விரைவில் திருமணம் நடக்க கல்யாண பரிகாரம்

Pariharam for marriage in Tamil
- Advertisement -

ஒரு மனிதனை அவனது வாழ்வின் உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் திருமணம் என்னும் அமைப்பிற்கு உண்டு. திருமணம் நல்ல முறையில் அமைந்தால் அந்தப் பந்தத்தில் இருக்கின்ற ஆண் -பெண் சிறப்படைவது மட்டுமல்லாமல் அவர்களின் இல்லறமும் சிறக்கும். ஆனால் ஒரு சிலருக்கு குறிப்பிட்ட கால வரையறைக்குள் திருமணம் நடைபெறாமல் போய்விடுகிறது. இதற்கு நாம் பல காரணங்கள் விலக்கிக் கொண்டே செல்லாம். மிக சீக்கிரத்தில் திருமணம் நடைபெற ஆண் – பெண் ஆகிய இருவருக்கும் ஏற்ற திருமண பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கல்யாண பரிகாரம்

திருமணமாகாத ஆண்கள் வியாழக்கிழமைகளில் பருவம் அடையாத பெண் குழந்தைகளுக்கு முக அழகு சாதன பொருட்கள் மற்றும் இனிப்புகளை தானமாக அளிப்பதால் சீக்கிரத்திலேயே திருமணம் யோகம் அவர்களுக்கு கூடி வரும். அதேபோன்று புதன்கிழமைகளில் திருநங்கை ஒருவருக்கு பசலைக் கீரை மற்றும் தங்கள் சக்திக்கு இயன்ற பண உதவி செய்வதாலும் திருமண தாமத தோஷங்கள் நீங்கி, நல்ல வாழ்க்கை துணை அமையும். ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் விநாயக பெருமானுக்கு மலர்கள் சாற்றி, தூபங்கள் கொளுத்தி வழிபாடு செய்வதாலும் திருமண தாமதமாகின்ற ஆண்கள் மனதிற்கினிய வாழ்க்கை துணை அமையப் பெறுவார்கள்.

- Advertisement -

ஆண் – பெண் யாராக இருந்தாலும் திருமண தாமதம் ஏற்படாமல் மிக விரைவிலேயே இல்லற வாழ்க்கை அமைய வியாழக்கிழமைகளில் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். விரைவில் தங்களுக்கான திருமண வாழ்க்கை அமைவே வேண்டும் என மனதார விரும்புபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் 5 மஞ்சள் நிற லட்டுகளை விஷ்ணு பகவான் மற்றும் லட்சுமி தாயார் ஆகிய தெய்வங்களுக்கு நைவேதியம் செய்து வழிபாடு செய்து வந்தால் வேண்டியது கிடைக்கப் பெறுவார்கள்.

தினந்தோறும் தங்கள் வீட்டு பூஜை அறையில் விரல் அளவிற்கு குறைவாக படிகத்தால் செய்யப்பட்ட ஒரு சிவலிங்கத்தை வைத்து, தினமும் அந்த சிவலிங்கத்திற்கு தூய்மையான நீரை ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தாலும், அந்த பெண்களுக்கு விரைவிலேயே திருமண வாழ்க்கை அமையும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இந்த சிவலிங்க பூஜையை செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏதேனும் ஒரு திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தினத்தன்று அருகில் உள்ள சிவபெருமான் கோயிலுக்கு சென்று சிவ – பார்வதிக்கு சிவப்பு நிற வஸ்திரம், சிவப்பு நிற வளையல்கள் மற்றும் குங்குமம் காணிக்கையாக வைத்து வழிபாடு செய்யும் திருமணமாகாத நபருக்கு நல்ல முறையில் திருமணம் நடந்து வாழ்க்கை இனிமையானதாக மாறும்.

“ஓம் நமோ பக்வதே ருக்மணி வல்லபாய ஸ்வாஹா”
எனும் மந்திரத்தை திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் தினந்தோறும் 108 எண்ணிக்கையில் துதித்து வந்தால் தங்களின் மன விருப்பத்திற்கேற்ற வகையில் நல்ல குணநலன்கள் கொண்ட மாப்பிளை வரன் அமையப்பெற்று சிறந்த இல்லற வாழ்க்கை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: சனி பெயர்ச்சி பரிகாரம்

“பத்னி மனோரமாம் தேஹி மனோவ்ருத்தானுசாரிணீம்.
தாரிணீம் துர்கசன்சார் சாகரஸ்ய குலோத்பவம்”.

எனும் மந்திரத்தை ஏதேனும் ஒரு வியாழக்கிழமை என்றோ அல்லது பூச நட்சத்திர தினத்தன்று திருமணம் ஆகாத ஆண்கள் துதிக்க தொடங்கி தினமும் 108 எண்ணிக்கையில் துதித்து வருவதால் சீக்கிரத்திலேயே அவர்களுக்கு திருமணம்  நடைபெறும்.

- Advertisement -