கடன் பிரச்சனையால் கையில் இருக்கும் கடைசி காசையும் இழந்து நிற்கதியாக நிற்பவர்கள் இந்த மூன்று வரி மந்திரத்தை உச்சரித்தால் கடன் தீர்ந்து இழந்தைவற்றை திரும்ப பெற்று ஓஹோவென்று வாழலாம்.

manthiram cash
- Advertisement -

இந்த கடனால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம் நாம் தினமும் நிறைய கேள்விப்பட்டிருப்போம் நாமே அனுபவித்தும் இருப்போம் கடன் வாங்கிய பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல் அதற்கென மேலும் மேலும் கடனை வாங்கி கடனிலே உழன்று எப்பேற்பட்ட வசதியானவர்கள் கூட கடைசியில் ஒன்றும் இல்லாமல் வீதிக்கு வந்த எத்தனையோ பேரை நாம் பார்த்திருப்போம். கடன் பிரச்சனையால் இப்படி ஒன்றும் இல்லாமல் நிற்கதியாக நிற்பது கூட நம் ஊழ்வினையின் பயனே என்று சொல்லப்பட்டிருக்கிறது அப்படியான அந்த கடன் பிரச்சனை தீரவும் நம்முடைய கர்மாவை குறைத்துக் கொள்ள ஒரு அருமையான மந்திரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த மந்திரத்தை கடன் பிரச்சனையால் துன்பப்படுபவர்கள் மட்டும் இன்றி நாம் கடனாக கொடுத்து நமக்கு திரும்ப வராத பணத்தை வரவைத்துக் கொள்ளவும் இதை தொடர்ந்து சொல்லலாம். அது மட்டும் இன்றி இந்த மந்திரத்தை நான் பயன்படுத்தும் போது நம்முடைய வீட்டில் பண வரவு அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் விட இந்த மந்திரத்தை நாம் தொடர்ந்து ஜெபிக்கும் போது நம்முடைய கர்ம வினைகள் படிப்படியாக குறையும்.

- Advertisement -

கடன் தீர்க்கும் மந்திரம்
இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்யும் நாள் அன்று காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு வெள்ளை நிற தாளில் பச்சை நிற மை பேனாவை வைத்து இந்த மந்திரத்தை எழுத வேண்டும்.

லலிதா ஸ்ரீ தரம்
லலிதா பாஸ்கரம்
லலிதா சுதர்சனம்

என்ற இந்த மந்திரத்தை எழுதிய பிறகு இந்த பேப்பரை நான்காக மடித்து பீரோவில் வைத்து விடுங்கள். அதுமட்டுமின்றி இந்த மந்திரத்தை தினமும் உங்களால் எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ மனப்பாடம் செய்து கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

இந்த மந்திரத்தை நீங்கள் தொடர்ந்து சொல்ல சொல்ல இந்த மந்திரம் எழுதிய பேப்பர் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு பணவரவு அதிகரித்து உங்களுடைய முழு கடனும் அடைவதற்கான வாய்ப்பு விரைவிலேயே ஏற்படும். அது மட்டும் இன்றி நீங்கள் யாருக்கேனும் பணம் கொடுத்து வராமல் இருந்தால் அந்த பணமும் உங்கள் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: மணி பரிசில் பணம் வைக்கவே இடம் இல்லாத அளவிற்கு பணம் நிரம்பி வழிய குடும்பத் தலைவியின் கையால் இந்த ஒரு பொருளை பரிசில் வைக்க சொல்லுங்கள்.

இந்த மந்திர பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கை இந்த மந்திரத்தை தினமும் உச்சரிப்பதுடன் இதை எழுதி நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும் வைத்து பணவரவை அதிகரித்து கொள்ளலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -