11 நாட்களில் கடன் பிரச்சனையை தீர்க்கும் பரிகாரம்

perumal2
- Advertisement -

கழுத்தை நெறிக்கக் கூடிய கடனிலிருந்து முழுமையாக வெறும் பதினொரு நாளில் வெளிவருவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. உங்களுக்குத் தான் தெரியும். நீங்கள் அடுத்தவர்களிடம் கைநீட்டி எவ்வளவு கடன் வாங்கி வைத்துள்ளீர்கள். அந்த கடனுக்கு எவ்வளவு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறீர்கள், அதை திருப்பித் தர உங்களுடைய பொருளாதார சூழ்நிலையை எந்த அளவுக்கு உயர்த்த வேண்டும், என்பது, இதெல்லாம் தெரிந்தால் தான் வாங்கிய கடனை எத்தனை நாட்களுக்குள் திருப்பி கொடுக்க முடியும் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதையும் தாண்டி இறைவன் என்று ஒருத்தன் இருக்கின்றான். நம்முடைய தலைவிதி என்று ஒன்று இருக்கிறது. அதை மாற்றிவிட்டால் போதும். பொருளாதாரம் தானாக மேலே உயர்ந்துவிடும். செல்வ செழிப்பு அதிகரித்து விடும். பிறகு வாங்கிய கடனை சீக்கிரம் திருப்பி தருவதற்கான வாய்ப்புகளும் கிடைத்துவிடும். நொடிந்து போய் இருக்கும் உங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி வாங்கிய கடனை எல்லாம் உடனடியாக திருப்பித் தருவதற்கான ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

கடன் தீர்க்கும் வழிபாடு

இந்த பரிகாரத்தை காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு செய்ய வேண்டும். காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பரிகாரம் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்‌. இந்த வழிபாட்டிற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் பரங்கி விதை. பச்சை நிறத்தில் விதைகள் கடைகளில் விற்கும். இதை பதப்படுத்தி வறுத்த விதைகளாகவே விற்கிறார்கள்.

அதை வாங்கி ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் 1 ஸ்பூன் அளவு அந்த பரங்கி விதையை ஒரு கிண்ணத்தில் போட்டு, பூஜை அறையில் வைத்து விடுங்கள். மனம் உருகி பெருமாளையும் குபேரரையும் பிரார்த்தனை செய்து கொண்டு, உங்கள் கடன் அடைய வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.

- Advertisement -

முதலில் உங்களுக்கு திருப்பி தர வேண்டிய கடன் எதுவோ, அந்த கடனை நினைத்துக் கொள்ளுங்கள். யாருக்கு பணத்தை திருப்பி தர வேண்டுமோ அந்த நபரையும் நினைத்துக் கொண்டு, இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வேண்டுதலை முடித்துவிட்டு இறைவனுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு பூஜை அறையில் வைத்த அந்த பரங்கி விதையை எடுத்து நீங்கள் சாப்பிட்டு விட வேண்டும்.

11 நாள் இந்த வழிபாட்டு முறையை இடைவிடாமல் செய்து வந்தால் உங்கள் கடன் பிரச்சனை சீக்கிரமாக தீரும். பணம் சம்பாதிக்கவே முடியாத நிலையில் இருக்கும் உங்களுடைய, பொருளாதார நிலை ஒரு சில நாட்களிலேயே உயர தொடங்கி விடும். பொருளாதார முன்னேற்றத்தை அந்த ஆண்டவன் உங்களுக்கு கொடுத்து விட்டால், நீங்கள் கடன் சுமையிலிருந்து சுலபமாக வெளிவந்துவிடலாம் அல்லவா. ஆகவே இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்யுங்கள்.

- Advertisement -

ஆண்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். பெண்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஆனால் பதினோரு நாட்களில் இடையில் ஒரு நாள் கூட தவறவிடக்கூடாது. வழிபாட்டை இடையில் ஒருநாள் தவற விட்டாலும் மீண்டும் அடுத்த நாள் பரிகாரத்தை தொடங்கும்போது, புதுசாக நீங்கள் நாள் கணக்கை வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: திடீர் பணவரவை ஏற்படுத்தும் பரிகாரம்

அன்றிலிருந்து மீண்டும் 11 நாள் கணக்கு வைத்து வழிபாட்டை மேற்கொள்ளும் போது தான், முழு பலனையும் உங்களால் அடைய முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள் பெருமாள் உங்களுக்கு கணக்கு பார்க்காமல் செல்வ வளத்தை கொட்டிக் கொடுப்பார் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -