர்கள் தொடர்ந்து 5 நாள், 11 நாள், உங்கள் கஷ்டத்தை பொறுத்து உங்களுடைய பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். பரிகாரத்திற்கு நம்பிக்கை தாங்க முக்கியம். நம்பிக்கையோடு கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து தான் பாருங்களேன். உங்கள் வாழ்க்கையில் விடிவு காலம் நிச்சயம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -