தீர்க்க முடியாத கடன் பிரச்சனைகள் தீரவும், வராத பணம் கைக்கு வரவும் ஒரு சோழியை வைத்து 20 நிமிடம் மட்டும் இதை செய்தால் போதும். கடன் தீர்ந்து பணத்தை வர வைக்கும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரம்.

sozhi panam
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பணம் தொடர்பான பிரச்சனைகள் தான் பெருமளவில் பெருக்கிக் கொண்டே இருக்கிறது. ஒன்று பணம் சம்பாதிக்க பாடுபட வேண்டும். அடுத்து சம்பாதித்த பணம் கையில் தங்க போராட வேண்டும். இந்த நிலையில் இவற்றை சரி செய்ய கடன் வாங்கி துன்பப்பட வேண்டியது இருக்கும். இவை அனைத்திலும் விட கொடுமையானது பணத்தை நம்பி கொடுத்த பிறகு அவர்களிடம் இருந்து திரும்பி வாங்க படும் பாடு. இப்படி பணம் தொடர்பான எந்த வித பிரச்சினையாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நிவர்த்தி ஆகிவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பரிகாரம் குறித்த தகவலை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் அடைய கொடுத்த பணம் திரும்ப வர பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு கடுகு எண்ணெய் 300 கிராம் அளவு கடுகு எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரே ஒரு சோழி வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் கருப்பு எள்ளை வாங்க வேண்டும். இவையெல்லாம் புதிதாக தான் வாங்க வேண்டும் வீட்டில் இருப்பதை பயன்படுத்த வேண்டாம். அதே போல் இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை என்று எதையும் பார்க்க வேண்டும். நீங்கள் நினைத்த மாத்திரத்தில் பரிகாரத்தை தொடங்கலாம்.

- Advertisement -

இந்த ஒரு தீப பரிகாரம் தான். இதை காலை பிரம்ம முகூர்த்த வேளையில் ஏற்றுவது மிகவும் சிறப்பு. காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு சுத்த பத்தமாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்காக முதல் நாளே இந்த எண்ணையை தயார் செய்து வைக்க வேண்டும். இந்த எண்ணெய் தயாரிக்கும் முறை தான் இந்த பரிகாரத்திலேயே முக்கியமானது. அது எப்படி என்று பார்க்கலாம்.

ஒரு சிறிய கண்ணாடி பௌலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வாங்கி வந்திருக்கும் கடுகு எண்ணெயை ஊற்றிய பிறகு சோழியை அதில் போட்டு விடுங்கள். அதன் பிறகு எள்ளை கொஞ்சமாக எடுத்து போடுங்கள். எள் போடுவதற்கு அளவு கிடையாது. உங்கள் கைகளில் கொஞ்சமாக எடுத்துப் போட்டால் போதும். அத்துடன் இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து அதையும் இந்த எண்ணெயில் போட்டு விடுங்கள். இதுவும் அப்படியே ஊறட்டும் காலை விளக்கு ஏற்றுவதற்கு இரவே இதை தயார் செய்து வைத்த பிறகு உறங்க செல்லுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு சுத்தப்பத்தமாக ஒரு அகல் விளக்கை எடுத்து அதில் இந்த எண்ணையை ஊற்றி இதில் இருக்கும் திரியும் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை பூஜை அறையில் ஏற்றலாம் அல்லது வரவேற்பறை என எங்கு வேண்டுமானாலும் ஏற்றலாம். ஆனால் இந்த தீபம் ஏற்றும் எண்ணெய் அகல்விளக்கு முழுவதுமாக ஊற்றி ஏற்றுங்கள். இந்த தீபமானது கட்டாயம் 20 நிமிடம் எரிய வேண்டும். இது மிக மிக அவசியம் 20 நிமிடத்திற்கு பிறகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எரியலாம். அதற்குள்ளாக விளக்கு அணையக் கூடாது.

இந்த தீபத்தை தொடர்ந்து 90 நாட்கள் ஏற்ற வேண்டும். பெண்கள் இந்த தீபத்தை ஏற்றும் போது அவர்களுக்கான மாதவிடாய் நாட்களில் தவிர்த்து விட்டு பிறகு தொடர்ச்சியாக ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது உங்களுக்கு எவ்வளவு பெரிய கடன் பிரச்சனைகள் இருந்தாலும் அதை தேடுவதற்கான வாய்ப்பு நிச்சயம் வரும் என்றும், கொடுத்து ஏமாந்த கைக்கு வராத பணங்கள் உங்களை தேடி வந்து தருவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நினைத்தபடி நடந்து வெற்றி மேல் வெற்றி பெற விநாயகருக்கு இந்த மாலையை சாற்றி வணங்கினால் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.

இந்த தீப பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து இத்துடன் உங்களுடைய முயற்சிகளையும் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் நிச்சயம் இந்த தீப பரிகாரம் முடிவதற்குள்ளாகவே உங்களுடைய பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும்.

- Advertisement -