கடன் பிரச்சினை தீர எளிய வழிமுறையும், வழிபாட்டு முறையும்.

murugar
- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றன. அது ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை இருக்கும் அனைத்து உயிர்களுக்குமே பொதுவான ஒன்று. இதில் மனிதராக பிறந்தவர்கள் தான் மட்டும் நன்றாக இல்லாமல் தன்னைச் சேர்ந்த தன் குடும்பத்தினரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த ஆசையால் தங்கள் சக்திக்கு மீறி கடன் என்ற ஒன்றை வாங்கி பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். அப்படி பிரச்சினையில் இருப்பவர்கள் எந்த வழிபாட்டு முறையை மேற்கொண்டால் கடன் பிரச்சினையில் இருந்து வெளி வர முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கடன் அன்பை முறிக்கும் என்று ஒரு பழமொழி வழக்கில் இருந்து வருகிறது. இது வியாபாரத்தில் மட்டும் அல்லாமல் அனைத்து இடங்களிலும் பொருந்தக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. யாரொருவர் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்கிறார்களோ அவர்களே அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். அந்த அதிர்ஷ்டசாலிகளை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகத்தான் இந்த காலத்தில் இருந்து வருகிறது. சரி கடன் பிரச்சனையில் மாட்டிக்கொண்டவர்கள் வெளியில் வருவதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் கடன் தொகையிலிருந்து ஒரு அசல் தொகையை திருப்பி வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவிலேயே கடன் பிரச்சனை என்பது தீரும். அது மட்டுமல்லாமல் சனிக்கிழமை அன்று பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் சேர்ந்து வந்தால் விரைவிலேயே கடன் சுமை தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

மேலும் சனிக்கிழமையும், வியாழக்கிழமையும் எந்த காரணத்தை கொண்டும் கடன் சம்பந்தமான எந்த விஷயங்களையும் நாம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தோம் என்றால் கடன் என்பது நம்மை மூழ்கடித்து விடும் என்று கூறப்படுகிறது. சரி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றால் எப்பொழுது வாங்கினால் கடன் விரைவில் அடையும் என்ற கேள்வி சிலருக்கு ஏற்படும்.

- Advertisement -

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்கள் செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் நாளில் செவ்வாய் ஹோரையில் நாம் கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடும் பொழுது அந்தக் கடன் பிரச்சனை என்பது விரைவிலேயே அடைந்து விடும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிபாட்டை இப்பொழுது பார்ப்போம். செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் அருகில் இருக்கக் கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகனுக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி தீபமேற்றி வழிபட வேண்டும். மேலும் அங்கு இருக்கக்கூடிய நவகிரகங்களில் அங்காரகனுக்கும் சிவப்பு நிற மலர்களை சாற்றி தீபமேற்றி வழிபட்டு வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த எளிய பரிகாரத்தை பிள்ளைகள் செய்யும் பொழுது படிப்பில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்.

இவ்வாறு தொடர்ந்து யார் ஒருவர் வழிபாடை மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு அங்காரகனும், அங்காரகனின் தெய்வமான முருகப்பெருமானும் பரிபூரணமாக அருள்புரிந்து அவர்களின் கடன் பிரச்சனையில் இருந்து அவர்களை வெளியில் கொண்டு வருவதற்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவார்கள்

- Advertisement -