இன்று தேய்பிறை பஞ்சமி திதியில் வாராகி அன்னைக்கு இந்த தீபம் ஏற்றி வழிபட்டால் கேட்டவருக்கு கேட்ட வரத்தை அளிக்கும் அன்னை நீங்கள் கேட்காமல் உங்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்குவார்.

varahi-vilakku
- Advertisement -

சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிகவும் விசேஷமான நாள் இது அனைவரும் அறிந்ததே. இந்த பஞ்சமி திதியானது மாதத்தில் இரண்டு முறை வரும். ஒன்று வளர்பிறை பஞ்சமி திதி, மற்றொன்று தேய்பிறை பஞ்சமி திதி இந்த நாளில் இவர்களை வணங்கும் பொழுது நம்முடைய துன்பங்கள் அனைத்தும் தீரும் என்பதும் அனைவரும் அறிந்ததே. அப்படியான இந்த தேய்பிறை பஞ்சமி திதியில் வாராகி அன்னையை இந்த தீப வழிபாடு செய்வதன் மூலம் நாம் சகல நன்மைகளும் பெறலாம். அதை பற்றிய ஒரு தகவலை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

நினைத்தவை யாரும் நிறைவேற பஞ்சமி தீப வழிபாடு
பஞ்சமி திதியிலே இந்த பஞ்சமி விசேஷமாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் திதியானது ஒரு நாளில் தொடங்கி அடுத்த நாளில் முடியும். அதாவது ஒரு நாள் முழுவதிலும் ஒரே திதியாக இருக்காது இரண்டு நாட்கள் சேர்ந்தது போல வரும். ஆனால் இன்றைய தினம் இந்த பஞ்சமி திதியானது இன்றைய நாள் முழுவதும் நிறைந்து இருக்கிறது. ஆகையால் தான் இந்த தேய்பிறை பஞ்சமி திதி விசேஷமானதாக சொல்லப்படுகிறது. ஆகையால் இன்று ஏற்றப்படும் இந்த பஞ்சமி தீபம் மிகவும் அற்புதமான பலன்களை உங்களுக்குப் பெற்றுத் தரும்.

- Advertisement -

இந்த தீபத்தை இன்று மாலை 5 மணிக்கு மேல் ஏற்ற வேண்டும் பொதுவாக வாராகி அன்னை வழிபாடானது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நேரம் கடந்து செல்ல செல்ல வணங்கினால் அதற்கான அருள் அதிகமாகவே கிடைக்கும். அந்த வகையில் இந்த தீபத்தை நீங்கள் 5 மணி அளவில் ஏற்றினால் போதும். இந்த தீபத்தை நீங்கள் உங்கள் பூஜை அறையில் ஏற்றலாம் அல்லது சமையலறை வரவேற்புறை இந்த மூன்று இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏற்றலாம்.

இந்த தீபத்திற்கு நீங்கள் அகல் விளக்கு, குத்து விளக்கு, காமாட்சியம்மன் விளக்கு என எந்த விளக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். முதலில் விளக்கை தேய்த்து சுத்தப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்த பிறகு தீபம் ஏற்றும் இடத்தை சுற்றி ஐந்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். அதன் பிறகு வாராகி அம்மனுக்கு நெய்வேதியமாக ஏதேனும் ஒரு கிழங்கு வகையில் வைத்து விடுங்கள். இதை சமைத்து வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அப்படியே கூட வைக்கலாம்.

- Advertisement -

இப்போது இந்த விளக்கை வடக்கு திசையை பார்த்து எறிவது போல வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு நெய்வேத்தியத்தை வைத்து வெற்றிலை பார்த்து பழம் என அனைத்தையும் வைத்து பிறகு வாசனை மிக்க ஊதுபத்தி ஏற்றி விட்டு விளக்கிற்கு ஒரு செவ்வரளி பூவை அல்லது செம்பருத்தி பூவை வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த விளக்கின் முன்பாக அமர்ந்து ஓம் வாராகி தாயே போற்றி ஓம் என்ற இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 54 முறை சொல்லுங்கள்.

இதையும் படிக்காலமே: பூஜை செய்த பலனை முழுமையாக பெற வேண்டும் என்றால், நீங்கள் செய்யும் பூஜையில் அவசியம் இருக்க வேண்டிய 5 பொருட்கள் என்னென்ன?

இந்த மந்திர வழிபாட்டை சொல்லி முடித்த பிறகு விளக்கை மூன்று முறை சுற்றி வளம் வந்த பிறகு பூஜையை முடித்துக் கொள்ளுங்கள். இன்று மாலை இந்த பஞ்சமி தீபத்தை ஏற்றி இப்படி எளிமையான முறையில் வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையில் துன்பம் என்ற வார்த்தையே இல்லாமல் வாழக் கூடிய யோகத்தை வாராகி அன்னை தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்பிக்கையுடன் இந்த அன்னையை வணங்கி அவரின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்று இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -