பண வரவு அதிகரிக்கும் கடன் தொல்லை நீங்கவும் இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி வர நல்ல பலன் கிடைத்திடும்

kadanthollai
- Advertisement -

இப்பொழுது மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில் பணமும் ஒன்றாக மாறிவிட்டது. பணம் இருந்தால் மட்டுமே சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்தும், அவர்கள் ஆடை அலங்காரத்தை வைத்தும் தான் இன்றைய சமூகம் ஒரு மனிதனை எடை போடுகிறது. அவர்களின் குணமும், ஒழுக்கமும் மற்றவர்களுக்கு பெரிதாக தெரிவதில்லை. அவ்வாறு பணம் படைத்தவன் தான் இன்றைய உலகின் ராஜாவாக இருக்கிறான். எனவே மனிதர்கள் அனைவரும் பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பணத்தை தேடி அலைபவர்களுக்கு எப்பொழுதும் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கிறது. இன்றைய காலம் இவ்வளவு கடினமாக இருந்தால், நம் பிள்ளைகளின் காலம் எப்படி இருக்கும் என்று. இந்த பயத்தில்தான் அனைவரும் தங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பணத்தின் தேவை அதிகமாக இருக்கும்பொழுது பணமும் நம் கையில் அதிகமாக இருக்க வேண்டும். எனவே பண வரவை அதிகரிக்கும் சில ஆன்மீக குறிப்புகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக மளிகை கடைக்கு சென்று வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும் இவ்வாறு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் பணப் புழக்கம் அதிகரிப்பதை உணர முடியும்.

- Advertisement -

வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை நாளன்று உங்களால் முடிந்தவரை ஏழைகளுக்கு உணவினை தானமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு அன்னதானம் செய்யும் பொழுது நமது கடன் சுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணத்தை சேர்த்து வைக்க முடியாமல் வீண்விரயம் ஆகிக் கொண்டே இருப்பவர்கள் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

அதேபோல் எவ்வளவு பணம் வந்தாலும் அதனை சேமிக்க முடியவில்லை என்று கவலைப்படுபவர்கள், நீங்கள் பணம் வைக்கும் பீரோ அல்லது மரப்பெட்டியில் கருநீல துணியை விரித்து வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களிடம் வரும் பணம் வீண் விரயம் ஆகாமல் பத்திரமாக இருக்கும்.

- Advertisement -

கிரகங்களில் செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த கடுகெண்ணெய் உதவி புரிகிறது. செவ்வாய் கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் உங்களிடம் பணவரவும் அதிகரிக்கும். எனவே கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடனை திருப்பி பெற முடியாதவர்கள் கடுகு எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொள்ளும்போது உங்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ அல்லது செயற்கையான முறையில் இப்படி அமைத்துக் கொண்டாலோ உங்கள் கடன் பிரச்சனைகள் விரைவாக குறையும். அதே போல் வீட்டின் வாசலில் அல்லது பின்புறத்தில் பூச்சிகளுக்கு உணவாகப் சர்க்கரை, அரிசி போன்றவற்றை வைக்கும் பொழுது அவற்றின் பசி குறைய குறைய உங்களின் கடன் பிரச்சினையும் குறைந்து கொண்டே வரும்.

- Advertisement -