கடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். திங்கட்கிழமை ஒரு கைப்பிடி கல்லுப்பை உங்கள் கையால் இந்த நேரத்தில் தண்ணீரில் கரைத்தால்.

uppu-cash-salt
- Advertisement -

கல்லுப்புக்கும், கடனுக்கும், மகாலட்சுமிக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். கல்லுப்பு முழுக்க முழுக்க மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. பணக்கஷ்டம் தீர இந்த கல்லுப்பை வைத்து எத்தனையோ தாந்திரீக பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டிருந்தாலும், இன்று பார்க்கப் போகும் பரிகாரம் மிக மிக சக்தி வாய்ந்தது. குறிப்பிட்ட இந்த ஹோரையை பயன்படுத்தி கல் உப்பை வைத்து இந்த பரிகாரத்தை செய்தால், உங்கள் கடன் கரைவது உறுதி.

சில பேருக்கெல்லாம் நிறையவே வருமானம் வரும். ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாது. லட்ச லட்சமாக சம்பாதித்தும் கடன்காரர்களாக வாழ்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய அந்த நிலைமையை மாற்றுவதற்கு இதோ ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரம்.

- Advertisement -

கழுத்தை நெரிக்கும் கடன் தீர, வருமானம் பெறுக பரிகாரம்:
திங்கட்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். திங்கட்கிழமை அன்று சனி ஹோரை மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை இருக்கிறது. குறிப்பிட்டு அந்த சமயத்தில் உங்களுடைய இரண்டு கைகளிலும், இரண்டு கைப்பிடி கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

பூஜை அறையில் முதலில் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றிவிட்டு கையில் கல் உப்பை எடுத்துக்கொண்டு, இரண்டு மடி மேலே வைத்துக் கொள்ளுங்கள். அதாவது இரண்டு பக்கமும் தொடை மேலே வைத்துக் கொண்டு கண்களை மூடி தியான நிலையில் கடன் தீர வேண்டும், கடன் கரைந்து போக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

- Advertisement -

உங்கள் முன்னால் ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். 15 நிமிடம் இந்த தியானத்தை செய்து விட்டு கையில் இருக்கும் கல் உப்பை அந்த தண்ணீரில் கரைத்து விட வேண்டும். சரியாக திங்கட்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய செய்ய, உங்கள் கடன் பிரச்சனை எல்லாம் தண்ணீரில் கரைத்த உப்பு போல கரைந்து போகும்.

கையில் இருக்கும் உப்பை தண்ணீரில் கரைக்கும் போது கடன் உங்களை விட்டு கரைந்து போய்விட்டது என்று முடிவு செய்துவிட்டு, அப்படியே உங்கள் கையால் அந்த உப்பை தண்ணீரில் நன்றாக கரைத்து விடுங்கள். உப்பு தண்ணீரில் கரையும் வரை உங்கள் கையால் அந்த உப்பை அப்படியே தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற தாமதமோ, தடையோ இனி இருக்காது. எப்போதும் உங்களுடைய கையில் இந்த 2 பொருட்களை வைத்துக் கொண்டால்.

அவ்வளவுதான் இது ஒரு எளிமையான பரிகாரம் என்றாலும் சக்தி வாய்ந்த பரிகாரம். நம்பிக்கையோடு இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -