கடன் பிரச்சனை தீர மிக எளிய பரிகாரம்

kadan prachanai theera pariharam in tamil
- Advertisement -

இன்றைய காலத்தில் எந்த ஒரு நபரும் விரும்பும் ஒரு விடயம் என்பது வாழ்வில் எந்த வகையான கடன் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. கடன் பிரச்சனை என்பது அந்த அளவிற்கு ஒரு மனிதனின் உடல் மன ஆரோக்கியத்தை கெடுக்கும் ஆற்றல் வாய்ந்ததாகும். அந்த வகையில் தங்களுக்கேற்பட்டிருக்கின்ற கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடன் பிரச்சனை தீர பரிகாரம்

மிகப்பெரிய அளவில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் அந்தக் கடன் பிரச்சனைகள் தீர இந்த ஒரு பரிகாரத்தை முறையாக செய்தால் நிச்சயம் பலன் உண்டு என கூறப்படுகிறது. தினமும் காலையில் குளித்து முடித்த பிறகு அனுமன் சாலிசா ஸ்தோத்திரத்தை ஒரு நாளைக்கு 108 எண்ணிக்கை வீதம் 40 நாட்களுக்கு தொடர்ந்து துதித்து வர வேண்டும்.

- Advertisement -

இந்த அனுமன் சாலிசா துதித்து வருகின்ற 40 நாள் காலத்தில், அதை துதிப்பவர்கள் புலால் உணவு, மது அருந்துதல், தாம்பத்திய உறவு போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். வெங்காயம், பூண்டு போன்றவற்றை சேர்க்காத சைவ உணவுகளையே உண்ண வேண்டும். இந்த பரிகாரத்தை ஆண்கள் செய்வதே நல்லது என அறிவுறுத்துகின்றனர். பெண்களுக்கு கடன் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் சார்பாக அந்த குடும்பத்தில் இருக்கின்ற ஆண் எவரேனும் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உறுதியாக மிகப்பெரிய கடன் பிரச்சனை கூட தீர வழி பிறக்கும்.

வாஸ்து சாஸ்திரப்படி தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற எக்கச்சக்கமான கடன் பிரச்சனை தீரவும், விரைவிலேயே வாங்கிய கடனை அடைத்து முடிக்கின்ற காலம் வரை தங்களது வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறங்கி எழுந்து வருவதால் கடன்களை அடைக்க முடியும் என கூறப்படுகிறது. அதேபோன்று வடக்கு திசையில் வாசல் வைத்த வீட்டில் கடன்களை அடைக்கின்ற காலம் வரை குடியிருப்பதாலும் கடன் பிரச்சனை விரைவில் தீரும் என்றும் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

தாங்கள் வாங்கிய எப்படிப்பட்ட அளவிலான கடன் தொகையையும் விரைவில் அடைத்து முடிக்க வளர்பிறை வியாழக்கிழமைகளில் இரவு 12 மணியளவில் “ஸ்ரீ சூக்தம்” மந்திர பாராயணம் செய்து வந்தால் விரைவிலேயே தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கடன் பிரச்சனைகள் தீரும் எனவும், இது அதிக மக்களுக்கு தெரியாத ஒரு ரகசிய தாந்திரீக பரிகாரம் எனவும் கூறப்படுகின்றது.

தங்களின் வாழ்வில் எந்த ஒரு தேவைக்காகவும் அதிகளவில் கடன் வாங்கி, அந்த கடனை விரைவில் அடைக்க முடியாமல் தவிப்பவர்கள் தங்கள் வீட்டு வளாகத்தில் ஒரு சுபமுகூர்த்த நாளில் அசோக மரக்கன்றை நட வேண்டும். அந்த அசோக மரக்கன்றிற்கு தினமும் தண்ணீர் ஊற்றி, அந்த மரம் நன்றாக வளர்வதை உறுதி செய்ய வேண்டும். அசோகா மரம் வளர, வளர தங்களுக்கேற்பட்டிருக்கின்ற அனைத்து கடன் பிரச்சனைகளும் தீர்ந்து மன நிம்மதி பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: கல்யாண பரிகாரம்

தாங்கள் வாங்கிய கடன் என்பது மிகப்பெரிய அளவில் இருந்தாலும் சரி அல்லது மிகக் குறைவான தொகையாக இருந்தாலும் சரி கடனை திருப்பி செலுத்தும் பொழுது தேய்பிறை செவ்வாய்க்கிழமை தினத்தில் கடன் தொகையில் முதல் தவணையை திருப்பி செலுத்துவதால் விரைவிலேயே தங்கள் வாங்கிய கடன்களை அடைத்து விட முடியும்.

- Advertisement -