மணி பரிசில் பணம் வைக்கவே இடம் இல்லாத அளவிற்கு பணம் நிரம்பி வழிய குடும்பத் தலைவியின் கையால் இந்த ஒரு பொருளை பரிசில் வைக்க சொல்லுங்கள்.

- Advertisement -

இப்போதெல்லாம் பலரின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிக்க வேண்டும். பணத்தை சேர்க்க உழைத்து முன்னேற நினைப்பவர்களாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை சம்பாதிக்க முடியாமலும் சம்பாதித்த பணத்தை சேர்க்க முடியாமலும் வீண் செலவுகளாலும் பணம் பற்றாக் குறையாலும் துன்பப்படுகிறார்கள். பணத்தை வைக்க அனைவரும் பயன்படுத்தும் முக்கியமான ஒரு பொருள் மணிபர்ஸ். வீட்டில் இருக்கும் பீரோ வியாபாரம் செய்யும் கல்லாப்பெட்டி இவையெல்லாம் கூட இதற்கு அடுத்த நிலை தான். அப்படி பணத்தை வைக்க பயன்படுத்தும் இந்த மணி பர்சில் ஒரே ஒரு பொருளை வைப்பதன் மூலம் நம்முடைய பணவரத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பொருள் எப்படி வைக்க வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பர்சில் பணம் சேர செய்ய வேண்டியது
நாம் யாரிடமாவது உதவியோ அல்லது கைமாறாக பணமோ கேட்டும் எனில் முதலில் அவர்கள் சொல்வது என்னிடம் பணம் இல்லை அல்லது பஸ்ஸில் பணம் இல்லை என்று சொல்வதோடு ஒரு சிலர் அதை எடுத்துக் காட்டவும் கூட செய்வார்கள். இப்படி பணம் கேட்கும் போது இல்லை என்று சொல்வதோ இல்லாமல் இருக்கும் பரிசை எடுத்து காட்டுவதும் கூடாது. இது பரிசில் பணம் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி இது போன்ற செயல்களை செய்யும் பொழுது நம்முடைய மணிபரிசில் பணம் தாங்காது.

- Advertisement -

அதே போல் பர்சில் தேவையில்லாத பொருட்கள் அதாவது நகை அடமானம் வைத்த பில் யாருக்காவது நாம் கடனாக கொடுக்க வேண்டிய பணத்தை நீண்ட நாட்கள் வைத்திருப்பது, மாத்திரை சீட்டுகள் போன்றவை எல்லாம் வைப்பதை தவிர்க்க வேண்டும். இவைகள் எல்லாம் பணம் பரிசில் தங்குவதற்கான வாய்ப்பை குறைப்பதோடு எதிர்மறை ஆற்றல்களை அங்கு உருவாகி பணம் எப்போதும் அதில் இருக்கும் வாய்ப்பையே இழக்க கூடிய அபாயத்தை ஏற்படுத்தும்.

அதே போல் சில முக்கிய ஆவணங்களை நாம் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் அது போன்றவற்றை கூட இன்றைய விஞ்ஞான காலத்தில் அலைபேசியில் படம் எடுத்து வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் கூட வீட்டில் வைத்து விடலாம். அதே போல் பெண்கள் தலைக்கு குத்தும் ஹேர்பின் துணிக்கு பயன்படுத்தும் சேப்டி பின் போன்றவற்றை பர்சில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

இப்போது இவற்றுடன் பரிசில் பணம் சேர நாம் வைக்க வேண்டிய அந்த பொருளை பற்றி பார்ப்போம். அது வேறு ஒன்றும் இல்லை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த ஏலக்காயை தான் நாம் பரிசல் வைக்க வேண்டும். மகாலட்சுமி தாயானவர் வாசனை மிகுந்த பொருட்களில் வாசம் செய்பவர் அப்படியான பொருட்களில் ஒன்று தான் இந்த ஏலக்காய். இதை மணிப்பரிசில் ஒரே ஒரு துண்டு வைத்தாலும் போதும் பண வரவை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தீர்க்க முடியாத கடன் பிரச்சனைகள் தீரவும், வராத பணம் கைக்கு வரவும் ஒரு சோழியை வைத்து 20 நிமிடம் மட்டும் இதை செய்தால் போதும். கடன் தீர்ந்து பணத்தை வர வைக்கும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரம்.

இந்த ஏலக்காவை வெள்ளி செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில் வீட்டில் மாலை விளக்கு ஏற்றிய பிறகு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக இந்த ஏலக்காவை வைத்து வணங்கிய பிறகு உங்கள் வீட்டு குடும்பத் தலைவி கையில் கொடுத்து அவர்கள் கையாலே மணி பரிசில் வைக்க சொல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டின் மகாலட்சுமி ஆனவர் அந்த வீட்டின் குடும்பத் தலைவி தான். பெண்கள் செய்வதாக இருப்பின் அவர்களை வைத்து வணங்கி அவர்கள் கையாலேயே மணி பரிசில் வைத்துக் கொள்ளலாம். இந்த பரிகார முறைகளில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -