கடன் தீர்க்கும் செவ்வாய் கிழமை பரிகாரம்

chevvai
- Advertisement -

வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். வரக்கூடிய வருமானத்தில் மூன்று வேளை சாப்பாடு கூட, முழுசாக சாப்பிட முடியாது. ஒருவேளை சாப்பிடுவதை குறைத்து விட்டு அந்த பணத்தை மிச்சப்படுத்தி வட்டி கட்ட கூடிய சூழ்நிலை இன்னும் நிறைய பேருக்கு இருக்கு.

நீங்கள் உங்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்கி விட்டீர்களா. அதை திருப்பி அடக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா. செவ்வாய்க்கிழமை இந்த தாந்திரீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக நீங்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.

- Advertisement -

கடன் தீர செவ்வாய்க்கிழமை பரிகாரம்

நீங்களே கடன் வாங்கி கஷ்டத்தில் இருக்கிறீர்கள். ஆகவே, உங்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது. அதிக அளவில் பணம் செலவு ஆகக்கூடாது என்பதற்காக இந்த பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்ய கருப்பு ஏலக்காய் மூன்று, வெண்கடுகு 2 கைப்பிடி , கற்பூரம், இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்.

இதை குறைந்த செலவிலேயே நம்மால் மளிகை கடையில் இருந்து வாங்கி விட முடியும். முதலில் இந்த பொருட்களை வாங்கி வச்சுக்கோங்க. செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அப்போதுதான் பலன் இருக்கும்.

- Advertisement -

ஒரு சின்ன மண் பகல் விளக்கில் கட்டி கற்பூரத்தை போட்டு ஏற்றி விடுங்கள். உள்ளங் கைகளில் ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை வைத்து, அந்த வெண்கடுகுக்கு நடுவே மூன்று கருப்பு ஏலக்காய்களை வைத்து, உள்ளங்கைகளை மூடிக்கொள்ளுங்கள். மனம் உருகி துர்க்கை அம்மனையும் குல தெய்வத்தையும், செவ்வாய் பகவானையும், நினைத்து உங்களுடைய கடன்சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிறகு கையில் இருக்கும் அந்த இரண்டு பொருளையும் உங்கள் முன்னாடி எரிந்து கொண்டிருக்கும் கற்பூர நெருப்பில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான். இந்த ஏலக்காயும் வெண்கடுகும் நெருப்பில் வெடித்து சிதறுவது போல என்னுடைய கடனும் காணாமல் போய்விட வேண்டும் என்று உண்மையான நம்பிக்கையோடு பக்தியோடு வேண்டுதல் வையுங்கள்.

- Advertisement -

இதேபோல ஒன்பது வாரம் செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டும். ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டின் வரவேற்பறை அல்லது வீட்டில் இருக்கும் பால்கனி எந்த இடத்தில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி. ஆனால் பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்யாதீங்க.

செவ்வாய்க்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, செவ்வாய் ஓரை நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமாக இருக்கிறதோ அந்த நேரத்தை தேர்ந்தெடுத்து பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: மீளா துன்பத்திலிருந்து மீள மந்திரம்

தகுதிக்கு மீறி கடன் வாங்காதீங்க, ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் வாங்காதீங்க, அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க, எந்த சூழ்நிலையிலும் வருமானத்திற்கு குறைவாக செலவு செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய குடும்ப சந்தோஷத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -