கடன் தீர வீட்டில் போட வேண்டிய தூபம்

kadan theera
- Advertisement -

ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக வாழ எப்படி பணம் தேவையோ! அதே போல் கடன் என்பதும் இல்லாமல் இருக்க வேண்டியதும் அவசியம். கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை நிம்மதியான வாழ்க்கை என்று சொல்வதை விட பணக்கார வாழ்க்கை என்றே சொல்லலாம். கடனானது அத்தகைய கொடிய விஷம் போன்றது.

விஷத்தை யாரும் விரும்பி உண்பது கிடையாது. அது போல தான் இந்த கடனும் யாரும் விரும்பி இதை ஏற்றுக் கொள்வது கிடையாது. சூழ்நிலை காரணமாக பலரும் இந்த கடனில் சிக்கி சின்னமாகி கொண்டிருக்கிறார்கள். அத்தகைய கொடிய கடனிலிருந்து விடுபடக் கூடிய எளிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கடன் தீர விநாயகர் வழிபாடு

கடன் தீர நாம் எத்தனையோ தெய்வங்களை வழிபட்டாலும் மிகவும் எளிமையான முறையில் அதே நேரத்தில் விரைவாகவும் பலனை தரக்கூடிய தெய்வம் ஒன்று உண்டெனில் அது விநாயகர் பெருமான் தான். இந்த விநாயகரை கடன் தீர எப்படி வழிபடுவது என்பது தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.

அதே போல திதிகளிலும் சில திதிகளில் நாம் செய்யப்படும் வழிபாடு பூஜை அனைத்தும் உடனடியான பலனை நமக்கு பெற்று தரும். அப்படியான ஒரு திதி தான் அஷ்டமி திதி. அஷ்டமி திதியில் பொறுத்த வரையில் பைரவர் வழிபாடு துர்க்கை வழிபாடு போன்றவற்றை செய்ய தான் இது வரை அனைவரும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இந்த அஷ்டமி திதி விநாயகர் வழிபாட்டுக்கும் உகந்ததாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

அத்தகைய அஷ்டமி திதியானது நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் வந்திருப்பது மிகவும் உகந்ததாக உள்ளது. ஏனெனில் இந்த பரிகாரத்தை அஷ்டமி சஷ்டி, பிரதமை திதி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வது சிறந்தது. நாளை அஷ்டமியும் ஞாயிற்றுக்கிழமை இரண்டும் ஒன்றாக வந்திருப்பது நமக்கு சிறந்த பலனை தருவதாக அமைந்துள்ளது.

நாளைய தினம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு அருகம்புல் மாலையுடன் செல்லுங்கள். அங்கு சென்று நீங்கள் வாங்கிச் சென்ற மாலையை சாற்றி விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் சாற்றிய இந்த அருகம்புல் மாலையை கேட்டு வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து விநாயகருக்கு போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த மாலை நன்றாக காய்ந்த பிறகு எடுத்து மாலையில் இருக்கும் நூலை தனியாக பிரித்து விட்டு அருகம்புல்லை சின்ன சின்னதாக நறுக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை பௌர்ணமி, அமாவாசை தினங்களில் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் போது அதில் இதயம் சேர்த்து தூபம் போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் நன்றாக நடக்க பரிகாரம்

இந்த பரிகார வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது கடன் சுமை குறைந்து செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. கடன் தீர்ந்து நிம்மதியாக வாழ இறை வழிபாட்டோடு சேர்த்து செய்யபடும் இந்த எளிமையான பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -