கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க தீபம்

bhairavar cash
- Advertisement -

மனிதனுக்கு எப்பொழுதுமே துன்பத்தை விளைவிக்க கூடியது இந்த பணம் தான். பணம் எப்படி துன்பத்தை விளைவிக்கும் என்று யோசிக்கிறீர்களா? ஆமாம் ஒருவரின் தேவைக்கு மீறி பணத்தை வைத்திருந்தால் அந்தப் பணம் அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்புகள் அதிகம். அதே போல் தேவைக்கு பணமே இல்லை என்றாலும் அவர்கள் வாழ்க்கையில் துன்பங்கள் அதிகரிக்கும்.

என்ன இருந்தாலும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். இதற்கு காரணம் பண வரவு அதிகரித்தால் தான் கடன் தொல்லையில் இருந்து நம்மால் வெளிவர முடியும். கடன் என்பதே பெரிய கர்மா தானே இதை தீர்ப்பதற்கான ஒரு எளிய தீப வழிபாட்டு முறையைத் தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க தீபம்

இந்த தீபத்தை நாம் அஷ்டமி திதியில் பைரவருக்கு ஏற்ற வேண்டும். பைரவர் என்றாலே அவருக்கு உகந்த திதி அஷ்டமி தான். அதே போல் பைரவர் வழிபாட்டிற்கு செவ்வாய்க் கிழமையும் உகந்த நாள் தான். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி இரண்டும் இணைந்து வந்திருப்பது மேலும் சிறப்பு. ஆனால் இந்த திதி நேற்று மாலை தொடங்கி இன்று மாலை 3.50 மணியுடன் முடிவடைகிறது.

இந்த தீபத்தை மாலைக்குள் ஏற்றுவது சிறப்பு. அதிலும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியிலிருந்து 4.30 மணி வரை ராகு கால நேரம். இந்த நேரத்தில் பைரவருக்கு இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால் மேலும் நல்ல பலனை பெறலாம். அப்படி ஏற்ற முடியாதவர்கள் எந்த கவலையும் பட வேண்டாம் இன்று இரவுக்குள் தீபத்தை ஏற்றினாலும் போதும்.

- Advertisement -

இந்த தீபத்தை ஆலயத்தில் ஏற்றுவது சிறந்தது. இந்த தீபத்தை ஏற்ற ஒரு சிகப்பு நிற திரி அகல் விளக்கு கடுகு எண்ணெய் பைரவருக்கு உகந்த செவ்வரளி பூ அல்லது செம்பருத்தி பூ இவைகளை எடுத்துச் செல்லுங்கள். பைரவருக்கு முன்பாக இந்த அகல் விளக்கில் திரி போட்டு கடுகு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். அந்த தீபத்திற்கு முன்பு நீங்கள் கொண்டு சென்ற பூக்களை வைத்து விடுங்கள்.

இப்போது பைரவருக்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய பணப் பிரச்சனைகள், கடன் தொல்லை யாருக்கு கடன் தர வேண்டும் எவ்வளவு தர வேண்டும் என்பன போன்ற அனைத்து பிரச்சனைகளையும் பைரவரிடம் சொல்லி அது தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

பைரவர் காயத்ரி மந்திரம்

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை குறைந்தது 11 முறை சொல்லுங்கள். அதிக பட்சமாக உங்களால் எத்தனை முறை சொல்ல முடிந்தாலும் சொல்லுங்கள் அவ்வளவு பலனை பெற முடியும். அதன் பிறகு பைரவரை வலம் வந்து வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள். ஆலயத்தை விட்டு வெளியே வந்த பிறகு அங்கிருக்கும் நாய்களுக்கு பிஸ்கட் போன்ற ஏதேனும் ஒரு உணவுப் பொருளை வாங்கி கொடுங்கள். இது பைரவரின் அருளை முழுவதுமாக பெற்றுத் தரும்.

இதையும் படிக்கலாமே: வேண்டிய வரம் கிடைக்க அமாவாசை பூஜை

இந்த தீப வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுடைய கடன்கள் தீர்ந்து நல்ல செல்வ வளத்துடன் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி எதிரி தொல்லை மன பயம் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகள் இவை அனைத்திற்கும் தீர்வாக இந்த தீப வழிபாடு அமையும். நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலனை அடையுங்கள்.

- Advertisement -