கோடிக் கடனும் காணாமல் போவதுடன், பணம், நகை சேர்வதற்கான வாய்ப்பை உங்கள் வீடு தேடி வர வைக்க, இன்று மாலை இந்த எளிய பரிகாரத்தை செய்து விடுங்கள்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கை என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஏனென்றால் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் கடன் இருக்க தான் செய்கிறது. அது நகை கடனாக இருக்கலாம், பண கடன், வீட்டு லோன், பைக் லோன், இப்படி ஏதாவது ஒரு உருவத்தில் கடன் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கடன்கள் எல்லாம் விரைவில் அடைவதுடன், நகை, பணம் சேர்வதற்கான வாய்ப்பும் தேடி வர, இன்று அமாவாசையில் இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்து பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் அடைய இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக, கடன் வாங்க வேண்டிய அவசியத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். வரவிற்குள் செலவு செய்து சேமித்து வைக்க கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் இருந்தாலும் கூட சிலருக்கு வேறு வழியில்லாமல் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கி அதை அடைக்க முடியாமல் இருப்பார்கள். இப்படியான சூழ்நிலையில் உள்ளவர்கள் இந்த எளிய உப்பு பரிகாரத்தை செய்து கடன் அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கடன் தீர அமாவாசை பரிகாரம்
இந்த பரிகாரத்தை இன்று மாலை 7 மணிக்குள் செய்து விட வேண்டும். இதற்கு ஒரு வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு உப்பு ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் ஏதாவது ஒரு நாணயத்தை அதில் வைத்த பிறகு, உங்களிடம் தங்கம் இருந்தால் மூக்குத்தி திருகாணி, அல்லது உடைந்த தங்கத் துண்டு இப்படி ஏதாவது ஒன்று இருந்தால் வைக்கலாம்.

தங்கம் வைக்கும் போது தங்கம் சேர்வதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கும் இல்லை என்றாலும் பரவாயில்லை. உப்பு, நாணயம், இத்துடன் நான்கு மிளகையும் சேர்த்து உங்கள் குலதெய்வத்தையும், மஹாலக்ஷ்மி தாயாரையும் மனதார வேண்டி கொண்டு இந்த முடிச்சை உங்கள் வீட்டு நிலை வாசலில் கட்டி விடுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சு ஒரு மாதம் வரை உங்கள் வீட்டு நிலை வாசலில் அப்படியே இருக்கட்டும் அடுத்த அமாவாசை அன்று இதை எடுத்து விட்டு புதிதாக வேறு முடிச்சை கட்டிக் கொள்ளுங்கள்.

இந்த முடிச்சை மாற்றி கட்டும் போது உப்பையும், மிளகையும் மட்டும் மாற்றி கட்டினால் போதும் துணியை மறுபடியும் மஞ்சள் தண்ணீரில் நனைத்து காய வைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதே போல் அதில் இருக்கும் நாணயம், தங்கம் இரண்டையும் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த முடிச்சை கழட்ட உப்பு, மிளகு இரண்டையும் தண்ணீரில் கலந்து ஊற்றி விடலாம் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விட்டு விடுங்கள். சிலர் வாடகை வீட்டில் இருப்பார்கள் அப்போது இந்த முடிச்சை கட்டி இருப்பார்கள், அவர்கள் வேறு வீட்டிற்கோ அல்லது சொந்த வீட்டிற்கோ மாறும் போது முடிச்சை கழற்றி உப்பையும், மிளகையும் கால் படாத இடத்தில போட்டு விட்டு நாணயத்தையும், தங்கத்தையும் வைத்து புது வீட்டிற்கு சென்றவுடன் வேறு முடிச்சை இது போல கட்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சுமையான வாழ்க்கையைக் கூட, சுகமாக மாற்றும் சோம்பு! வாழ்க்கையில் வரும் எல்லா விதமான தடைகளும் தவிடுபொடி ஆகும்.

இந்த எளிய உப்பு பரிகாரத்தை செய்து கடன்கள் அடைவதுடன் பணம், நகை சேர்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டு நல்ல ஒரு வளமான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -