இந்தப் பிள்ளையார் படத்தினை நிலை வாசலில் மாட்டி வைத்தாலே போதும். கடன் என்ற வார்த்தை காற்றில் கலந்து கூட உங்கள் வீட்டிற்குள் நுழையாது. கடனையும் சீக்கிரமே திருப்பிக் கொடுத்துவிடலாம்.

ganapathy-kadan
- Advertisement -

வெறும் 5 ரூபாய்க்கு கற்பூரத்தை வாங்கி இறைவனுக்கு ஏற்றிவைத்துவிட்டு, வேண்டிய வேண்டுதல்களை உடனடியாக அடைந்தவர்களும் உண்டு. 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து பரிகாரம் செய்து பரிகாரத்திற்கு ஒரு துளி அளவு கூட பலன் கிடைக்காமல் போனவர்களும் உண்டு. ஆக நாம் எவ்வளவு காசு செலவழித்து பரிகாரம் செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எந்த அளவிற்கு நம்பிக்கையோடு அந்த பரிகாரத்தை செய்கின்றோம் என்பதில் தான் சூட்சமம் அடங்கியுள்ளது. பரிகாரத்திற்கு மூலதனம் பணம் கிடையாது. நம்பிக்கை மட்டும்தான். இதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த பதிவிற்குள் செல்வோம்.

தீராத பண பிரச்சனையால் கடன் சுமையால் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு ஆன்மீக ரீதியாக சில தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. பின் சொல்லக்கூடிய விஷயங்களை உங்களால் முடிந்தவரை நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தாலே கடன் பிரச்சனையில் இருந்து படிப்படியாக, முழுமையாக வெளி வந்துவிடலாம்.

- Advertisement -

முதலில் கடனை அடைக்க சரியான நேரம் என்றால் அது செவ்வாய்க்கிழமை அன்று வரக்கூடிய செவ்வாய் ஹோரை தான். கூடுமானவரை உங்களுக்கு எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் அதில் ஒரு சிறிய தொகையை, யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவர்களுக்கு இந்தச் செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையில் கடனை திருப்பிக் கொடுங்கள். உங்களுக்கு இருக்கக் கூடிய கடன் அதன் பின்பு படிப்படியாக வெகு சீக்கிரத்தில் குறைய ஆரம்பிக்கும். பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

இதேபோல் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் வரும் போது குறிப்பிட்ட அந்த நேரத்தில் உங்களுடைய கடன் தொகையை திருப்பிக் கொடுத்தாலும், கடன் பிரச்சனையில் இருந்து சீக்கிரமே விடுபட முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம். எப்போது கிரகணம் வருகிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டாலும் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர முடியும்.

- Advertisement -

சனிக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்து வரக்கூடிய நாள் இன்று கடன் தொகையை திருப்பிக் கொடுக்கும் பட்சத்தில் நம்முடைய கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையும். அடுத்தபடியாக செவ்வாய்க்கிழமையும் நவமி திதியும் சேர்ந்து வரும் நாளில் உங்களுடைய கடன் தொகையை திருப்பிக் கொடுத்து வந்தாலும் கடன் படிப்படியாக குறையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படமாட்டீங்க.

உங்கள் வீட்டின் அருகில் தோரண கணபதியின் சன்னிதி இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று, தோரண கணபதியை செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்ய வேண்டும். தோரண கணபதிக்கு முன்பாக 3 நெய் தீபங்களை ஏற்றி வைத்துவிட்டு, கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்படி செய்தால் உங்களுடைய கடன் பிரச்சனை படிப்படியாக சீக்கிரத்தில் குறைவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

நம்முடைய வீட்டில் நிலை வாசல் படியில் தோரண கணபதியின் திரு உருவப் படத்தினை மாட்டி வைத்தால் நம் வீட்டிற்குள் கடன் நுழையாமல் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது கஷ்டங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நம்மை தேடி கடன் வராது. நம்பிக்கை உள்ளவர்கள் நிலை வாசலில் இந்த தோரண கணபதி படத்தை மாட்டி வையுங்கள். நிச்சயமாக உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் தீர்ந்து வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -