கடலளவு கடனும் காணாமல் போக தினமும் இரவு படுக்கும் முன்பு இந்த எண்னை இப்படி பயன்படுத்துங்கள். எட்டு திக்கிலும் இருந்து பணத்தை ஈர்த்து கடனை அடைக்கும் அற்புத ஏஞ்செல் எண்.

- Advertisement -

பணம் என்ற இந்த ஒற்றை வார்த்தை இன்று உலகத்தையே ஆண்டு கொண்டு இருக்கிறது. அதே போல் இந்த பணத்துடனே தொடர்புடைய இன்னொரு வார்த்தை கடன். இதுவும் இன்று எல்லா மனிதரையும் பாடாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு எண்ணற்ற பரிகாரங்கள் இருந்தாலும், இந்த ஏஞ்சல் எண் பரிகாரம் உடனடியாக பலன் அளிக்கக் கூடியது என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் அடைய சொல்ல வேண்டிய ஏஞ்சல் எண்:
எண்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனியான ஒரு ஆற்றல் உண்டு. இதை நாம் நியூமராலஜி மூலம் தெரிந்து கொள்ளலாம். அத்தகைய எண்ணெய் வைத்து இந்த பிரபஞ்சத்தில் நமக்கு வேண்டியவற்றை சரியான முறையில் கேட்டால் நிச்சயம் அது நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு பரிகாரத்தை தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தும் இந்த எண்ணெய் தினமும் இரவு உறங்க செல்லும் முன்பு ஒரு வெள்ளை நிற நோட்டில் ஒரு புறம் இந்த எண்ணையும் அதற்கு நேராக நீங்கள் யார் வாங்கிய கடன் தொகை அடைய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுத வேண்டும். இப்படி 21 முறை எழுத வேண்டும். அதே போல் 21 நாட்கள் தொடர்ந்து எழுத வேண்டும். இதை 21 நாட்கள் இடைவிடாமல் எழுத வேண்டியது மிகவும் முக்கியம்.

அதே போல் இந்த எண்ணை எழுதும் பொழுது 520 என்ற எண்ணை மேலாகவும் 741 என்ற எண்ணை கீழாகவும் எழுத வேண்டும். இரவு எழுத முடியாதவர்கள் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுதுவது சிறப்பு. இந்த எண்ணை எழுதும் போது கடன் மட்டுமின்றி உங்களுக்கு வேறு எந்த விதமான கோரிக்கைகள் இருந்தாலும் அதையும் எழுதலாம். அதுவும் நிச்சயம் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

21 நாட்கள் எழுதி முடிப்பதற்குள்ளாகவே உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். ஒரு வேளை உங்களுக்கு அந்த காரியங்கள் நிறைவேறவில்லை என்றால் ஓரிரு நாட்கள் விட்டு விட்டு மறுபடியும் 21 நாட்கள் எழுதி விடுங்கள். ஏனெனில் எந்த ஒரு பலனும் நமக்கு கிடைக்க நம்முடைய கர்மா முக்கிய காரணமாக அமைகிறது. கர்ம வினைகளின் பலன் அதிகமாக இருப்பின் நமக்கான நல்ல பலன்கள் கிடைக்க சற்று தாமதமாகும். எனவே மனம் தளராமல் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: திருமணமான பெண்கள் திருமாங்கல்யத்தில் இந்த 2 பொருளை சேர்த்துக் கொண்டால், கணவரின் ஆயுள் பலம் கூடும். குடும்பத்தில் செல்வ செழிப்பும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

இதை எழுதும் போது நம்பிக்கை மிகவும் முக்கியம். எந்த ஒரு செயலையும் நாம் நம்பிக்கையுடனும், முழு மனதுடனும் செய்யும் பொழுது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். அத்துடன் இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலும் சேர்த்து இந்த எண்ணின் ஆற்றலும் இணைந்து நம்முடைய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி நம்முடைய வாழ்வை வளமாக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஏஞ்சலின் பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -