கஷ்டம் தீர விநாயகர் வழிபாடு

vinayagar thambulam
- Advertisement -

தெய்வங்களிலே மிகவும் எளிமையான முறையில் நாம் பூஜை செய்யக்கூடிய ஒருவர் என்றால் அவர் விநாயகர் தான். இவருக்கென தனியான அர்ச்சனைகளோ பூஜைகளோ செய்ய வேண்டும் என்ற அவசியமே கிடையாது. மனதார அவரை நினைத்து ஒரே ஒரு அருகம்புல்லை வைத்து வணங்கினாலே போதும். அதற்கே அவர் அருள் புரிந்து விடுவார்.

நம்முடைய கஷ்டங்கள் காரிய தடைகள் வேண்டுதல்கள் அனைத்தையும் சித்தி செய்து தரக்கூடிய சித்தி விநாயகரை பல வழிகளில் எளிமையாக வழிபடலாம். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நம்முடைய காரியங்கள் நிறைவேறவும் பிரச்சனைகள் தீரவும் எளிமையான முறையில் எப்படி வழிபாடு செய்வது என்பதை ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கஷ்டம் தீர கணபதி வழிபாடு

இந்த வழிபாட்டை வீட்டிலிருந்து செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான முக்கியமான பொருள் அருகம்புல் தான். இந்த அருகம்புல்லை நீங்களாக எடுப்பதாக இருந்தால் சுத்தமான இடத்தில் இருந்து எடுங்கள். அருகம்புல்லை கடையில் வாங்குவதாக இருந்தால், வாங்கி வந்த பிறகு அதை சிறிது மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து எடுத்து விடுங்கள். இப்போது இந்த அருகம்புல்லை எடுப்பதிலும் ஒரு முறை இருக்கிறது. ஒரு அருகம் புல்லில் மூன்று இலைகள் வருவது போல இருக்க வேண்டும். இதே போல நமக்கு 21 அருகம்புல் தேவை.

இது மட்டும் தான் கொஞ்சம் சிரமமான காரியம். நம்முடைய நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் பிரச்சனைகள் தீர கொஞ்சம் சிரமப்பட்டு இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்யுங்கள். இந்த வழிபாட்டை காலை வேலையில் செய்வது சிறந்தது. நேரம் இல்லாதவர்கள் மாலை நேரத்தில் செய்யலாம். அன்றைய தினத்தில் அசைவத்தை தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -

அருகம்புல்லை விநாயகருக்கு மாலையாக தொடுக்கலாம் அல்லது மொத்தமாகவும் கட்டி வைக்கலாம். அது உங்கள் விருப்பம். வீட்டில் இருக்கும் விநாயகர் படம் அல்லது சிலைக்கு முன் இந்த அருகம்புல்லை வைத்து விடுங்கள். வெற்றிலை பாக்கு பழம் வைப்பதாக இருந்தால் வைக்கலாம் இல்லை என்றாலும் பரவாயில்லை. நெய்வேதியமாக விநாயகருக்கு உகந்த அவல், பொரி, கடலை இதில் ஏதேனும் ஒன்றை வைத்தால் போதும்.

இதன் பிறகு விநாயகருக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்து மனதார உங்களுடைய பிரார்த்தனையை சொல்லி நிறைவேற வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். விநாயகர் துதிகள் தெரிந்தால் இந்த நேரத்தில் அதை சொல்லலாம் தெரியவில்லை என்றால் பரவாயில்லை. இந்த முறையில் 21 திங்கட்கிழமைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த 21 வாரங்கள் முடிவதற்குள்ளாகவே நீங்கள் நினைத்தவை நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அப்படி நிறைவேறும் பட்சத்தில் இந்த வழிபாட்டை விடாமல் தொடர்ந்து 21 வாரங்கள் 21 அருகம்புல் வைத்து செய்து விடுங்கள். 21வது வாரம் ஒரு வெட்டி துண்டு வைத்து திருமணம் ஆகாத ஒருவருக்கு தானமாக தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குபேர வசியம் உண்டாக செய்ய வேண்டியது

நம்முடைய கடினமான காரியங்களையும் எளிமையாக முடித்து தரக்கூடிய இந்த விநாயகர் வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின், முழு மனதோடு விநாயகரை சரணடைந்து வழிபட்டு நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -