இந்த எண்கள் உள்ள நோட்டுகள் உங்கள் கண்ணில் அடிக்கடி பட்டால் பணம் உங்களை தேடி பணம் வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த நோட்டு உங்கள் கையில் இருந்தால் இதை மட்டும் தடவி உடனே பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

money mahalakshmi
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் பணம் சேர்ப்பது என்பது எல்லாம் சாதாரணமான விஷயமே கிடையாது. ஏனென்றால் வருமானத்தை மீறி தான் செலவுகள் சென்று கொண்டிருக்கிறது. அதையும் மீறி பணத்தை சேர்த்து நாம் பெரும் செல்வந்தராக வேண்டும் என்றால் உழைப்பையும் மீறி அதிர்ஷ்டம் என்ற ஒன்று நமக்கு நிச்சயமாக தேவை. அப்படி நமக்கு அதிர்ஷ்டம் தரும் ஒரு முக்கியமான தகவலை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணம் நம்மிடம் நிலைத்து நிற்க வேண்டுமானால் முதலில் நம்மிடம் பணம் தங்குவதற்கான யோகம் அதாவது பணத்தை ஆகர்ஷணம் செய்யக் கூடிய தன்மை நம்மிடம் இருக்க வேண்டும். இதையும் ஒரு வகையில் அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அப்படி அதிர்ஷ்டமே இல்லை என்று சொல்பவர்கள் கூட இந்த முறையில் பணத்தை கையாண்டால் நிச்சயம் தன ஆகர்ஷணம் அதிகரித்து பண பழக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க அதிர்ஷ்ட எண்கள்:
நாம் வாழ்வில் அன்றாடம் பல ரூபாய் நோட்டுகளை கையாளுகிறோம். அதில் ஒரு குறிப்பிட்ட எண்கள் தொடர்ச்சியாக ஒரு நோட்டில் இருந்தால் அந்த நோட்டை நாம் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அந்த நோட்டு உங்கள் கையில் அடிக்கடி வந்து சென்றால் பணம் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இப்படி தன ஆகர்ஷணத்தை ஈர்க்கும் அந்த எண்களானது 7 8 6 இது தான். எந்த ஒரு ரூபாய் நோட்டில் இந்த எண்கள் தொடர்ச்சியாக இருந்தாலும், அந்த நோட்டை நீங்கள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்கள் உள்ள நோட்டு அடிக்கடி உங்களிடம் வந்தால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம். அதற்காக வரும் நோட்டு அனைத்தையும் நாம் பத்திரப்படுத்தி வைக்க முடியாது.

- Advertisement -

உங்களால் எடுத்து வைக்க முடிந்த தொகை அதாவது பத்து ரூபாயில் இந்த எண்கள் இருந்தாலும் அதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் அந்த ஒரு நோட்டின் நான்கு மூலையிலும் புணுகு தடவி, நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் இந்த ஒரு நோட்டை மட்டும் தனியாக வைத்து விடுங்கள். அதை செலவு செய்யக் கூடாது. அந்த நோட்டு எப்பொழுதும் அங்கு இருக்க வேண்டும். அதை அடிக்கடி எடுத்து பார்க்கவும் கூடாது.

இதை நீங்கள் பணம் வைத்து புழங்கும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தொழில் செய்பவர்கள் அங்கும் வைத்துக் கொள்ளலாம். வாகனம் ஒட்டி தொழில் புரிபவர்கள் அங்கும் வைக்கலாம். எந்த விதமான தொழில் செய்தாலும் நீங்கள் பணம் வைத்து எடுக்கும் இடத்தில் இந்த நோட்டை வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த புணுகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு வேளை கிடைக்கவில்லை என்றால் நான்கு மூலையிலும் பச்சைக் கற்பூரத்தை தூள் செய்து அதை தேய்த்து வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் முடிந்த வரை புணுகை தேய்த்து வைப்பது மிகவும் சிறந்தது.

இதையும் படிக்கலாமே: சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் முடி இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? இது தெரிஞ்சா இனி பார்த்து பார்த்து தான் சமைப்பீங்க!

இது இருக்கும் இடத்தில் தன ஆகர்சனத்தை பெருக்கி அந்த இடத்தில் பண பற்றாக் குறை என்பது இல்லாமல் பணம் மேலும் மேலும் பெருகி வரும் என்று சொல்லப்படுகிறது. இதுவும் அதிர்ஷ்டத்தை தரக் கூடிய ஏஞ்சல் எண்களை போன்ற ஒரு பரிகாரம் தான். இத்துடன் நம்முடைய தாந்திரீக முறையில் புணுகையும் சேர்த்து வைக்கும் பொழுது பலன் இரட்டிப்பாகும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -