வாழ்நாள் முழுவதும் கட்ட வேண்டிய வங்கிக் கடனை விரைவில் அடைக்க இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும். வங்கி கடன் நகை கடன் அடைய எளிய பரிகாரம்.

- Advertisement -

இப்போதெல்லாம் இ.எம்.ஐ கட்டாதவர்களே கிடையாது என்று சொல்லலாம். முன்பெல்லாம் கடன் என்றால் யாரோ ஒருவரிடமோ அல்லது உறவினர்களிடமோ பணத்தை வாங்கி அதற்கு வட்டி கட்டி வருவோம். இதை தான் கடனாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்டது. இன்று அதையே பேங்கில் அதிக வட்டிக்கு பணத்தை வாங்கி நாம் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் இந்த இ.எம். ஐ கட்டியே தீர்ந்து விடுகிறது. இதை வாங்கும் போது நமக்கு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால் கட்ட ஆரம்பிக்கும் போது தான் நாம் வாங்கியதை விட பல மடங்கு இதற்கு பணத்தை கட்டுகிறோம் என்பது புரியும். இப்படியான இந்த கடன் பிரச்சனை விரைவில் அடைய இந்த ஒரு தீபத்தை வீட்டில் ஏற்றி வந்தால் சரியாகும் என்று சொல்லப்படுகிறது.

இ.எம்.ஐ கடன் அதை குறிப்பிட்டுள்ள காலம் வரை கட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நமக்கு கையில் பணம் வரும் போது கூட அதை கட்டி அந்த கடனில் இருந்து மீண்டு வரலாம். இப்படி அவர்கள் குறிப்பிட்டிருக்கும் காலத்திற்கு முன்னதாகவே கடனை அடைக்கும் பொழுது நமக்கு பெரும் சுமை குறையும். இந்த இஎம்ஐ கடனை இன்று வீடு, நகை, வாகனம், போன்றவை அல்லாது வீட்டில் டிவி, பிரிட்ஜ் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு கூட வாங்கி அவதை படுகிறோம். இதையெல்லாம் முடிந்த அளவு தடுத்துக் கொள்வது தான் உத்தமம். சரி இப்போது இந்த பரிகாரத்தை குறித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வங்கி கடன் நகை கடன் அடைய
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது பிரண்டை, நல்லெண்ணெய், பஞ்சு திரி, நான்கு அகல் விளக்கு. இந்த தீபத்தை நாம் வீட்டில் எந்த நாளில் வேண்டுமானாலும் ஏற்ற தொடங்கலாம். அதையும் நம் வீட்டு பூஜை அறையிலேயே ஏற்றலாம். இதற்கு முதலில் ஒரு விரல் அளவு நீளமுள்ள நான்கு பிரண்டையை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு பிரண்டையும் நான்காக நறுக்கி இடையில் பஞ்சு திரி வைத்து நன்றாக கட்டி சிறிது நேரம் ஈரம் தன்மை போகும் வரை வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது நான்கு அகல் விளக்கிலும் நல்லெண்ணெய் ஊற்றி இந்த நான்கு பிரண்டை திரி போட்டு பிறகு தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய இந்த வங்கிக் கடன் நகை கடன் எல்லாம் முழுவதுமாக அடைய வேண்டும் என்று மனதார உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தீபத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றி வர வேண்டும். 48 நாட்களும் புதிய பிரண்டை தான் பயன்படுத்த வேண்டும். பெண்கள் இந்த தீபத்தை ஏற்றும் போது அவர்களுக்கான மாத இடையூறு வரும் நாட்களை தவிர்த்து பின் தொடர்ச்சியாக இந்த தீபத்தை ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் கடனாக கொடுத்து ஏமாந்த பணத்தை வெறும் 15 நாட்களில் திரும்ப வாங்கி விடலாம். இந்த 1 இலையை மட்டும் தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தால் போதும்.

இந்த பரிகாரத்தை முடிக்கும் நாட்களுக்குளாகவே உங்களின் கடன் சுமை குறைவதற்கான வாய்ப்பு உண்டாகக் கூடும் என்று நம்பப்படுகிறது. நீங்களும் இந்த தீபத்தை ஏற்றும் பொழுது நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்து கொண்டு ஏற்றுங்கள். நிச்சயம் உங்களுக்கு எவ்வளவு பெரிய கடன் சுமையாக இருந்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டு வர வழி பிறக்கும் என்று தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -