கடன் தீர காமாட்சி விளக்கு வழிபாடு

kamatchi amman panam vilaku
- Advertisement -

இன்று பலருடைய வாழ்க்கையில் நிம்மதியை தொலைத்து துன்பப்படுவதற்கு காரணம் இந்த கடன் தான். நாமும் கடன் தொல்லை தீர எத்தனையோ கோவில் பூஜை பரிகாரம் என செய்வோம். அதற்கேற்ற உழைப்பையும் முயற்சியும் கூட செய்வோம். அப்படி செய்தும் கூட கடன் அடையவில்லை என்று புலம்புவோர் பலர் இருக்கிறார்கள். கடனால் துன்பப்படுவது நம்முடைய வினை என்று சொன்னாலும், அதற்காக அப்படியே துன்பப்பட்டுக் கொண்டே இருக்க முடியாது அல்லவா.

இப்படி கடனால் துன்பப்படுபவர்கள் வாரம் ஒரு முறை வீட்டில் காமாட்சி அம்மனை நினைத்து இந்த முறையில் காமாட்சி விளக்கை ஏற்றினால் போதும். கடன் தீர்ந்து நிம்மதியாக வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது எந்த நாளில் ஏற்றுவது என்பது பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர காமாட்சி விளக்கு வழிபாடு

இந்த தீபம் ஏற்ற காமாட்சி விளக்கு மட்டும் தான் தேவை. சிலர் வீட்டில் அஷ்டலட்சுமி விளக்கு கஜலட்சுமி விளக்கு போன்றவற்றை வைத்து வழிபாடு செய்வார்கள். கடன் தீர ஏற்றப்படும் இந்த தீபத்திற்கு காமாட்சி அம்மன் விளக்கு தான் தேவை. இதை தவிர்த்து மற்ற விளக்கை பயன்படுத்தக் கூடாது. இத்துடன் காமாட்சி அம்மன் புகைப்படம் இருந்தால் மிகவும் நல்லது இல்லை என்றாலும் பரவாயில்லை.

இந்த தீபத்தை ஏற்றி வழிபட உங்களுக்கு உகந்த ஏதேனும் ஒரு நாளில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் இந்த வழிபாடு செய்ய வேண்டும். ஆகையால் உங்கள் ஏற்ற ஒரு நாளை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த தீபம் ஏற்ற காமாட்சி அம்மன் விளக்கு ஒரு சிறிய தட்டு இரண்டு மண் அகல் கள் அந்த அகல் வைப்பதற்கு இரண்டு சிறிய தட்டுகள் தேவை

- Advertisement -

இந்த தீபத்தை பூஜை அறையிலே நீங்கள் ஏற்றலாம். ஒரு வேளை பூஜை அறையில் இதை செய்ய வசதி பத்தாது என்று நினைப்பவர்கள் வரவேற்பு அறையிலும் வைத்து செய்யலாம். இதற்கு காமாட்சி அம்மன் விளக்கை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

ஒரு தட்டில் காமாட்சி அம்மன் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி வெள்ளெருக்கு திரி அல்லது தாமரைத் தண்டு இரண்டில் ஏதேனும் ஒன்றை போட்டு தீபம் ஏற்றுங்கள். அடுத்து காமாட்சி அம்மன் விளக்குக்கு பக்கத்தில் இரண்டு சிறிய தட்டு வைத்து அதில் மண் அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இத்துடன் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரையும் வைத்து விடுங்கள். இந்த தீபமானது கிழக்கு பார்த்து எரிய வேண்டும்.

- Advertisement -

ஓம் மங்களம் தருவாய் காமாட்சி தேவியே
என்ற இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். இதை சொல்லும் போது உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதே போல் இந்த தீப வழிபாட்டை 21 வாரங்கள் செய்ய வேண்டும். பெண்கள் மாதவிலக்கான நாட்களில் செய்ய கூடாது. இது தவறும் போது மற்ற நாளில் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வாழையடி வாழையாக வாழ வாழைப்பூ பரிகாரம்

ஏனெனில் வாரத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் இந்த தீப வழிபாட்டை செய்யலாம்.வழிபாடு முடிந்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரை நீங்கள் வீட்டில் உள்ளவர்கள் அருந்த வேண்டும். இந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்யும் போது கடன் விரைவில் அடையும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -