வியாபாரம் நன்றாக நடக்க பரிகாரம்

thozhil sirakka
- Advertisement -

யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சொந்தமாக தொழிலோ வியாபாரமோ செய்வார்கள். அப்படி செய்யும் பட்சத்தில் அவர்களுடைய தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என்றுதான் அனைவருமே ஆசைப்படுவார்கள். சிறப்பாக நடந்து கொண்டு இருக்கும் தொழில் திடீரென்று நஷ்டத்தில் செல்வதோ அல்லது வியாபாரம் ஒழுங்காக நடக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறரின் கண் திருஷ்டி காரணமாக கூட விளங்கலாம். எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி மறுபடியும் தொழில் லாபகரமாக நடக்க வேண்டும் என்றால் யாருக்கும் தெரியாமல் ஒரு பரிகாரத்தை செய்தாலே போதும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அந்த பரிகாரம் என்ன என்றுதான் பார்க்கப் போகிறோம்.

தொழிலோ வியாபாரமோ நன்றாக நடக்க வேண்டும் என்றால் தொழில் வசியம் ஏற்பட வேண்டும். இந்த வசியத்தை ஏற்படுத்துவதற்கு நமக்கு முதலில் மகாலட்சுமியின் அருளானது பரிபூரணமாக வேண்டும். மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக இருந்தால் தொழிலில் நாம் சிறந்து விளங்குவோம். லாபங்களை அதிகமாக சம்பாதிப்போம். அப்படிப்பட்ட மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும் தொழில் வசியத்தை ஏற்படுத்துவதற்கும் உரிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

முதலில் நாம் தொழில் செய்யும் இடத்தை நன்றாக கூட்டி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அப்படி சுத்தம் செய்யும் பொழுது வரக்கூடிய குப்பையை தொழில் செய்யும் இடத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து வாசலில் வைத்து அதற்கு மேல் கற்பூரத்தை வைத்து எங்களிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று குல தெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு கற்பூரத்தை ஏற்ற வேண்டும். இதை வியாழக்கிழமை அன்று இரவு செய்து விடுங்கள். கற்பூரம் முழுவதுமாக எரிந்து முடித்த பிறகு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து விட வேண்டும்.

மறுநாள் காலையில் வெள்ளிக்கிழமை அன்று யார் கண்ணிற்கும் தெரியாத அளவிற்கு பிரம்ம முகூர்த்த வேளையிலேயே ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பசுவின் பால், பசுவின் தயிர், பசுவின் நெய், கோமியம், சாணம் இந்த ஐந்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எடுக்கும் பொழுது நாம் வைத்திருக்கும் பாத்திரம் நிறைய இருப்பது போல் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிய அளவிலான பாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை அது முழுவதும் இருக்க வேண்டும்.

- Advertisement -

இதை நாம் தொழில் செய்யும் இடத்தில் உள்பக்கத்திலிருந்து வெளியில் வரும் வரை தெளித்து கொண்டே வரவேண்டும். இப்படி தொழில் செய்யும் இடம் முழுவதும் தெளித்து விட்டு வெளியில் வந்து வீட்டில் இருக்கும் அனைவரும் குளிக்கும் தண்ணீரில் இந்த பஞ்சகவ்யத்தை சிறிதளவு ஊற்றி குளித்து விட வேண்டும். பஞ்சகவ்யம் மீதம் இருந்தால் அதை வாசலின் குறுக்கே ஊற்றி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மை பிடித்திருக்கும் எதிர்மறை ஆற்றல்கள், பீடைகள் என்று எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க வழிபாடு

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு தீய சக்திகள் அனைத்தும் விலகி லஷ்மி கடாட்சம் ஏற்பட்டு தொழில் வசியமும் உண்டாகும்.

- Advertisement -