கடன் அடையவும், வாரா கடன் திரும்ப கிடைக்கவும் பைரவருக்கு இப்படி வழிபாடு செய்தால் போதும். எவ்வளவு பெரிய கடனும் விரைவில் அடைவதுடன், இழந்த பணத்தையும் திரும்ப பெறலாம்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பணம் தான் மிகப்பெரிய ஆயுதமாகவும், பிரச்சனையாகவும் இருக்கிறது. ஒரு புறம் கடனை வாங்கி விட்டு அடைக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், மற்றொரு புறம் கடன் கொடுத்து விட்டு திரும்ப வாங்க முடியாமல் சிரமப்படுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். பைரவருக்கு இந்த வழிபாடு செய்யும் போது பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்வதோடு, நம்முடைய தீராத வினைகள் கூட தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

இந்த வழிபாட்டை தேய்பிறை அஷ்டமியில் செய்வது மிகவும் சிறப்பு. தேய்பிறை அஷ்டமியின் போது மாலை அனைத்து பைரவர் ஆலயங்களிலும் அவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும். இந்த வழிபாட்டை அந்த நேரத்தில் தான் நாம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பைரவ வழிபாடு நடைபெறுவதற்கு முன்பாகவே நாம் ஆலயத்திற்கு சென்று விட வேண்டும். பைரவருக்கு அபிஷேகம் செய்வதற்கு தேன் வாங்கி கொடுக்க வேண்டும். அத்துடன் கரும்புச்சாறையும் வாங்கி கொடுக்கலாம். பெரும்பாலும் பைரவர் இருப்பது சிவாலயத்தில் தா.ன் எனவே இந்த இரண்டையும் வைத்து சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதாலும் நம்முடைய அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

அது மட்டும் இன்றி அடுத்து அலங்காரத்திற்கு பைரவருக்கு அரகஜா, புனுகு அத்தர் (இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்). இந்த மூன்றையும் வாங்கி பைரவருக்கு அபிஷேகம் செய்ய கொடுத்த பிறகு, அதிலிருந்து கொஞ்சம் வாங்கி வந்து நம் வீட்டில் வைத்து பயன்படுத்தும் பொழுது நம்முடைய பண தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்றையும் ஒன்றாகவே கூட கலந்து நெற்றியில் திலகமாக வைத்து கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்து பைரவர்களுக்கு சிகப்பு நிற மலர்களால் மாலை தொடுத்து போட வேண்டும். அரளி பூவாக இருந்தால் அது மேலும் சிறப்பு. அத்துடன் எலுமிச்சை மாலை சாற்றுவது மிக மிக விசேஷம் என்று சொல்லப்படுகிறது. 17 எலுமிச்சை பழத்தை மாலையாக கோர்த்து பைரவருக்கு அணிவிக்கும் பொழுது நம்முடைய அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்றும் சொல்லப்படுகிறது. திருமண தடை, குழந்தை பாக்கியம் இப்படி எந்த விதமான பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பரிகாரம் தீர்வாக இருக்கும்.

இவையெல்லாம் செய்த பிறகு பைரவருக்கு இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை சிகப்பு நிற திரியில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வைரவருக்கு ஏற்றி வழிப்பட வேண்டும். இதையெல்லாம் செய்த பிறகு உங்களின் கடன் அடைய வேண்டும் எனில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். ஒரு வேளை நீங்கள் பணம் கொடுத்து அவரிடமிருந்து வரவில்லை என்றால், எந்த நபருக்கு நீங்கள் பணம் கொடுத்தீர்களோ அந்த நபரின் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டுக்கு வருபவர்களை இந்த இடத்தில் மட்டும் அறியாமல் கூட அமர வைக்காதீர்கள்! கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்யும் போது கடன் அடைவதோடு, நாம் கொடுத்த பணமும் நிச்சயமாக நமக்கு திருப்பி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி நம் வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்களும் நீங்கி, சகல சௌபாக்கியங்களுடன் வாழ இந்த வழிபாடு வழி செய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து வந்தால் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் என்ற கருத்தினோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -