புதன்கிழமை பெருமாளை நினைத்து இந்த 2 பொருளை கல்லாப்பெட்டியில் வைத்தால், சொந்தத் தொழிலில் லாபம் கோடி கோடியாக கொட்டும்.

perumal1
- Advertisement -

மாதம் தோறும் ஒரே தொகையை சம்பளமாக வாங்கிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் அவ்வளவு சுலபமாக சீக்கிரத்தில் முன்னேறிவிட முடியாது. அதுவே, சொந்த முதலீட்டை போட்டு, சொந்த தொழில் தொடங்கினால் சம்பளம் வாங்குவதை விட, அதிக லாபம் பெறலாம் என்பது நிறைய பேருடைய கனவாக இருக்கிறது. இப்படி நினைத்து கஷ்டப்பட்டு கடன் வாங்கி, சொந்தத் தொழிலில் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு சிலருக்கே வெற்றிகள் கிடைக்கின்றது. பலருக்கு அதில் நஷ்டங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு நஷ்டத்தில் இருப்பவர்கள் தங்கள் சுயதொழிலிலும், வியாபாரத்திலும் வெற்றி அடைவதற்கு செய்யவேண்டிய பரிகார ஆன்மீகம் முறையை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சொந்தத் தொழிலில் லாபம் பெற பெருமாள் வழிபாடு:
ஒருவரின் ஜாதகத்தில் புதன் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர்கள் செய்கின்ற சுய தொழிலிலும், வியாபாரத்திலும் அவர்கள் வெற்றிகள் அடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அப்படிப்பட்ட புதன் வலிமை பெற நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாளை வணங்க வேண்டும். ஆதலால் தான் திருப்பதிக்கு அதிகமாக தொழிலதிபர்கள் வருகிறார்கள். மேலும் அவர்களின் லாபத்தில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு பங்கும் செல்கின்றது.

- Advertisement -

நின்றகோலத்தில் இருக்கும் பெருமாளை நாம் வணங்க வணங்க புதனின் ஆதிக்கம் அதிகரித்து, நாம் செய்கின்ற சுயதொழிலில் மற்றும் வியாபாரத்தில் வெற்றிகள் கிடைக்கும் என்பதற்கு சாட்சியாக திருப்பதி விளங்குகிறது. இப்பொழுது நாம் தொழில் செய்யும் இடத்திலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ புதனின் ஆதிக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பார்ப்போம்.

இந்த வழிபாட்டு முறைக்கு நின்ற கோலத்தில் இருக்கும் திருமாலின் திருவுருவப்படம் தேவை. மேலும் முளைகட்டிய பச்சைப் பயிறு ஒரு கிண்ணத்திலும், முளைகட்டிய மொச்சை பயிறு மற்றொரு கிண்ணத்திலும் வேண்டும். பிறகு பச்சை பட்டு துணி மற்றும் வெள்ளை பட்டு துணி வேண்டும். அடுத்ததாக சௌந்தர்ய லகரியின் 32 ஆவது ஸ்லோகத்துக்குரிய எந்திரத்தை பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

நாம் தொழில் செய்யும் இடத்தில் புதன்கிழமை அன்று புதன் ஹோரையில் வடக்குப் பார்த்தவாறு திருமாலின் திருவுருவப்படத்தை வைக்க வேண்டும். பிறகு திருவுருவப்படத்திற்கு மேலோ அல்லது கீழோ எந்திரத்தை மஞ்சளால் வரைய வேண்டும். திருவுருவப்படத்திற்கு முன்பாக பச்சை பட்டுத் துணியில் பச்சை பயிரையும், வெள்ளை பட்டு துணியில் மொச்சை பயிரையும் வைக்க வேண்டும். நெய்வேத்தியத்திற்காக பால் பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கலை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதில் கண்டிப்பாக ஒரு துளியாவது பச்சை கற்பூரத்தை சேர்த்திருக்க வேண்டும். ஏனெனில் பச்சை கற்பூரம் என்பது புதனின் ஆதிக்கத்திற்கு உரியதாக கருதப்படுகிறது. இப்பொழுது நாம் பெருமாளின் நாமங்களை உச்சரிக்கலாம். அல்லது விஷ்ணு சஹஸ்ர நாமத்தை சொல்லலாம். மேலும் துளசியை வைத்து 108 நாம அர்ச்சனையை செய்ய வேண்டும். பிறகு பச்சை பட்டு துணியில் வைத்திருக்கும் முளைகட்டிய பச்சைப் பயிரை, பச்சை நூலால் கட்ட வேண்டும். அதேபோல் வெள்ளைப்பட்டுத் துணியில் வைத்திருக்கும் முளைகட்டிய மொச்சை பயிரை, வெள்ளை நூலால் கட்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வில்வ மரத்தை இப்படி சுற்றி வந்தால், சகல விதமான பாவங்களும் நீங்கி, வாழ்வில் சகல விதமான ஐஸ்வர்யத்தையும் பெறலாம்.

இவை இரண்டையும் பணப்பரிவர்த்தனை செய்யும் டிராவில் வைக்க வேண்டும். மறுநாள் அதாவது வியாழக்கிழமை குரு ஹோரையில் இந்த தானியங்களை எடுத்து ஒரு தொட்டியில் போட்டு வளர்க்க வேண்டும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வளர்ந்த அந்த செடிகளை பறித்து கோமாதாவிற்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து நான்கு வாரங்கள் செய்ய வேண்டும். நாலாவது வாரத்தில் நம் தொழிலில் இருந்த அனைத்து பிரச்சனைகளும், கடன்களும் நீங்கி, நம் தொழில் வெற்றிகரமாக செல்வதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும்.

- Advertisement -