திடீர் பணவரவை ஏற்படுத்தும் பரிகாரம்

cash gomathi sakkaram
- Advertisement -

மனிதனுடைய வாழ்வில் பணப் பிரச்சனை என்பது எப்போதுமே இருக்கக் கூடியது தான். ஏனெனில் மனிதனுடைய தேவைக்கு அவன் சம்பாதிக்கும் பணத்திற்கும் சம்பந்தமில்லாத ஒரு சூழ்நிலையில் தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எப்போதும் பணம் தேவை இருந்து கொண்டே இருக்கிறது அதற்காக நாம் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

சில நேரங்களில் கடன் வாங்கி சிக்கலில் மாட்டி தவிக்கிறோம் இது ஒரு புறம். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென பெரும் பண செலவு வந்து விடும். இது அனைவரும் சந்திக்க கூடியது தான். அப்படியான சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து விடுவோம். அந்த நேரத்தில் இது போன்ற பரிகாரம் கை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

திடீர் பணவரவை ஏற்படுத்தும் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு கோமதி சக்கரம் தேவை. அத்துடன் மஞ்சள் நிறத்திலான பட்டுத்துணி ஒரு சிறிய கர்சிப் அளவு வேண்டும். பட்டு துணி என்றால் ஒரிஜினல் பட்டு கிடையாது ஷைனிங் துணி இப்போது கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கிக் கொண்டால் கூட போதும்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக மகாலட்சுமி தாயார் முன்பு ஒரு தீபத்தை ஏற்று வைத்து விடுங்கள். இப்போது நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 11 கோமதி சக்கரத்தையும் ஒரு முறை சுத்தமான தண்ணீரில் அலசி எடுத்து விடுங்கள். அதன் பிறகு கோமதி சக்கரத்தின் மீது மஞ்சளை பன்னீர் ஊற்றி குழைத்து ஒரு சிறிய பொட்டு வைத்து அதை சிறிது நேரம் அப்படியே ஆற விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு பூஜையறையில் மஞ்சள் நிற துணியை வைத்து விட்டு அதன் மேல் இந்த கோமதி சக்கரம் ஒவ்வொன்றையும் ஒன்றின் மேல் ஒன்றாக அடக்குங்கள். நீங்கள் அடுக்கிய பிறகு கோமதி சக்கரம் கீழே விழுந்து விடும் பரவாயில்லை ஆனால் வைக்கும் போது அடுக்கியவாறு வைக்க வேண்டும் அது தான் முக்கியம். இந்த 11கோமதி சக்கரத்தையும் வைத்த பிறகு அதை ஒரு சிறிய மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

அடுத்து இந்த மூட்டையை ஓடும் நீரில் விட வேண்டும் அது தான் இந்த பரிகாரத்திற்கான முழு பலனையும் கொடுக்கும். தண்ணீர் ஓடாமல் தேங்கி நிற்கும் இடத்தில் இதை போடக் கூடாது. ஒடும் நீர் எதுவும் இல்லை என்றால் கடலில் சென்று போட்டு விடுங்கள். ஓடும் தண்ணீரில் போடவில்லை என்றால் இந்த பரிகாரம் பயன் தராது. எப்போதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் பண தேவை அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த தொகை அந்த நேரத்தில் கிடைக்கலாம் அல்லது புதிதாக வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கலாம். சில நேரங்களில் நாம் பிறரிடம் கேட்ட பணம் கைக்கு வருவது போல் இருக்கும் ஆனால் தடைப்படும். அது நீங்கி பணம் கைக்கு வரும் வாய்ப்பு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: கவலைகள் தடைகள் நீங்க வழிபாடு

இப்படி பணம் ஏதோ ஒரு வகையில் நம் கைக்கு வருவதற்கு இந்த பரிகாரம் உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்தால் பலனை பெறலாம்.

- Advertisement -