சனிபகவானால் ஏற்படும் சங்கடம் தீர

sani bhagavan sivan
- Advertisement -

சனிபகவான் இந்த பெயரை கேட்டாலே எல்லோருக்கும் ஒரு இது அச்சம் ஏற்படும் காரணம் சனி பகவான் நினைத்தால் ஒருவரை உச்சத்திற்கும் கொண்டு செல்வார். ஆணவத்தால் ஆடுபவர்களை தட்டியும் வைப்பார் அவரவர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நீதிகளை வழங்குவது அவரை விட சிறந்த நீதிமான் கிடையாது.

இத்தகைய சனி பகவான் ஒருவருடைய ராசியில் வலுவிழிந்து இருந்தால் அந்த ஜாதகக்காரர்களை படாத பாடு படுத்தி விடுவார். இந்த சனிபகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் எனில் சனிக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க சனிக்கிழமைகளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

சனியின் பாதிப்பு நீங்க

சனியன் தோஷங்கள் நீங்க சனிக்கிழமைகளில் சிவபெருமான் மற்றும் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்த பலனை தரும் சிவ பக்தர்களையும் அனுமன் பக்தர்களையும் சனி பெரும் அளவு தொந்தரவு தருவதில்லை என்று ஐதீகம் உண்டு.

சனிக்கிழமைகளில் சனி சாலிசா உடன் அனுமன் சாலிசாவும் சேர்ந்து படிக்க வேண்டும். இத்துடன் சிவாலயத்திற்கு சென்று அவரை வணங்கி சிவபுராணம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும் சிறந்த பலனை தரும். அதே போல் சனிக்கிழமை அன்று சனி எந்திரத்தை வழிபட்டாலும் சனி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

- Advertisement -

சனிக்கிழமைகளில் விரதம் இருந்து நவகிரகங்களில் சனி பகவானுக்கு அகல்விளவில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம் நாட்களில் சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்வதும் சனிக்கிழமையில் சிவபெருமானுக்கு வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து பூஜை செய்வதும் சனி தோஷம் நீங்க செய்யக்கூடிய பரிகாரங்களில் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

சனிபகவானின் சந்தோஷப்படுத்த வேண்டுமெனில் ஒரே வழி தானம் கொடுப்பது சனிபகவானுக்கு மாற்றுத்திறனாளிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.ஆகையால் சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், கருப்பு ஆடைகள், செருப்பு, குடை போன்றவற்றை தானமாக தரலாம்.

- Advertisement -

இவை அனைத்திலும் விட வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு முறை திருநள்ளாறு சென்று அங்கிருக்கும் அம்பாளையும் ஈஸ்வரரையும்,சனி பகவானும் வழிப்பட்டு வந்தால் சனி தோஷம் முழுவதுமாக சீக்கிரத்தில் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வேலை கிடைப்பதில் இருக்கும் தாமதம் நீங்க பரிகாரம்

பொதுவாக வரும் முன் காப்பதே சிறந்தது. மேற்சொன்ன இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் சனி தோஷம் விலகும். அதே நேரத்தில் மனிதன் தன் வாழ்நாளில் பிறரை துன்புறுத்தாமல் நீதி தவறாமல் நல்ல முறையில் வாழ்ந்து வந்தால் சங்கடத்தை தரக்கூடிய சனி பகவான் நிச்சயம் சந்தோஷங்களை வாரி வழங்குவார் என்பதில் துளியும் சந்தேகமும் கிடையாது என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -