பண பிரச்சனை தீரவும் கடன் சுமை குறையவும் உதவும் தீப வழிபாடு

lakshmi deepam
- Advertisement -

ஒருவருக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றால் அவருடைய தேவைகள் பூர்த்தியடைய வேண்டும். அந்த தேவைகளை நிறைவு செய்வதற்கு போதுமான அளவு பணவரவு என்பது ஏற்பட வேண்டும். அப்படி பணவரவு ஏற்படாத சூழ்நிலையிலும் வரவை மிஞ்சிய செலவு ஏற்படும் சூழ்நிலையிலும் தான் ஒருவர் கடன் என்பதை வாங்குகிறார். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பண பிரச்சனை தீரவும் கடன் சுமை குறையவும் எந்த தீபத்தை ஏற்றி வழிப்பட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பணவரவு என்று சொன்னதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கு பல முறைகள் இருக்கின்றன. இருப்பினும் மிகவும் எளிமையான முறையாக மகாலட்சுமி தாயாரை நினைத்து தீபம் ஏற்றி வழிபடுவது தான். முறையாக மகாலட்சுமி தாயாருக்கு தீபம் ஏற்றி வழிப்பட மகாலட்சுமி தாயார் நம்முடைய பண பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்பது தான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -

பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்னவென்றால் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான். அதுவும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் ஏற்ற வேண்டும் என்று கூறுவார்கள். இது சரியான தகவல் தான் என்றாலும் தினமும் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

சந்தி வேளை என்று கூறக்கூடிய மாலை நேரத்தில் மகாலட்சுமி தாயாருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்ற வேண்டும். அந்த தீபத்திற்கு உபயோகப்படுத்தப்படும் திரியானது பஞ்சு திரியாகவும் மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அதாவது மஞ்சள் தூளில் பன்னீரை ஊற்றி பஞ்சுத் திரியை அதில் நனைத்து காயவைத்து பிறகு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

மங்களகரமான மஞ்சள் திரியால் மகாலட்சுமி தாயாருக்கு தீபம் ஏற்ற வேண்டும். அப்படியே ஏற்றும்பொழுது அந்த தாயார் நம்முடைய வாழ்க்கையில் பல மங்களங்களை ஏற்படுத்துவாள் என்பதுதான் இதன் பொருள். இந்த தீபத்தை மேலும் சிறப்பு மிகுந்த தீபமாக மாற்றுவதற்கு என்ன செய்யலாம்.

தினமும் மாலை நேரத்தில் பஞ்சு திரி போட்டு இரண்டு தீபம் ஏற்றுவதற்கு பதிலாக அஷ்ட லட்சுமிகளுக்கு எட்டு தீபம் என்று ஏற்றி வழிபட வேண்டும். மகாலட்சுமி தாயாரின் மந்திரங்களையோ அல்லது பாடல்களையோ மனதார பாடி வழிபட வேண்டும். அதுவும் இந்த வழிபாட்டை குடும்பத்தில் இருக்கும் மகாலட்சுமி ஆன பெண்கள் மேற்கொண்டால் அதனுடைய பலனை அவர்கள் விரைவிலேயே அடைவார்கள்.

- Advertisement -

இவ்வாறு தினமும் மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில் மகாலட்சுமி தாயாருக்கோ அல்லது அஷ்டலட்சுமி தாயருக்கோ தீபம் ஏற்றி வழிபட, மகாலட்சுமி தாயார் நம்முடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார். பண பிரச்சனை தீர்ந்தால் பண வரவு அதிகரிக்கும். அதனால் நமக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினைகளும் தீரும்.

இதையும் படிக்கலாமே: புத்திர பாக்கியம் அருளும் அர்ச்சனையும் தானமும்

இந்த எளிமையான தீப வழிபாட்டை நாம் நம் இல்லத்தில் ஏற்றி பண பிரச்சனை என்ற இருளை விலகச் செய்து பிரகாசமான வாழ்க்கையை நிம்மதியுடன் வாழ்வோம்

- Advertisement -