ஆண்கள் இந்த விளக்கை ஏற்றினால் கழுத்தை நெறக்கும் கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் தப்பித்துக் கொள்ளலாம்.

vilakku
- Advertisement -

பெரும்பாலும் கடன் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னம் ஆவது ஆண்கள் தான். அவர்களுடைய தேவைக்காக, அவர்கள் வீட்டினுடைய தேவைக்காக கடன் வாங்கி கஷ்டப்பட்டு காலமே முடிந்து விடுகிறது. கடன் சுமையில் சிக்கி தவிக்க கூடிய ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு பிரத்தியேகமான பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்தால் ஆண்கள் கடன் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

எப்படி தெரியுமா. ஆண்களுக்கான வருமானம் அதிகரிக்கும். செலவை சமாளிப்பதற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை அமையாது. நீங்கள் ஏற்கனவே நிறைய கடனை வாங்கி வைத்திருந்தாலும், அந்த கடனை திருப்பித் தருவதற்கு தேவையான வருமானத்தை அந்த கடவுள் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான். அப்படி என்னங்க விளக்கு. உடனே சொல்லுங்க நாங்களும் ஏற்றுகின்றோம் என்று ஆர்வமாக இருப்பவர்களுக்கு மட்டும் இதோ ஆன்மீகம் சார்ந்த கடன் தீர்க்கும் விளக்கு பரிகாரம்.

- Advertisement -

கடன் தீர ஆண்கள் ஏற்ற வேண்டிய விளக்கு:
இந்த பரிகாரத்திற்கு கடுகு எண்ணெய், பஞ்சு திரி, அகல் விளக்கு, இந்த பொருட்கள் இருந்தால் போதும். இதோடு இன்னொரு முக்கியமான பொருளும் தேவை அதை பிறகு பார்க்கலாம். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள். எந்த கோவிலாக இருந்தாலும் சரி, பிள்ளையார் கோயில், அம்மன் கோவில், சிவன் கோவில், பெருமாள் கோவில் என்று எந்த கோவிலிலும் இந்த விளக்கை ஏற்றலாம். கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக ஒரு இடம் இருக்கும் அல்லவா அந்த இடத்தில் விளக்கை வைத்துவிட்டு கடுகு எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.

ஒரே ஒரு மண் அகல் விளக்கு போதும். அதில் நீங்கள் போட வேண்டிய பொருள். கிராம்பு, மேலே அந்த மொட்டு இருக்கக்கூடிய கிராம்பை அதில் போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். சிக்கலான பிரச்சனைகள் வாழ்க்கையில் வரக்கூடாது என்ற வேண்டுதலை ஆத்மார்த்தமாக செய்து கொண்டு கோவிலிலேயே ஒரு 5 நிமிடம் அமர்ந்து மனதை அமைதிப்படுத்தி ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள்.

- Advertisement -

பிறகு நீங்கள் உங்கள் வேலையை பார்க்க செல்லலாம். இதே போல தொடர்ந்து 48 நாட்கள் இந்த விளக்கை ஏற்றி வர ஆண்களுக்கு இருக்கும் கடன் சுமை குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. சில பேரால் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை ஏற்ற முடியாது. வீட்டில் ஏற்லாமா என்று கேட்டால் வீட்டில் ஏற்றலாம். பூஜை அறையிலேயே ஏற்றலாம். ஆனாலும் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை ஏற்றுவதன் மூலமாகத்தான் முழு பலனை உங்களால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: இந்த எண்கள் உள்ள நோட்டுகள் உங்கள் கண்ணில் அடிக்கடி பட்டால் பணம் உங்களை தேடி பணம் வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த நோட்டு உங்கள் கையில் இருந்தால் இதை மட்டும் தடவி உடனே பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

எளிமையான பரிகாரம். ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரம். உங்கள் கையால் நீங்களே இந்த விளக்கை ஏற்றி நீங்களே வேண்டுதல் வைக்கும் போது உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் சுமை நிச்சயம் ஒரு சில நாட்களில் படிப்படியாக குறைவதை உணர முடியும். இந்த பரிகாரத்தை செய்வதோடு சேர்த்து கடன் வாங்கக் கூடிய பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்கி ஆடம்பர செலவை செய்யாதீங்க. தகுதிக்கு மீறின செலவு நம்முடைய வாழ்க்கையை அழித்துவிடும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -