கடன் தீர நரசிம்மர் வழிபாடு

lakshmi narachimmar cash in hand
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் கடன் இல்லாத வாழ்வே பெரும் வாழ்வு தான். ஆனால் அத்தகைய பெருவாழ்வை வாழ்பவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்றால் அதில் சந்தேகம் தான். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கடன் வாங்கி அந்த கடனை அடைக்க தினம் தினம் பாடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது வசதி படைத்தவர் வசதி இல்லாதவர் என்ற எந்த பாகுபாடும் இதில் கிடையாது.

அவரவர் வசதிக்கு ஏற்ப கடனின் அளவு இருக்கும். இதில் ஓரளவுக்கு வருமானம் வந்து கடனை அடைப்பவர்கள் நிலைமை பரவாயில்லை. ஆனால் கடனை வாங்கிய பிறகு அதை அடைப்பதற்கான வழியும் இல்லாமல் திணறுபவர்கள் நிலைமை தான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கும்.

- Advertisement -

இப்படி கடன் வாங்கி துன்பக்கடலில் சிக்கியவர்களை மீட்டு எடுக்க கூடிய அற்புதமான தெய்வமாக விளங்குபவர் லட்சுமி நரசிம்மர். இந்த லட்சுமி நரசிம்மரை நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய கடன் தொல்லையிலிருந்து வெளிவரலாம் என்பதை தான் ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடன் தீர லட்சுமி நரசிம்மர் வழிபாடு

இந்த வழிபாட்டை இன்றைய தினம் சுவாதி நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் சுவாதி நட்சத்திரமானது லட்சுமி நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரமாக பாவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாள் புதன்கிழமை. இன்றைய தினம் புதன்கிழமையுடன் சுவாதி நட்சத்திரம் வந்திருப்பது நம்முடைய கடன் அடைய நரசிம்மரை வணங்குவதற்கு ஏற்ற அற்புத நாள்.

- Advertisement -

இன்றைய நாளில் லட்சுமி நரசிம்மரை நாம் மாலை வேளையில் வழிபட வேண்டும். அதாவது பிரதோஷ காலம் என்று சொல்லப்படும் 4.30 மணியிலிருந்து 6.0 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். வீட்டில் லட்சுமி நரசிம்மர் படம் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பெருமாள் படம் இருந்தால் அதை வைத்தும் வழிபாடு செய்யலாம்.

நரசிம்மர் படத்திற்கு துளசி மாலை போடுங்கள் இல்லை எனில் துளசி கொஞ்சமாவது வைத்து விடுங்கள். நரசிம்மருக்கு நெய்வேத்தியமாக பானகத்தை கலந்து வையுங்கள். இது அவருக்கு மிகவும் உகந்த நெய்வேதியமாக கருதப்படுகிறது. அதன் பிறகு இரண்டு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விட்டு அதன் முன் நீங்கள் அமர்ந்து நரசிம்மர் ருண விமோசன சுலோகம் சொல்ல வேண்டும்.

- Advertisement -

இன்றைய தினம் ஆரம்பிக்கும் இந்த ஸ்லோக வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் பொழுது உங்களுடைய தீராத கடன்கள் தீர்ந்து செல்வவளம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் நரசிம்மர் என்று சொல்லும் போதே லட்சுமி நரசிம்மர் என்று தான் சொல்கிறோம். லஷ்மி தாயாரின் அருளோடு கடன் அடைந்து வளமுடன் வாழ வைக்கக் கூடிய அற்புதமான வழிபாடு இது.

இதையும் படிக்கலாமே: தடைகள் நீங்கி வருமானம் பெருக புதன்கிழமை வழிபாடு

நம்பிக்கை உள்ளவர்கள் இன்றைய தினம் தவற விடாது இந்த வழிபாட்டை தொடங்கி வழிபடலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -