வாழ்க்கையில் இது வரை தோல்வியையே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எமகண்ட நேரத்தில் மூன்று தேங்காயை வைத்து இதை செய்தால் போதும். இனி நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயம் தான்

Vinayagar
- Advertisement -

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று தான். இது போல தான் இன்று பலரின் வாழ்க்கையும் உள்ளது. நிறைய விஷயங்களை பாடுபட்டு எப்படியாவது அடைய வேண்டும் என்று முயற்சி செய்து அடையும் நிலை வரை சென்று விடுவார்கள். இறுதி கட்டத்தில் அவை அனைத்தும் ஒன்றும் இல்லாமல் கைநழுவி போய் விடும். இது ஒரு விஷயத்தில் மட்டும் நடந்தால் பரவாயில்லை ஒரு சிலருக்கு எதை வியாபாரம் திருமணம் படிப்பு வேலை என எதை தொடங்கினாலும் இப்படித்தான் முடிந்து விடும்.

இதனால் அவர்கள் சமூகத்தில் ராசி இல்லாதவர்கள் என்ற முத்திரை கூட குத்தி ஓரம் வைத்து விடுவார்கள். இப்படியானவர்களின் நிலைமை உண்மையிலே படும் மோசம் தான். இந்த சூழ்நிலையில் இருப்பவர்கள் அவர்கள் எந்த காரியத்தை தொட்டாலும் அதில் தடை இல்லாமல் வெற்றி பெற இந்த ஒரு பரிகாரத்தை செய்யலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

காரிய தடை நீக்க பரிகாரம்
இந்த பரிகாரத்தை நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதிலும் செவ்வாய்க்கிழமையில் குறிப்பாக எமகண்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும். இதைத் தவிர மற்ற நேரங்களில் இந்த பரிகாரத்தை செய்தால் பலன் இருக்காது. இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையானது மூன்று தேங்காய் மட்டுமே.

செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் இந்த மூன்று தேங்காயை எடுத்து நல்ல ஒரு கனமான நூலால் பூப்போல இதை தொடுத்துக் கொள்ளுங்கள். இதன் இரண்டு புறமும் மாலை கட்டுவதற்கான நூலை விட்டு விடுங்கள். இப்போது இந்த தேங்காய் மாலையை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கு விநாயகருக்கு எந்த மாலையை சாற்றி உங்களுக்கு இருக்கும் காரியத்தடைகள் அனைத்தும் நீங்கி நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் துலங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இவை அனைத்தையுமே எமகண்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும் இதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தேங்காய் பரிகாரத்தை ஏழு வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை தொடங்கும் பொழுது முதலில் ஏதாவது ஒரு காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு தொடங்குங்கள். அந்த காரியம் முடிந்தவுடன் அடுத்த ஒரு காரியத்தை நினைத்து மீண்டும் பரிகாரத்தை தொடருங்கள். ஒரு வேளை நீங்கள் பரிகாரத்தை தொடங்கிய ஒன்று, இரண்டு வாரங்களுக்குள்ளாகவே நீங்கள் நினைத்தது முடிந்து விட்டாலும், ஏழு வாரங்கள் தொடர்ந்து செய்து முடித்த பிறகு அடுத்த பரிகாரத்தை தொடங்குங்கள்.

இதையும் படிக்கலாமே: எலுமிச்சம் பழத்தில் இந்த வார்த்தையை எழுதினாலே போதும். பணத்தை தேடி நீங்கள் போக வேண்டாம். அந்த பணமே உங்கள் வீடு தேடி வரும்.

இந்தப் பரிகாரத்தை தொடர்ந்து செய்வதோடு நீங்கள் செய்ய நினைக்கும் செயலை தைரியமாகவும் துணிச்சலுடன் விடாமுயற்சியுடனும் செய்ய ஆரம்பியுங்கள். நிச்சயம் இது வரை இருந்த தடை இனிமேல் இல்லாமல் அனைத்திலும் வெற்றியை மட்டுமே நீங்கள் பெறுவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -