புத்தாண்டில் ஏற்ற வேண்டிய தீபம்

varahi agaldheepam
- Advertisement -

புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது தான். அதிலும் இந்த வருடம் பிறக்கக் கூடிய வருட பிறப்பானது வாராகி அன்னைக்கு உகந்த பஞ்சமி திதியுடன் சேர்ந்து பிறக்கிறது. ஆகையால் இந்த வருட பிறப்பு மிகவும் விசேஷமானதாகவும் நம்முடைய துன்பங்களை தீர்க்கக் கூடியதாகவும் அமையவிருக்கிறது. இத்தகைய விசேஷமான இந்த நாளை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துன்பம் தீர புத்தாண்டில் ஏற்ற வேண்டிய தீபம்

வாராகி அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாளெனில் அது பஞ்சமி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த வருடத்தின் பஞ்சமி திதியானது ஞாயிற்றுக்கிழமை பகல் 11.26 லிருந்து நாளை மதியம் 2.26 வரை இருக்கிறது. ஒரு வருடத்தின் முடிவு நாளும் அடுத்த வருடத்தின் தொடக்க நாளும் பஞ்சமி திதியில் வருவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

- Advertisement -

அதிலும் இந்த திதியானது தேய்பிறை பஞ்சமி. நம்முடைய துன்பங்கள் துயரங்கள் கடன் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியது இந்த தேய்பிறை பஞ்சமி. அத்தகைய நாளில் நாம் ஏற்றக்கூடிய இந்த தீபமானது நம்முடைய துன்பங்கள் அனைத்தையும் நீக்கி இன்பமாய் வாழ வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்போது அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று பார்க்கலாம்.

இந்த தீபத்தை ஏற்ற 50 கிராம் சுத்தமான நல்லெண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஜாதிக்காய் போட்டு விடுங்கள். இந்த ஜாதிக்காய் எண்ணெயில் முழுவதுமாக முழ்க வேண்டும். அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் இவை அனைத்தையும் போட்டு இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். இது இன்றைய நாள் முழுவதும் ஊற வேண்டும். இந்த எண்ணெய் பூஜை அறையில் அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

நாளை காலை புத்தாண்டு அன்று பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து வாராகி அம்மனை மனதார நினைத்து அவர்களுக்கு முன் இந்த எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த எண்ணையை நீங்கள் தனியாக அகல் விளக்கு வைத்து ஏற்றலாம். காமாட்சி அம்மன் விளக்கிலும் ஏற்றலாம். வாராகி அன்னைக்கு ஏற்றப்படும் விளக்கிலும் ஏற்றலாம். குபேர விளக்கு என எதில் வேண்டுமானாலும் ஏற்றலாம். ஆனால் பூஜை அறையில் இந்த எண்ணெய் ஊற்றிய தீபம் பஞ்சமி திதியில் ஏரிய வேண்டும்.

இந்த தீபத்தை இன்றைய தினம் மாலை எனும் ஏற்றலாம் ஆனால் நாளை புது வருட பிறப்பின் போது ஏற்றினால் மேலும் விசேஷமானதாக அமையும். இந்த எண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் தீபத்தின் முன் அமர்ந்து உங்கள் வேண்டுதல் எதுவுவோ அதை மனதார கேளுங்கள். கடன் பிரச்சனை மட்டுமின்றி வேறு பிரச்சனைகள், ஆரோக்கிய பிரச்சனை என எதுவாக இருந்தாலும் அனைத்தையும் போக்கக் கூடிய சக்தி இந்த தீபத்திற்கு உண்டு.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையை தீர்க்கும் அரச இலை தீப பரிகாரம்

அதுமட்டுமின்றி இந்த ஜாதிக்காய்க்கு குபேர சம்பத்து உண்டு. இது பணவரவையும் அதிகரித்து கொடுக்கும். பண வரவு அதிகரித்தாலே நம்மில் பலருக்கும் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். இப்படி பல அற்புதங்களை நிகழ்த்த கூடிய இந்த எண்ணெய் ஊற்றி வாராகி அன்னைக்கு நாளை இந்த தீபத்தை தவறாமல் ஏற்றி வரும் ஆண்டை மகிழ்ச்சிகரமான ஆண்டாக மாற்றிக் கொள்ளுங்கள் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -