இனி வாழ்நாளில் கடனுக்கு வட்டி கட்ட வேண்டுமே என்ற பயமே இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், இந்த இரண்டு விஷயங்களை தவறாமல் செய்து விடுங்கள்.

thulasi panam navagiragam
- Advertisement -

வட்டிகட்டியே வாழ்க்கையை தவற விட்டவர்கள் ஏராளம் பேர். இந்த இடத்தில் கடன் என்று சொல்லாமல் வட்டி கடன் என்று சொல்வதற்கு காரணம் இன்று கடன் இல்லாமல் வாழும் மனிதன் கிடையாது. நாம் இருக்கும் வீடு, வீட்டில் இருக்கும் பொருள்கள் இவற்றைக்கான இஎம்ஐ என ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று ஏதோ ஒரு வகையில் கடன் இருக்கத் தான் செய்கிறது. இது ஒரு வகையில் நம்முடைய சௌகரியத்திற்காக வாங்கும் கடன்.

சிலர் அவசர தேவைக்கு வட்டிக்கு கடன் வாங்கி, அந்த வட்டியை கூட கொடுக்க முடியாமல் அது பல மடங்கு பெருகி கழுத்தை நெரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் இன்று ஏராளமானோர். இப்படியானவர்கள் இந்த இரண்டு பரிகாரங்களை தொடர்ந்து செய்யும் போது அந்த கடனிலிருந்து படிப்படியாக வெளியேறி வட்டிக் கட்டும் தொல்லையிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியான பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வட்டிக் கடன் அடைய செய்ய வேண்டிய பரிகாரம்:
ஒருவர் இப்படி வட்டிக்கு கடன் வாங்கி துன்பப்படும் நிலை நேர, அவனுடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியில்லாமல் போவதே முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டும் இன்றி அவருடைய ஜாதகத்தில் சுக்கிரனின் பார்வை வலு விழுந்து இருந்தாலும் இந்த மாதிரியான துன்பத்திற்கு ஆளவார்கள். எனவே இந்த கடனிலிருந்து அவர்கள் வெளிவர சுக்கிர பகவானின் அருளைப் பெற வேண்டும்.

அதற்கு வீட்டின் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று நவகிரகத்தில் உள்ள சுக்கிர பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து இரண்டு நெய் தீபத்தை தொடர்ந்து ஏற்றி வர சுக்கிர பகவானின் அருள் கிடைத்து அவர்களுடைய வட்டிக் கடன் அடைவதற்கான யோகத்தை அவர் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இதில் பால் அபிஷேகத்தை உங்களுக்கு வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் செய்து கொள்ளுங்கள். ஆனால் முடிந்த வரை தினமும் தீபம் ஏற்றி வந்தால் நல்லது.

- Advertisement -

இந்த வட்டி கடன் அடைய இன்னொரு எளிய பரிகாரத்தையும் செய்யலாம். அதற்கு வீட்டில் கட்டாயம் துளசி செடி வைத்திருக்க வேண்டும். இந்த துளசி செடிக்கு தினமும் தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு, துளசி செடி வைத்திருக்கும் இடத்தில் செடியின் காம்பும் மண்ணும் இணையும் இடத்தில் இருக்கும் மண்ணை எடுத்து தினந்தோறும் நெற்றியில் திலகமாக இட்டு கொள்ள வேண்டும்.

அந்த இடத்தில் தான் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமி தாயாரும் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் கடனை அடைத்து நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதற்கு பணவரவு அதிகரிக்க வேண்டும். அந்த பணவரத்தை அதிகரித்து தரக்கூடியவர் மகாலட்சுமி தாயார். அவர் விஷ்ணுவுடன் சேர்ந்து இருக்கும் இடத்தை நாம் தினமும் தொட்டு ஆசீர்வாதம் வாங்கி நம் வேண்டுதலை வைக்கும் போது உங்கள் கடன் அடைவதற்கான வழி விரைவில் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

நீங்கள் கடனை அடைக்கும் முயற்சியில் இறங்கும் போது இந்த பரிகாரத்தையும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் இத்தனை நாட்கள் உங்களால் அடைக்க முடியாமல் கஷ்டப்பட்ட கடனை கூட இனி அடைப்பதற்கான வழி பிறக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: புதன்கிழமை பெருமாளை நினைத்து இந்த 2 பொருளை கல்லாப்பெட்டியில் வைத்தால், சொந்தத் தொழிலில் லாபம் கோடி கோடியாக கொட்டும்.

இந்த இரண்டு பரிகாரத்திலும் முழுமையான நம்பிக்கை உள்ளவர்கள், இதை தொடர்ந்து செய்து கடன் அடைவதற்கான வாய்ப்பை கடவுளின் அருளாசியோடு பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -