வாங்கிய கடனை திரும்ப கொடுக்கவும் கொடுத்த கடனை திரும்ப வாங்கவும் செய்யக்கூடிய பரிகாரம்

hanuman money
- Advertisement -

பணம் என்ற மூன்றெழுத்து சொல் ஒருவருடைய வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றுகிறதோ அதே போல் தான் பணம் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனையான கடன் என்னும் மூன்றெழுத்து சொல்லும் ஒருவருடைய வாழ்க்கையை அடி பாதாளத்திற்கு கூட கொண்டு சென்று விடும். கடனை கொடுத்தாலும் பிரச்சினைதான் வரும். அதே சமயம் கடனை வாங்கினாலும் பிரச்சினைதான் வரும். அதனால் முடிந்த அளவிற்கு கடன் வாங்காமல் நம்முடைய வருமானத்திற்கு உள்ளேயே நாம் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கடன் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்க ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

ஆஞ்சநேயர் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்ற தெய்வமாக திகழ்கிறார். கடன் ரீதியான பிரச்சினைகளுக்கு நமக்கு காரணமாக திகழ்பவர் செவ்வாய் பகவான் என்பதால் கடன் ரீதியான பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் கண்டிப்பாக முறையில் ஆஞ்சநேயரை வழிபட்டால் அந்த பிரச்சினையில் இருந்து அவர்களால் வெளியில் வந்து விட முடியும். அப்படிப்பட்ட ஒரு ஆஞ்சநேயர் வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். ஆனால் இந்த வழிபாட்டிற்குரிய பொருட்களை திங்கட்கிழமை அன்றே வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்துவிட வேண்டும். இந்த வழிபாட்டிற்கு தேவையான பொருட்களாக கிழியாத நல்ல வெற்றிலைகளாக பார்த்து எட்டு வெற்றிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் மூன்று கொட்டை பாக்குகளை வைக்க வேண்டும்.

அதற்கு மேல் வாசம் மிகுந்த சுத்தமான நல்ல குங்குமமாக பார்த்து வாங்கி சிறிது குங்குமத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நம்மால் குறைந்தபட்சம் எவ்வளவு தொகையை வைக்க முடியுமோ அந்த தொகையை காணிக்கையாக அந்த வெற்றிலையின் மீது வைத்துவிட வேண்டும். இந்த வெற்றிலை செட்டை வீட்டில் இருக்கும் பெருமாள் படத்திற்கு முன்பாகவோ அல்லது ராமரின் படத்திற்கு முன்பாகவோ திங்கட்கிழமை அன்றே வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் செவ்வாய் கிழமை அன்று இந்த வெற்றிலை பாக்கு செட்டை அப்படியே எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய ஆஞ்சநேயரின் பாதத்தில் இந்த வெற்றிலை செட்டை அப்படியே வைத்து விட வேண்டும். பிறகு ஆஞ்சநேயரை 11 முறை வலம் வந்து நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூற வேண்டும். குறைந்தபட்சம் ஆஞ்சநேயரிடம் நாம் அரை மணி நேரமாவது அமர்ந்து நம்முடைய பிரச்சினைகளை கூற வேண்டும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நாம் செய்து வர வேண்டும். ஒன்பதாவது வாரம் ஆஞ்சநேயருக்கு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய வஸ்திரத்தை வாங்கி கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய கடன் ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். நமக்கு வரவேண்டிய பணமும் வந்து சேரும். அதே சமயம் நாம் கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்து விடுவோம்.

இதையும் படிக்கலாமே: 3.3.2024 தேய்பிறை அஷ்டமி, எதிரி தொல்லையில் இருந்து விடுபட வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களின் வாழ்வில் கடன் என்ற பேச்சிற்கு இடமே இருக்காது.

- Advertisement -