கோடி கடனும் காணாமல் போய் செல்வ செழிப்புடன் வாழ இன்று மாலை வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் வளர்பிறை ஆஷாட பஞ்சமி நாளில் வாராகி அன்னைக்கு இதை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்.

varahi cash
- Advertisement -

சப்த மாதர்களில் ஐந்தாவது அன்னையாக இருப்பவர் இந்த வாராகி அன்னை. ஆகையால் தான் வாராகி அம்மனை வழிபட பஞ்சமி நாள் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பஞ்சமி நாளில் அன்னையை நினைத்து நாம் என்ன கேட்டு வேண்டினாலும் அந்த வேண்டுதலுக்கு உடனே செவி சாய்ப்பார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதிலும் வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் இந்த வளர்ப்பிறை ஆஷாட பஞ்சமி நாளில் அன்னையை இப்படி வணங்கினால் கடன் அடைந்து செல்வது செழிப்புடன் வாழலாம். இந்த ஆஷாட பஞ்சமி நீங்கள் ஒன்பது பஞ்சமி வழிபாடு செய்த பலனை தரும். அந்த வழிபாடை பற்றிய தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடன் தீர வாராகி அன்னை வழிபாடு:
பொதுவாக வாராகி அன்னை வழிபாடு மாலை ஏழு மணிக்கு மேல் செய்வது மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. எனவே நாமும் வீட்டில் இன்று மாலை இந்த விசேஷ பூஜையை செய்வது மிகவும் சிறப்பு. மாலை இந்த பூஜையை செய்வதால் காலை முதலில் எளிமையான உணவுகளை உண்டு வழிபடுவது மேலும் சிறப்பை தரும். விரதம் இருந்து வழிபடுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்தால் மேலும் விசேஷமான பலன்களை பெறலாம்.

- Advertisement -

மாலை அன்னைக்கு வழிபாடு செய்வதற்கு முன்பாக அவர்களுக்கு நெய்வேத்தியத்திற்கான பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள். இன்று விசேஷமான பஞ்சமி என்பதால் அன்னைக்கு முழு போஜனம் படைக்க வேண்டும். அதாவது சாப்பாடு, குழம்பு, கூட்டு, பொரியல் , வடை, பாயாசம் என ஒரு விருந்து சாப்பாடு போல தயார் செய்து அன்னைக்கு வைக்க வேண்டும். அதே போல் அன்னைக்கு சாற்ற மஞ்சள் மாலை ஒன்று தொடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சளானது ஒற்றைப் படையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையெல்லாம் தயார் செய்து வைத்த பிறகு மாலையில் பூஜை வேலையை தொடங்கி விட வேண்டும். மாலை பச்சரிசி மாவில் ஒரு சிறிய கோலம் போட்ட  பிறகு வீட்டு வாசலில் விளக்கு ஏற்றிய பின்பு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்னர் வாராகி அம்மன் படம் அல்லது விக்ரகம் வைக்க ஒரு மனை தயார் செய்து அங்கும் பச்சரிசி மாவு கோலம் போட்ட பிறகு மனையை வைத்து கொள்ளுங்கள். அதற்கு மேல் மஞ்சள், சிகப்பு, நீளம் இந்த மூன்று நிறத்தில் ஏதாவது ஒரு நிறத்திலான துணியை போட்டு வைத்து விடுங்கள். அதற்கு மேல் ஒரு தாம்பாளத்தை வைத்து அதன் மேல் அன்னையை அமர வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் கொஞ்சம் மஞ்சளை கெட்டியாக பிடித்து பிள்ளையார் பிடித்து வைத்து விடுங்கள். இப்போது வாராகி அம்மனை மாதுளை மலர் வைத்து வணங்க வேண்டும். மாதுளை மலர் கிடைக்காத பட்சத்தில் மாதுளை இலையாவது வைக்க வேண்டும். இது எதுவும் இல்லை எனும் பட்சத்தில் மட்டும் சிகப்பு நிறத்திலான மலரை அம்மனுக்கு சாற்றி கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் கட்டி வைத்து மஞ்சள் மாலையையும் அன்னைக்கு போட்டு விடுங்கள்.

இதன் பிறகு வெற்றிலை, பாக்கு, பூ, பழம், இத்துடன் கொஞ்சம் பானகத்தையும் கலந்து வைத்த பிறகு அன்னைக்கு சாம்பிராணி தூபத்தை காட்ட வேண்டும். நல்ல வாசனையாக தூபத்தை போட்டு அதில் வெண்கடுகு சேர்த்து தூபத்தை காட்டுங்கள். இந்த தூபத்தை அன்னைக்கு காட்டிய பின்பு உங்கள் வீடு முழுவதும் காட்ட வேண்டும்.

- Advertisement -

இப்போது அன்னைக்கு நாம் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த அர்ச்சனைக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் தான் இன்றைய பூஜையில் மிக முக்கியமானது. அன்னைக்கு மாதுளை முத்துக்கள் எந்த அளவிற்கு பிடிக்குமோ, அதே போல் மாதுளை விதைகளும் மிகவும் பிடிக்கும். அந்த மாதுளை விதைகளை வைத்து தான் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்யும் போது 108 போற்றிகளை சொல்லி இந்த விதைகளையும் போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த நாம அர்ச்சனை செய்யும் போது உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகள், வேறு எந்த வித துன்பமாக இருந்தாலும் அது நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஏற்கனவே எழுதப்பட்ட உங்கள் தலையெழுத்தை இந்த கோவிலுக்கு சென்றால் படைத்த பிரம்மனே மாற்றி எழுதுவாராம் தெரியுமா? நம் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி!

இப்படி அர்ச்சனை செய்த பிறகு நீங்கள் செய்து வைத்திருக்கும் நெய்வேத்தியத்தை அன்னைக்கு படைக்க வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்த பிறகு நெய்வேதியத்தை பிரசாதமாக உண்ண வேண்டும். இந்த வழிபாட்டை இன்றைய தினம் தவறாமல் செய்யும் போது நமக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாராகி அம்மனை இன்று இப்படி வழிபட்டு அம்மனின் அருள் ஆசியை பரிபூரணமாக பெறலாம் என்று கருத்தோடு தகவலை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -