5 வெள்ளிக்கிழமைகள் கோவிலில் இருந்து இந்த 1 பொருளை வீட்டிற்கு எடுத்து வாருங்கள். கடன் சுமை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

amman6
- Advertisement -

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்ட கஷ்டப்படுபவர்களை, காப்பாற்றக்கூடிய சக்தி அந்த மகாலட்சுமி தாயாருக்குத்தான் உண்டு. ஆகவே ஐந்து வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்து, அவள் பாதங்களை விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பின் சொல்லக்கூடிய முறையில் மகாலட்சுமி தாயாரை ஐந்து வெள்ளிக்கிழமைகள் தரிசனம் செய்து வழிபாடு செய்து வந்தால், வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் சரியாகும். அதேசமயம் கடன் சுமை படிப்படியாக குறையும். தீராத கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஆன்மீகம் சொல்லும் எளிமையான வழிபாட்டு முறை இதோ உங்களுக்காக.

தீராத கடன் சுமை தீர மகாலட்சுமி வழிபாடு:
எல்லா பெருமாள் கோவிலிலுமே மகாலட்சுமி தாயார் சன்னிதானம் இருக்கும். அந்த அம்பாள் சன்னிதானத்திற்கு சென்று மகாலட்சுமி தேவியை எப்படி வழிபாடு செய்வது. வீட்டில் இருந்து கிளம்பும்போது நீங்கள் இந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும். மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த தாழம்பு குங்குமம், ஒரு தாமரைப்பூ, வாசனை நிறைந்த மல்லிப்பூ வாங்கி உங்கள் கையாலேயே பூக்களை தொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர தீபம் ஏற்றுவதற்கு நெய், விளக்கு திரி, அகல் விளக்கு வீட்டில் இருந்தே மேல் சொன்ன எல்லா பொருட்களையும் எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

கோவிலுக்கு சென்று அம்பாளை தரிசனம் செய்துவிட்டு, இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த குங்குமத்தை குருக்களிடம் கொடுங்கள். மற்ற பொருட்களையும் குருக்களிடம் கொடுத்து விடுங்கள். தாமரைப்பூ, மல்லிகை பூ, இவைகளை மகாலட்சுமிக்கு சூட்டி விடுவார். உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் கொடுக்கும் அந்த தாழம்பூ குங்குமத்தை அம்பாளின் பாதங்களில் வைத்து பூஜை செய்து குருக்களிடமே திரும்பவும் கொடுத்து விட வேண்டும். அந்த குங்குமத்தை அவர் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுவார்.

உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொண்டு சிறிது நேரம் அம்மாள் சன்னதியில் அமர்ந்து உங்கள் கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறுதியாக குருக்களிடம் கொஞ்சமாக அம்பாள் பாதங்களில் இருக்கும் புஷ்பங்களை கேளுங்கள். அந்த புஷ்பங்களை வாங்கிக்கொண்டு பிரசாதமாக எடுத்து வந்து பணம் வைக்கும் பெட்டியில் வையுங்கள். பூஜை அறையில் வையுங்கள்.

- Advertisement -

அம்பாள் பாதங்களில் விழுந்த பூக்களை வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டிற்கு எடுத்து வரும்போது நம் வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் தீரும். ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுடைய கடன் எவ்வளவு இருக்கிறது அந்த தொகையை எழுதி, யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த நபரின் பெயரை எழுதி, அவருக்கு சீக்கிரம் கடனை திருப்பி தர வேண்டும் என்று எழுதி, அம்பாளின் பாதங்களில் இருக்கும் பூக்களை அந்த பேப்பரில் வைத்து மடித்து அப்படியே பீரோவில் வைத்து விடுங்கள். பூ காய்ந்து போனாலும் பரவாயில்லை. இரண்டு மூன்று நாட்களில் எடுத்து பூவை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

மறுவாரம் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சென்று பூவை வாங்கிட்டு வந்து அந்த பேப்பரில் வைக்க வேண்டும். ஐந்து வாரங்களும் மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகைப்பூ, தாமரைப்பூ, தாழம்பூ குங்குமத்தை வாங்கிக் கொண்டு போய் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 5 வாருங்கள் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை விடாமல் நீங்கள் செய்து விட்டால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் தீரும்.

இதையும் படிக்கலாமே: பீரோவுக்கு அடியில் இந்த 2 பொருட்கள் இருந்தால், பீரோவுக்குள் இருக்கும் பணம் வீண்விரயம் ஆகாது. பண வசதி பல மடங்கு பெருகும்.

வீட்டில் இருக்கும் பெண்களால் இடையில் ஒரு வாரம் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் உங்கள் கணவர், உங்கள் பிள்ளைகள், இப்படி உங்கள் வீட்டில் இருப்பவர்களை கோவிலுக்கு அனுப்பி இந்த வழிபாட்டை செய்ய சொல்லலாம். இடையில் தடங்கள் வரக்கூடாது. ஐந்து வெள்ளிக்கிழமை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நடக்கும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள், என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -