நாளை மாலை பௌர்ணமி நிலவு உதயமாகும் போது, இதை செய்தால் கடன் வாங்கும் சூழ்நிலையே உங்கள் குடும்பத்திற்கு வராது. பல தலைமுறை கடனும் சீக்கிரமே அடையும்.

pournami
- Advertisement -

நாளைய தினம் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் பௌர்ணமி நாள். இந்த பௌர்ணமி நாளில் சுக்கிர பகவானை நினைத்து, மகாலட்சுமியை நாம் வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் பணக்கஷ்டம் படிப்படியாக குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. நாளை மாலை பௌர்ணமி நிலவு உதிக்கும் போது நமக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர, சந்திர பகவானையும் மகாலட்சுமியையும் நினைத்து நம்முடைய வீட்டில் தாந்திரீக ரீதியாக எப்படி ஒரு வழிபாட்டு முறையை மேற்கொள்ளலாம் என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Pournami days in Tamil Calendar

நிறைய பண கஷ்டம் உள்ளது. மாதம் மாதம் குடும்பத்தை நடத்துவதற்கே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. எப்போதோ வாங்கிய கடனுக்கு கூட இன்னும் வடிகட்டி கொண்டிருக்கின்றோம், என்பவர்கள் முழு நம்பிக்கையோடு இதை செய்தால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் வரும்.

- Advertisement -

நாளை மாலை 6 மணிக்கு மேல் இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் தொடங்குங்கள். இந்த பூஜைக்கு வெள்ளை நிறத்தில் பிரசாதம் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். சேமியா பாயாசம். பால் கோவா, எதுவாக இருந்தாலும் அது உங்களுடைய விருப்பம் தான். கற்கண்டு சாதம் பால் ஊற்றி கூட செய்யலாம். (அந்த பிரசாதத்தில் பால், நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் கலந்து கொள்ள வேண்டும்.)

இளநீர் பாயாசம்

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, நீங்கள் செய்து வைத்த பிரசாதத்தை இறைவனுக்கு நிவேதனமாக வைத்து விடுங்கள். அடுத்தபடியாக இந்த தாந்த்ரீக பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி, கல் உப்பு, 11 ரூபாய், மஞ்சள் நிற துணி, இரண்டு துளசி இலைகள்.

- Advertisement -

ஒரு தாம்பாளத் தட்டின் மேல் மஞ்சள் துணியை விரித்து வைத்து அதில் கொஞ்சமாக பச்சரிசி கொஞ்சமாக, கல்லுப்பு கொஞ்சம், 11 ரூபாய், துளசி இலைகளை வைத்து அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த துணியை முடிச்சு கட்ட வேண்டாம். பூஜை அறையில் மகாலட்சுமியின் முன்பு இந்த தட்டினை வைத்துவிட்டு உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை எல்லாம் கூடிய விரைவில் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

பூஜை அறையில் அமர்ந்து ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமஹ!’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இந்த வேலைகளை செய்து முடிக்க 6 லிருந்து 6.30 முப்பது மணி வரை எடுக்கும். அதன் பின்புதான் சந்திர பகவான் உதிக்கத் தொடங்குவார். பூஜை அறையில் லட்சுமி தாயாரின் காலடியில் வைத்திருக்கும் தட்டை அப்படியே எடுத்து சந்திர பகவானின் தரிசனத்தில் வைக்க வேண்டும்.

- Advertisement -

praying-god1

நீங்களும் சந்திர பகவானின் தரிசனம் கிடைக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு, இந்த தட்டை உங்களின் முன்னால் வைத்து, சந்திரனிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய பணப்பிரச்சினை சீக்கிரம் தீரவேண்டும் என்று, 10 நிமிடங்கள் வரை கண்களை மூடி தியான நிலையில் மனது ஒரு சேர பிரார்த்தனை செய்துகொண்டால், போதும். அதன் பின்பு இந்த தட்டைக் கொண்டு வந்து மீண்டும் பூஜை அறையிலேயே வைத்து விடலாம். அந்த மஞ்சள் நிற துணியை சிறிய முடிச்சாக கட்டி அப்படியே மகாலட்சுமியின் பாதங்களில் வைத்துவிடுங்கள். நாளை இரவு முழுவதும் அந்த முடிச்சு அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கட்டும்.

kadan

நாளை மறுநாள் காலை அந்த முடிச்சை அவிழ்த்து அதன் உள்ளே இருக்கும் 11 ரூபாயை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கடன் தொகையை நீங்கள் திருப்பிக் கொடுக்கும்போது இந்த 11 ரூபாய் சேர்த்து திருப்பிக் கொடுங்கள். நாள் பட்ட கடன் கூட அதன் பின்பு சீக்கிரமே அடையத் தொடங்கும். அந்த முடிச்சில் வைத்த அரிசி உப்பை அப்படியே கால் படாத இடத்தில் போட்டுவிட்டால், அரிசியை எறும்புகள் வந்து சாப்பிட்டுக் கொள்ளும். துளசி காய்ந்து இருந்தாலும் பரவாயில்லை அதை அப்படியே உங்கள் வீட்டு பண பெட்டியில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

kadan vishnu

இப்படி செய்தால் சந்திர பகவானின் அருளாசி உங்களுக்கு கிடைக்கும். மகாலட்சுமியின் அருள் ஆசி உங்களுக்கு கிடைக்கும். விஷ்ணு பகவானின் அருளையும் உங்களுக்கு ஒரு சேர கிடைத்து, உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை படிப்படியாக குறையத் தொடங்கி, உங்களுடைய வீடு சுபிட்சம் அடையும். நாளை மிக மிக சிறப்பு வாய்ந்த வெள்ளிக்கிழமை பவுர்ணமி என்பதால் இந்த பரிகாரத்தை செய்து அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -