கடன் தீர செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு

amman3
- Advertisement -

நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அந்த கடனை சனிக்கிழமை வாங்காதீங்க. செவ்வாய்க்கிழமை வாங்காதீர்கள். செவ்வாய்க்கிழமைகளில் சனிக்கிழமைகளில் வாங்கிய கடன் பெருகும். அதனால கூடுமான வரை அந்த இரண்டு கிழமையில் மட்டும் கடன் வாங்காதீங்க.

கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் அந்த கடனை திருப்பிக் கொடுங்கள். சரி நேரமும் காலமும் சூழ்நிலையும் உங்களை கடனாளியாக மாற்றிவிட்டது. என்ன செய்வது. கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டீர்கள். அதிலிருந்து விடுபட வேண்டும். அதே சமயம் பெரிய அளவில் அந்த பரிகாரம் இருக்கக்கூடாது.

- Advertisement -

இறைவனை வழிபாடு செய்யக்கூடிய எளிய பரிகாரமாக இருக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்காக இந்த பதிவு. முழு நம்பிக்கையோடு தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வருபவர்களுக்கு எவ்வளவு பெரிய கடன் பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து வெளிவர ஒரு வழியை அந்த துர்கை அம்மன் காண்பித்து கொடுப்பாள்.

கடன் தீர செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு

இந்த வழிபாடு செய்ய முதலில் மல்லிகைப்பூ வாங்கிக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று காலையில் தான் அந்த மல்லிகைப் பூவை வாங்க வேண்டும். பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, துர்க்கை அம்மனையும் குலதெய்வத்தையும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன தட்டில் வாங்கிய மல்லி பூவை கொட்டி பரப்பி விடுங்கள்.

- Advertisement -

மல்லிகை பூவுக்கு நடுவை மட்டும் கொஞ்சம் இடம் விட்டுக் கொள்ளுங்கள். அந்தத் தட்டுக்கு நடுவே ஒரே ஒரு விரலி மஞ்சள் வைத்து, அதற்கு குங்குமம் பொட்டு வையுங்கள். அந்த விரலி மஞ்சளுக்கு பக்கத்தில் ஒரு மண் அகல் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தட்டை பூஜை அறையில் வைக்கவும்.

ஏதாவது ஒரு அம்மன் படத்திற்கு முன்பாக இந்த விளக்கை வைத்துவிட்டு, உங்கள் கடன் சுமை குறைய வேண்டும் என்று மனம் உருகி வேண்டுதல் வையுங்கள். எத்தனை செவ்வாய் கிழமை என்று கணக்கெல்லாம் வைக்க வேண்டாம். தொடர்ந்து எல்லா செவ்வாய்க்கிழமையும் இந்த வழிபாட்டை துர்க்கை அம்மன் நினைத்து வீட்டிலேயே செய்யுங்கள். அந்த ஒரே விரலி மஞ்சள் வாரம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

மஞ்சள் கொஞ்சம் பழைது ஆனதும் அந்த மஞ்சளை செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு புதுமஞ்சளை மாற்றவும். செவ்வாய்க்கிழமை ஆனால், இருபது ரூபாய் கொடுத்து மல்லிப்பை பூவை வாங்கும் பழக்கத்தை மட்டும் நிறுத்திடாதீங்க. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மல்லிகைப்பூ வாங்கி இந்த வழிபாட்டை தொடருங்கள். கடன் தீர வேண்டும் என்று துர்க்கை அம்மனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் கடன் சுமை குறையும். வாங்கிய கடனை திருப்பித் தர நல்ல காலம் பிறந்து விடும். எவ்வளவு பெரிய கடன் பிரச்சனையாக இருந்தாலும் சரி, இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் அதில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்துவிடும்.

இதோடு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் திருச்செந்தூர் முருகனை ஒருமுறை போய் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். அந்த திருச்செந்தூர் கடலில் நீராடி விட்டு, திருச்செந்தூர் முருகப்பெருமானை வேண்டி திருச்செந்தூர் முருகனை 11 முறை வலம் வந்து கடன் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாட்டை செய்கிறீர்கள் வீட்டில்.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர விநாயகர் வழிபாடு

இதோடு சேர்த்து வீட்டு பக்கத்தில் முருகன் கோவில் இருந்தால், அந்த கோவிலுக்கு போய் 11 முறை முருகப்பெருமானை வலம் வந்து கடன் கரைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாடு நிச்சயம் உங்களை காப்பாற்றும். பண பிரச்சனையிலிருந்து வெளிவர இதைவிட சிறந்த பரிகாரம் இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை என்று சொல்லலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் அடையுங்கள்.

- Advertisement -