17.6.2023 ஆனி அமாவாசை அன்று, மாலை இந்த 3 பொருட்களை ஒன்றாக பூஜை அறையில் வைத்தால், தண்ணீரில் கரைத்த உப்பு போல உங்கள் கடன் பிரச்சனை அனைத்தும் காணாமல் போகும்.

amavasai3
- Advertisement -

வரும் சனிக்கிழமை 17.6.2023 ஆம் தேதி இந்த ஆனி அமாவாசை வருகின்றது. இந்த அமாவாசை மிக மிக சிறப்பு வாய்ந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணம் காரியங்களை முறையாக செய்து விடுங்கள். அது மட்டும் இல்லாமல் அமாவாசை அன்று செய்யக்கூடிய குலதெய்வ வழிபாடு நமக்கு நிறைவான முழு பலனை கொடுக்கும். அமாவாசை பிறக்கக்கூடிய சரியான நேரம் என்ன. உங்களுடைய வீட்டில் அமாவாசை அன்று பூஜை அறையில் முன்னோர்களுக்கான வழிபாட்டை எந்த நேரத்தில் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் கோடான கோடி கடனைக் கூட அடைப்பதற்கு ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரமும் இந்த பதிவின் இறுதியில் உங்களுக்காக.

வரும் சனிக்கிழமை 17.6.2023 ஆம் தேதி காலை 9:49 மணிக்கு அமாவாசை பிறக்கின்றது. அடுத்த நாள் காலை ஞாயிற்றுக்கிழமை 10:54 வரை அமாவாசை திதி இருக்கின்றது. ஆகவே சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு மேல் வழக்கம் போல மதிய சாப்பாடு சுத்தபத்தமாக செய்து பூஜையறையில் முன்னோர்களுக்கு படைத்துவிட்டு அதை எச்சில் படாமல் காகத்திற்கு வைத்துவிட்டு, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை செய்து முடித்து, அதன் பின்பு விரதம் இருப்பவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

- Advertisement -

அமாவாசை அன்று, கடன் தீர பூஜை அறையில் செய்ய வேண்டிய பரிகாரம்:
கடன் தீர பரிகாரத்தை பூஜையறையில் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்த்து விடுவோம். நாளை முன்னோர்கள் வழிபாட்டை மதிய நேரம் முடித்து விடுவீர்கள். மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கவும். குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளவும். மஞ்சள் நிறத்தில் சதுர வடிவில் ஒரு துணி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணியில் ஒரு கைப்பிடி கல் உப்பு, 1 ரூபாய் நாணயம், சின்ன தங்க மோதிரம், கம்பல், மூக்குத்தி எதுவாக இருந்தாலும் ஒன்று அந்த உப்பின் மேல் வையுங்கள்.

குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர வேண்டும். அடமானத்தில் இருக்கும் நகை சொத்து பத்திரங்கள் எல்லாம் சீக்கிரம் மீட்கப்பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த முடிச்சை தயார் செய்து கட்டி அப்படியே மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இறுதியாக ஒரு கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இரவு முழுவதும் அந்த முடிச்சு பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் 10.30 மணிக்கு முன்பாக ஒரு சுத்தமான டம்ளரில் தண்ணீரை எடுத்து இந்த முடிச்சில் இருக்கும் கல்லுப்பை மட்டும் உங்கள் கையால் எடுத்து, அந்த தண்ணீரில் போட்டு கரைத்து விடுங்கள்‌. (கடன் கையை விட்டு கரைந்து போய்விட்டது என்று முடிவு செய்து இந்த கல்லுப்பை தண்ணீரில் கரைக்கவும்.) அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கோவில் உண்டியலில் போடலாம். தங்கத்தை எடுத்து நீங்கள் வழக்கம் போல பீரோவில் வைக்கலாம். அல்லது போடக்கூடிய தங்கமாக இருந்தால் நீங்கள் அணிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வந்தராய் வாழ தன ஆகர்சனம் மிக்க கருமஞ்சளை இந்த இடத்தில் வைத்து விடுங்கள் போதும். பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்.

அமாவாசை திதியில் இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு செய்தால் உங்கள் கையில் எடுத்து கல்லுப்பை தண்ணீரில் கரைத்தீர்கள் அல்லவா, கையில் இருந்த கல்லுப்பு கண்ணுக்கே தெரியாமல் காணாமல் போய்விட்டதல்லவா, அதேபோலத்தான் உங்களுடைய கடனும் உங்களை விட்டு காணாமல் போய்விடும். கஷ்டமே இல்லாமல் கடன் சுமையை எல்லாம் இறக்கி வைத்து விடுவீர்கள். கடனை எல்லாம் திருப்பி அடைத்து விடுவீர்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இது. இதில் நம்பிக்கை ரொம்ப ரொம்ப முக்கியம். ஆகவே முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -