கடனடைய ஆஞ்சநேயர் பரிகாரம்

hanuman wheat flour
- Advertisement -

கடன் ஒரு மனிதனை எவ்வளவோ பாடுபடுத்துகிறது. இரவும் பகலும் பாடுபட்டு சம்பாதித்த பணம் முழுவதையும் கடனுக்கும், கடனுக்கான வட்டியை கட்டவுமே சரியாக இருக்கிறது. அப்படியே கட்டினாலும் கூட அந்த கடன் முழுவதுமாக அடையாமல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியை இழந்து வாழக் கூடிய அவல நிலையில் இருக்கிறார்கள்.

இந்த கடன் ஒருவரை பாடாய் படுத்துவதே அவருடைய கர்மவினையின் பலன் என்றும், கிரகங்களின் கோளாறு என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தான் ஒரு சிலரால் எவ்வளவு பாடுபட்டாலும் அவர்களுடைய கடனை திருப்பித் தரவே முடிவதில்லை. அதிலும் ஒரு சிலரிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பித் தருவது அத்தனை சுலபத்தில் செய்ய முடியாத காரியமாக இருக்கும்.

- Advertisement -

இந்த சூழ்நிலைகள் மாறி கடன் பிரச்சனையிலிருந்து வெளி வந்து நிம்மதியாக வாழ ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த வழியாக சொல்லப்படுகிறது. அதற்கு ஆஞ்சநேயரை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

கடனடைய ஆஞ்சநேயர் வழிபாடு

கடன் அடைய செய்யக் கூடிய இந்த வழிபாட்டை நாம் எந்த தினத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வழிபாட்டை வீட்டில் செய்வதுடன் ஆலயத்தில் செய்வது தான் சிறந்த பலனை தரும். ஒரு வேளை வீட்டில் தான் செய்ய முடியும் என்றால் ஆஞ்சநேயர் படம் நிச்சயமாக தேவை.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு நாம் ஆஞ்சநேயருக்கு நெய்வேத்தியத்தை வைத்து வணங்க வேண்டும். அந்த நெய்வேதியம் தான் இதில் முக்கியமான ஒன்று. இதற்கு கோதுமை மாவில் வெல்லத்தை சேர்த்து பூரிகளாக சுட வேண்டும். இந்த பூரி நம் உள்ளங்கையை விட சிறியதாக இருக்க வேண்டும். அதற்கு தகுந்தார் போல் நீங்கள் இதை வீட்டில் தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த வழிபாடு செய்யும் நாளன்று காலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டில் ஆஞ்சநேயர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்ற வேண்டும். பிறகு நீங்கள் செய்து வைத்து நெய்வேத்தியத்தை ஆஞ்சநேயருக்கு படைக்க வேண்டும். அதன் பிறகு இந்த தீபத்தின் முன் அமர்ந்து ஹனுமன் சாலிசா படிக்க வேண்டும். அதன் பிறகு இந்த நெய்வேத்தியத்தை வீட்டின் அருகில் யாரேனும் ஒருவருக்கு கொடுத்து விட்டு நீங்கள் உண்ணலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஆலயத்தில் செய்வது என்றால் வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி வழிபட்ட பிறகு ஆலயத்திற்கு சென்று இந்த நெய்வேத்தியத்தை அனுமனுக்கு வைத்து படைத்து விட்டு, அதன் பிறகு நெய் விளக்கேற்றி அங்கு அமர்ந்து அனுமன் சாலிசா படியுங்கள். இந்த நெய்வேத்தியத்தை ஆலயத்தில் வருவோருக்கு தானமாக கொடுங்கள். இது சிறந்த தான பலனை தரும்.

இதையும் படிக்கலாமே: சனிபகவானால் ஏற்படும் சங்கடம் தீர

இந்த வழிபாட்டை நீங்கள் செய்ய ஆரம்பித்ததில் இருந்து உங்கள் கடன் முழுவதுமாக அடையும் வரை தொடர்ந்து செய்யுங்கள். இந்த வழிபாட்டை தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே உங்களின் கடன் அடைவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உங்களுக்கு பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -