அதிக நெருக்கடி தரும் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டீர்களா? 6 ஞாயிற்றுக்கிழமை இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

kadan
- Advertisement -

கைநீட்டி கடன் வாங்கியது ஒரு பிரச்சனை என்றால், அதை திருப்பித் தர முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்வது மிகப்பெரிய பிரச்சனை. கடனை கொடுத்தவன் கழுத்தைப் பிடித்து, கடனை திருப்பி கேட்பாங்க. ஆனால் நம்மால் அதை திருப்பித் தர முடியாத சூழ்நிலையில் சிக்கி இருப்போம். கையில் ஒரு பைசா பணம் இருக்காது. ஒரு குண்டுமணி தங்கம் இருக்காது.

இன்னொருவரிடம் கடன் வாங்கிக் கொடுப்பதற்கு கூட வழி இருக்காது. இந்த கடன் கொடுத்தவரை சமாளிக்க என்னதான் செய்வது. எப்படியாவது இன்னொரு ஆறு மாதமோ, ஒரு வருடம் நமக்கு அவகாசம் கொடுத்தால் கூட வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்து விடலாம் என்ற சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, நெருக்கடியான சமயத்தில் இந்த பரிகாரம் கை கொடுக்கும்.

- Advertisement -

நெருக்கடி சமயத்தில் கடனை திருப்பித் தர, அவகாசம் கிடைக்க பரிகாரம்:
கடன் கொடுத்தவர் மனம் இறங்கி, நீங்கள் கடனை திருப்பித் தருவதற்கு சிறிது காலம் அவகாசம் கொடுப்பார். உங்களை போட்டு பிழிந்து எடுக்க மாட்டார். அதற்கு உண்டான ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இதோ உங்களுக்காக. இந்த பரிகாரத்தை 6 ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும். கணவன் அல்லது மனைவி யாராவது ஒருத்தர் செய்ய வேண்டும். இடையில் ஒரு வாரம் கூட விடக்கூடாது. இந்த பரிகாரத்தை செய்யக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அசைவமும் சாப்பிடக்கூடாது.

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான இலை, அரச இலை. முந்தைய நாளே அரச இலையை மரத்திலிருந்து எடுத்து வந்து விடுங்கள். பச்சை நிறத்தில் இருக்கும் அரச இலையை பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த அரச இலையை ஒரு தட்டின் மேல் வைத்து அதன் மேலே நீங்கள் யாரிடம் கைநீட்டி கடன் வாங்கினீர்களோ, அந்த நபரின் பெயரை எழுதி, அவரிடம் வரும் நெருக்கடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று எழுதி விடுங்கள்.

- Advertisement -

இதை அப்படியே சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி, பூஜை அறையில் வைத்து விட்டு குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்போது கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை, இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க வழி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பூஜை முடிந்ததும் சுருட்டிய அந்த இலையை ஒரு டப்பாவில் போட்டு பூஜை அறையில் எங்கேயாவது வைத்து விடுங்கள். இதே போல ஆறு வாரமும் இந்த பூஜையை தொடர்ந்து செய்து வர வேண்டும். குலதெய்வத்தை நினைத்து நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த இலையில் எழுதி வைத்துவிட்டு, ஒரு கற்பூரம் காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொண்டால் போதும். பெரியதாக கஷ்டம் எதுவும் இருக்காது.

- Advertisement -

ஆறு வாரம் டப்பாவுக்குள் ஆறு இலைகள் சேர்த்து இருக்கும் அல்லவா. அந்த இலைகளை கொண்டு போய் ஆறாவது வாரம் பூஜை முடிந்ததும் ஞாயிற்றுக்கிழமை மாலையே ஏதாவது ஒரு நீரோடையில் போட்டு விடலாம். ஏதாவது ஒரு குளத்தில் போட்டு விடலாம். இல்லை என்றால் கொண்டு போய் கிணற்றில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த தவறை செய்யும் பெண்கள் வீட்டில் மகாலட்சுமி நிலைத்து தங்கவே மாட்டாள். குடும்பம் செழிக்க பெண்கள் தினமும் சந்தனத்தை இப்படித்தான் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எதுவுமே சௌகரியம் இல்லை என்றால் இதை கால்படாத இடத்தில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்து விடுங்கள். நிச்சயமாக உங்களுடைய நெருக்கடியை சமாளிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அந்த கடவுள் உங்களுக்கு காட்டிக் கொடுப்பான். இது ஒரு எளிமையான பரிகாரம்தான். முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலன் உடனடியாக கிடைக்கும்.

- Advertisement -