காலம் காலமாக வட்டி மட்டுமே கட்டும் கடன் தொல்லையில் இருந்து விரைவில் மீண்டு வெளியே வந்து, இனி ஆய்சுக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையே வராம இருக்க ஒரு கட்டி வெல்லம் போதும்.

panam murugar vellam
- Advertisement -

கடன் என்றால் எல்லோரும் நினைத்துக் கொள்வது ஒருவரிடம் நாம் கைமாறாக வாங்குவது மட்டும் என்று நினைத்து கொள்கிறார்கள் இன்றைய சூழ்நிலையில் கடன் என்றால் பல வகையில் உள்ளது. அது ஒரு வாகனத்தின் கடனாக இருக்கலாம். ஒரு பொருளின் மீது வாங்கிய கடனாக இருக்கலாம், அல்லது வீடு நிலம் என கடன் என்பது கையில் பணமாக வாங்குவது மட்டுமின்றி இது போல வாங்குவதும் பெரும் கடன் வகையிலே சேரும்.

அதே போல் அவசர தேவைக்கு நகை வைத்து விடுவோம். அதையும் எந்த சூழ்நிலையிலும் திருப்ப முடியாமல் அதற்கும் வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருப்போம். இப்படி நாம் எந்த கடனாக இருந்தாலும் அதிலிருந்து சுலபமாக மீண்டும் வர இந்த எளிய பரிகாரம் கை கொடுக்கும் என்று சொல்கிறது. அது என்ன பரிகாரம் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் அடைய செய்ய வேண்டிய தானம்:
இந்த பரிகாரத்தை நிச்சயம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும் மற்ற நாட்களில் செய்யக் கூடாது. இதை செய்வதற்கு பெரிதாக நீங்கள் எதையும் செலவு செய்து வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கட்டி வெல்லம் இருந்தால் போதும். ஆனால் இந்த வெல்லத்தை நீங்கள் பசு மாட்டிற்கு தானமாக கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு பிரச்சினை கிடையாது. ஆனால் நகர்புறங்கள் இது பொருளுக்கு பசு மாட்டை தேடி கொடுப்பது கொஞ்சம் சிரமம் அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வெல்லத்தை நீங்கள் நேரடியாக அப்படியே பசு மாட்டிற்கு தூள் செய்து கொடுக்கலாம் அல்லது பழத்துடன் கலந்து கொடுக்கலாம். இந்த வெல்லத்தை சமைத்துக் கொடுக்கக் கூடாது அப்படியே தான் கொடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஐந்து வாரங்கள் செய்தாலே போதும் உங்கள் கடனிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அப்படி கடனை அடைப்பதற்கான வாய்ப்பு வரும் போது அதை திருப்பி தரும் நாளிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக செவ்வாய்க்கிழமையில் கடனை அடைத்தால் சீக்கிரத்தில் கடன் அடைந்து விடும். அதிலும் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் கடனை திருப்பிக் கொடுப்பது மிகவும் விசேஷம் அப்படி இல்லை என்றால் செவ்வாய்க்கிழமையில் வரும் குளிகை நேரத்தில் உங்கள் கடன் தொகையிலிருந்து சிறிதலாவது கொடுத்து கடனை அடையுங்கள். இது இரண்டுமே உங்கள் கடனை விரைவில் அடைப்பதற்கான வாய்ப்பை இன்னும் அதிகரிக்கும். இத்துடன் செவ்வாய் கிழமையில் முருகர் வழிபாட்டை தவறாமல் செய்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் இது வரை தோல்வியையே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எமகண்ட நேரத்தில் மூன்று தேங்காயை வைத்து இதை செய்தால் போதும். இனி நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயம் தான்

இந்த எளிய பரிகார முறை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வாந்தால் உங்களின் நீண்ட கால கடன் பிரச்சனையிலிருந்து எப்படி வெளியில் வந்தீர்கள் என்று தெரியாத அளவிற்கு கடன் பிரச்சனை உங்களை விட்டு நீங்கி விடும். எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் நம்முடைய முழு முயற்சியும் சேர்த்து இந்த பரிகாரங்கள் துணையோடு செய்யும் போது அதற்கான பலன் பல மடங்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்ற இந்த கருத்துதோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -